திங்கள், 26 ஆகஸ்ட், 2013

A DIALOGUE WITH ANOTHER WRITER

His query:
ஒயிலான ஆட்டம் ஒயிலாட்டம் என எழுதுவது தவறா..

reproduced  >
நீங்கள் சொல்வது: மயில்கள் தெரியாத்தனமாக ஆடிவிட்டன. மண்ணோ சிறிதும் நனையவில்லை. ஒயிலாட்டம் ஆடுகிறவர்கள், மழை வருகிறதோ இல்லையோ அவர்கள் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஒரு புறம் மயில் மழை இவைகளுக்கும் மற்றொருபுறம் ஒயிலாட்டக்கார்களுக்கும் தொடர்பொன்றுமில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி வெள்ளம் கரைபுரண்டது, மழையே இல்லாதவேளையில்! உங்களுக்குக் கற்பனையில்தான் கரைபுரள்கிறது என்றாலும், நீங்கள் சொன்ன இயற்கைக் காட்சிகள், நடனங்களோடு என்ன பொருத்தம் என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.

மழை வராவிட்டலும் ஆடிய மயில்கள்போல, கரை புரளாவிட்டலும் நீங்கள் சொற்பிழை செய்திருந்தால் அது பொருத்தம் என்று சொல்லலாம். அதாவது நான் சொல்வது உவமை, மற்றும் காட்சிப் பொருத்தங்களை!

மேகங்கள் கலைந்துவிட்டதனால் ஏமாந்துவிட்ட மயில்போல, கற்பனை உருப்பெறாததனால் சொற்பிழையில் ஏமாந்துவிட்டேன் என்றால் இன்னும் பொருத்தம்.

பரத கண்டத்தில் (இந்தியாவில்) ஆடும் நடனம் எல்லாம் பரத நாட்டியம் என்று சொல்லலாம் என்றாலும், அது ஒரு தனிவகை நடனம் ஆகிவிட்டது. ஆகவே குச்சுபுடி, மணிபுரி என்றெல்லாம் வேறுபடுத்திச் சொல்கிறார்கள். அதுபோல்தான் ஒயிலாட்டம் என்பது.

Not that it is wrong, it may (not must) fail to carry the meaning you intended. Suppose you become very famous later and 500 years from, someone is trying to read and understand you. He might wrongly deduce that you are referring to the dance called oyilattam. You won't be there to explain it to him. Having conversed with you now, I know that you did not mean that dance. It then becomes the duty of every writer to be understood by others correctly. But you can keep the description there if you insist. After all, it is your poem. It is your inalienable right to do so.


பாபநாசம் சிவன் ஒரு பாடலை எழுதும்போது,"முகமது சந்திர பிம்பமோ" என்று எழுதி, தியாகராஜ பாகவதரிடம் கொடுத்தாராம். "முகமது" என்றுவருவதால் பாடமுடியாது என்று மறுத்ததால், பின் வதனமே சந்திர பிம்பமோ " என்று மாற்றிவிட்டாராம். தவறு என்பதற்காக அல்ல, தவறான பொருள்கொள்ளும்படி பிறரை இட்டுச் சென்றுவிடும் என்பதற்காகத்தான்! முகம் அது என்று பிரித்தால் சரியாகவே உள்ளது......

If you separate the words as oyil aattam - oyilaana aattam, it looks ok. Yours is a similar situation.

You like the usage,you can hold on to it.

கருத்துகள் இல்லை: