வெள்ளி, 31 ஜூலை, 2026

பிரசன்னம் அல்லது காட்சிதருதல்

 சான்னித்தியம் என்ற சமஸ்கிருத உருவாக்கத்தில்,  காட்சிதந்து நிற்றல் என்ற பொருளில் சொல்லமைகிறது.  சன்னம் ( பிரசன்னம்) என்பதற்கும் சான்னித்யம் என்பதற்கும் உள்ள நெருக்கத்தினை உணர்ந்துகொள்க. இவ்வேறுபாட்டில் உள்ள பொருளொற்றுமைகளையும் உணர்ந்துகொள்க. நீங்கள் 'வாரு'மே, மற்றும் 'வரு'க என்பவற்றில் வகரம் வாகாரம் எனச் சொல் மாறினும் பொருளொற்றுமை மாறவில்லை என்பதை அறிக.  அதே வருதல் என்பதுதான்.

அன் (அன்பு) என்ற  மூலமே,  அண் என்றும் (அண்மை என்பதில் ) மாறிவிடுகிறது. இனி,  அன் என்பது சன் என்று மாறுகிறது.  இதுபோலவே அண் என்பது சண் என்று மாறுகிறது.  இவை எல்லாம் அடுத்துநிற்றல் கருத்துத்தான். அன்பு என்பது ஒரு மனிதனை அடுத்துச்சென்று கொள்ளும் மனவுணர்வு.  அண்> அண்ணன் என்பவன் தம்பிக்கு அடுத்து மேல்நின்று பேணுவோன் அல்லது பராமரிப்பவன். காட்சிதருதல் என்பது காணத்தக்க வகையில் அடுத்துவருதல்.  அன்> சன் என்று திரியும். உள்ளமைந்த சன் தரும்  பிரசன்னம் இது என்பதை உணர்ந்துகொள்க.

இதிலிருந்து  அண்> ஆண் என்ற சொற்களைக் காண்போம்.  அண் என்பது மூல (அடி)ச்சொல். ஆண் என்பவன் பெண்ணை அடுத்துச் செல்பவன் அல்லது செல்லும் பிறப்பு  என்பது பொருளாகிறது.  ஆள் என்பதிலிருந்து ஆண் வந்தது என்று கொண்டு  ஆட்சி செய்வோன் எனப் பொருள்கொள்வது ஒக்குமா என்பது நன்கு ஆராயத்தக்கது. இது பொருண்மை பற்றியதாதலின், இதைப் பின்பு சிந்திக்கலாம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். எம் முடிவை இப்போது சொல்லவில்லை.

பிற என்பது பிர என்று வந்தது.  உண்டாதல் என்னும் கருத்து.  சன்னம் என்பது அடுத்து என்னும் கருத்தாதலின்,  பிற என்பது அதே பொருளில் வருவது பொருத்தம் என்று கொள்வதற்கில்லை. அடுத்து முன் தோன்றுதல் என்பதுதான் பிரசன்னம் என்பது ,    இஃது தெளிவாகின்றது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 27 ஜூலை, 2026

உக்கிராந்தி ( இறந்தவர்க்குத் தரும் பசுக்கொடை)

உக்கிராந்தி என்பது  உள்ளிருக்கும் ஆத்துமா  ( அகத்துமா>  ஆத்மா,  ஆன்மா )  உடலை விட்டு நீங்கிச் செல்வதைக் குறிக்கும் ஒரு சொல்..  ஆகவே ஆன்மாவின் வெளியேறுதலைக் குறிக்கிறது.  இதை இப்படிப் பிரித்தால் இதன் தமிழ்மூலம் தெளிவாகும்.

உக்கு + இற  --  ஆம் + தி.

உக்கு :  உட்கு > உள்+ கு.   இதன் பொருள், உள்ளே இருக்கும் ஆத்மா, 

இற :   இறந்தவாறு அல்லது இறந்த பின்.   இது இர என்று மாறிவிடும்.  வேறு சொல்லுள் ஒரு பகுதியாக வந்தால் அதன் வல்லின எழுத்து மாறிவிடும்.  ஆகவே ர வருவது பல சொற்களில் தெரிகிறது. பழைய சொல்லின் விளக்கங்களில் இதைக் குறிப்பிடும் இடங்களை யெல்லாம் படித்து, குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.இதன் மூலம் உக்கிர என்ற திரிபின் விளக்கம் தெளிவாகிறது.

ஆந்தி என்பது,   ஆம்+தி.   ஆம் என்பது ஆகும் என்பதன் தொகுப்பு.

தி என்பது விகுதி.  இதன் பொருள் திருப்பம் என்றும் சொல்ல, பொருந்துவதாகும்.

இது ஒரு சடங்கினைக் குறிக்க வழங்குகிறது.  இந்தச் சடங்கில் ஒரு பசுவைத் தானம் செய்வது குறிக்கப்படுகிறது.  ஆதலால் இறந்தவர்க்கு  ஒரு கொடை கிடைக்கிறது.  அவருடைய செல்லும் காலம், இடைஞ்சல்கள் இலாமல் நடைபெறுகிறது. இறந்தவர் சார்பில் இருப்பவர்களில் ஒருவரோ இருவரோ பெறுவர்.

ukkirānti from University of Madras "Tamil lexicon" (p. 386)


*உக்கிராந்தி ukkirānti , n. ut-krānti. Departure, usually of life or soul from the body; death; colloquially applied to the ceremony of giving away a cow uttering mantra with the prayer that a dying person may pass away without much suffering; மரணகாலத்திற் செய்யுங் கோதானம். அவர் உக்கிராந்தி வாங்கினார்.

''உக்கிராந்தி வாங்கும்/ கொடுக்கும் பாக்கியம் உடையவர்.  எல்லாம் இறைவன் அருள் '' என்று பேசிக்கொள்வதுண்டு.

இதை வேறு வகையிலும் விளக்கலாகும். 

இக்காலங்களில் பசுவாக இல்லாமல் பணமாகப் பெற்றுக்கொள்வர். 

மனிதவாழ்வைப் பசுமை செய்வதால் மாட்டுக்குப் பசு என்று பெயர். சிறப்பு, செல்வம், செவ்வி இவற்றைக் குறிப்பது இச்சொல் { பசுமை}. பசுவைப் பரிசாக்கியதற்கு இதுவே காரணம். செல்வத்தைப் பசை என்று குறிப்பதுமுண்டு.  பசு+ ஐ > பசை. பசு+ அம் > பாசம், முதனிலை நீண்டு விகுதி பெற்ற பெயர்ச்சொல் ( பசி முதலிய சொற்கள் இன்னொரு பதிவில் தருவோம்).

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்பு.

பகிர்வுரிமை 

சனி, 25 ஜூலை, 2026

சிதிலம் சிதலம்

 சிதிலம் என்பது காண்போம்.

சொற்கள்,  ஒவ்வொன்றும் ஒரு குடும்பம் போலவே இணைந்த சொற்களுடன் கூடிவாழ்கின்றன என்று சில  ஆய்வு நிபுணர்கள் குறித்துள்ளனர். இது ஒரு பேருண்மை என்று கூறலாம்.  சிது என்ற சொல்லே அடிச்சொல் ஆகும்.

சிது என்பதை உணர்ந்துகொள்ள,  சிறிது என்ற சொல்லைப் பார்க்கலாம்.  பெரிதாக இருந்த ஒன்று பிளந்தோ, உடைந்தோ, பிரிக்கப்பட்டோ,  சிறிது என்ற நிலையை அடைகிறது.  இதன்பின் சொல்லில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  சிறிது என்பது சிது என்று மாறுகிறது.  இது பேசுகிறவர்களின் நாவொலிப்பினால், அல்லது சொல்லமைப்பாளரின் திரிப்பினால் அல்லது வேறு காரணங்களால் ஏற்படலாம். சொல்லமைப்பாளர் அல்லது சொல் திரித்தோர், தங்கள் குறிப்புகளை விட்டுச்செல்லவில்லை. எழுதி வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்திருந்தாலும் அதிற் கவனம் செலுத்தி அதைப் பாதுகாத்து வைத்துத் திறனாய்வு செய்தோர் யாரையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.   அதனால் சிது என்பதை இடைக்குறை அல்லது சொல் தொகுப்பு என்ற இலக்கணியர் தந்த  விதிகளின் மூலமே அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.   

சிது என்பது மீண்டும் அடிச்சொல்லாகி,  சிதை என்று ஐவிகுதி பெற்று, மீண்டும் வினையாகின்றது.  சிதைத்தல் என்பது தொழிற்பெயர்.

சிதிலம் என்பதை அறிய,  சிதை என்பதை பின்னோக்கிச் சிது என்று கண்டு,  மூலமாக்கி,  இல் அம் அல்லது அல் அம் என்பனவற்றைச் சேர்த்தால்,  சிதிலம் என்ற சொல்லை உணர்ந்துகொள்ளலாம்.  சிதைவு என்பதே அதன் பொருள்.

ஒரு சிலை சிதிலம் அடைந்துள்ளது என்றால், முழுவதும் சிதைந்துவிடாமல், இடங்களில் -  அதாவது சிலையில் சில பாகங்களில் தேய்ந்தோ, சில்விட்டோ, பெயர்வுகளாலோ, மாறுதல்களாலோ  -  சிதைவுகள் உள்ளன என்று தெரிந்துகொள்கிறோம்.

சிதிலம் :  இல் என்பதற்குப் பொருள் சொன்னால்,  ஒரு சிற்றிடம் என்று கொள்ளவேண்டும். இப்படி ஆங்காங்கு மேற்பரப்பில் தேய்வுகளும் மாற்றங்களும் உள்ளன. இதைச் சிதிலம் என்னலாம்.  

இதுபோல சிறப்புப் பொருள் அமைப்புகள் மொழியில் வெற்றிபெற்றிருக்க வில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சிதிலம் என்பது சிதலம் என்றும் வழங்கும் என்பதறிக.  சிது என்ற அடி, சிது> சீத்து> சீத்தை எனவும் ஆகும்.  சிதிதலம் என்பதும் உளது.  இது பழைய நூல்களில் வரும் சொல். பொருள் அதுவே.  ஸிதிலம் என்று எழுதப்படுவதும் உண்டு.  

தமிழில் உரைநடை இல்லாத காலமும் இருந்தது.  எழுதி வைத்தவை எல்லாம் பாடல்களே ஆகும். பின்னர் பாடல்கள் கடினமாகி அவற்றுக்குப் பொருளறிய வேண்டி வந்த காலையில், உரை எழுதும் பழக்கம் வந்தது. சிறந்த உரையாசிரியர்கள் உருவாகினார்கள்.  அடியார்க்குநல்லார், சேனாவரையர், நச்சினார்க்கினியர் எனப்பலர்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை