வெள்ளி, 18 ஏப்ரல், 2025

திராவிடம்

 இந்துச் சொல்லைப் பற்றிச் சிந்தித்த காலை முன்னே நாம் சில கூறி இருக்கிறோம். பஞ்ச திராவிடம் பற்றியும் சில சொன்னோம்.

இவை இருக்கட்டும்.

ப ஞ் ச. திராவிடமும் பற்றி யாரும் அக்கறைப் பட வில்லை.

Conic projection. என்று சொல்லப்பட்ட தென்னாட்டு  நிலப்பரப்பு  உண்மையாகவே ஒரு தி ற ப்பான  முக்கடலையும் அப்பால் ஒரு மா கடலையும் கொண்ட  புவிப் பகுதியே. திற ந்த இந்த இடம்    "தி  ற இடம"ல்லாது வேறு  என்ன ?  இடப்பெயர் இனப்பெயர் அல்ல. (அன்று)

தமிழன் வைத்த  வாய் மொழிப் பெயர் தான்.  ஒப்புக் கொள்ள  முடியவில்லை.  இதை மறைக்க முன்னரே முயற்சிகள் மேற்கொண்டிருப்பர்.  அது பலித்ததோ இல்லையோ,  அது  பிராமணர்களுக்குரிய பெயரும்  ஆனது   இப்போது அந்தச் சொல்லுக்குப்  பல சொந்தங்கள்.

திறந்த கடல் முப்புறமும் கொண்ட திறவிடம்.  திரவிடம் திராவிடம் என்று எப்படியானாலும் உண்மையை மட்டும் மறைக்கமுடியவில்லை.

இடம் என்ற இறுதிச் சொல் இன்னும் உயிரோட்டத்துடன் மிளிர்கிறது.

 அது இடப்பெயர்தான்.   சம்ஸ்கிருதம்  தமிழெல்லாம்  இந்தியத் தாயின் மொழிகள்தாம்,  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.












புதன், 16 ஏப்ரல், 2025

புதல்வன்

 மகன், மகள், மக்கள் என்று ஒருமை (ஆண்)- ஒருமை (பெண்) -  பன்மை ( இரு பாலாரும்) என இருந்தாலும் புதல்வன்,  புதல்வி ,புதல்வர் என ஆண்பால் பெண் பால் பலர்பாலாகவே இந்த அமைவுகள் வருகின்ற -ன.  குழந்தை, பிள்ளை மதலை, மழலை முதலிய சொற்கள் ஐ விகுதி பெற்று  முடிகின்றன. பொதுப்பால் என்ற பகுப்பினை நூல்களில் காணா விட்டாலும் இவை வெவ்வேறு கூ றுபாடுகள் உடைய பொதுச்சொற்கள் தாம். இவற்றிடையே பகவொற்றுமை  ( uniformity) காணலாம். 

புதிய வரவாக வந்த குழந்தைதான் புதல் வன் அல்லது புதல்வி எனப்பட்டது. புதுமை குறிக்க புது என்ற சொல் இருப்பதைக் கண்டுகொள்க.  

அல் எனல் அது  இடம் எனலே.

இன்னொரு முறையில் கூறுவதானால் இல் எ ன்பது இந்த இடம்,  அல் என்பது அந்த இடம். இடம் இது என்பது இல். இடம் அது என்பது  அல். இடம் முன் என்பது உல்.

ஆகவே இல் என்பது இது என்று சுருக்கிக் கூ  றலாம். இல் - வீடு மற்  றொரு  பொருள் 

புதல்வன் என்ற சொல்லை புது + அல் +வு + அன் என்று பிரிக்க வேண்டும். புது அல் வு இ என்பதும் இதனாலே பெறப்படும். புதல்வர் - அர் விகுதி. இதன்  அடி "புது" என்பதறிந்தீர்.

புகு என்னும் சொல்லும் புது என்பதுடன் தொடர்புடையதே என்க. புதியன புகுதல் என்னும் வழக்கினையும் காண்க

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்ந்துகொள்க. வணக்கம்.


வெள்ளி, 11 ஏப்ரல், 2025

சொல்லாக்கத்தில் கருத்தொற்றுமை - வயது, அகவை - Tamil, Sanskrit

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள ஆக்கப்பட்ட சொற்களில் உருவாக்கல் நிலையில் காணப்படும் கருத்தொற்றுமைகளை ஆங்காங்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.  சிலவேளைகளில்  வெளிப்படையாகக் காரணம் கூறவில்லை. வேறுசில இடங்களில் கூறியுள்ளோம்.  இப்போது இன்னொரு முறை இங்குக் கூறுகிறோம்.  சொல்லாக்கத்தில் கருத்தொற்றுமை என்று ஒரு நூலே எழுதலாம்.  எழுதிவைத்ததைப் படித்து அறிவு பெறுதலோ அல்லது எதிர்த்து நிற்றலோ  பலரும் ஈடுபடாத ஒரு துறையாகும். சில கட்டங்களிலும் பொருட்களிலும் எதிர்த்து நிற்றல் முதலியவை,  தாமே உருவாகி வந்தவை அல்ல. 

பரப்புடரைகளினால்  கவரப்பட்டவர்கள்  உள்ளுந்துலால  மேற்கொண்ட நடவடிக்கைகளே  ஆகும்.

அகப்பட்டுக்கொள்வது  அகவை.  வயப்பட்டு மூப்பதும் மாய்வதும் வயது.   அகவை என்பதில் வை என்பதும் விகுதி.  அகம் என்பது  உள்ளமைவு குறிக்கும் பகுதி  அல்லது பகவு ஆகும். இந்த இரு கருத்துக்களிலும் ஒற்றுமை காணப்படுகிறேதே! இவ்வாறு ஒன்றிரண்டு ஒன்ற்றுமைகள் மட்டும் இருந்திருந்தால் இரண்டு மொழிகளும் ஒரு களத்தில் தோன்றியவை என்று கூறமுடியாது.  ஆனால் பலகாலும் இவ்வொறறுமை மேலெழுந்து வருகிறது என்றால் இரண்டு மொழிகளும் ஒரு களத்தினரால் உருவாக்கப்பட்டவை என்று முடிபு கொள்ளுதல் எளிதானதே.

நீங்கள் இங்குக் கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்தாக்கி, இதை ( ஒற்றுமைக் காட்சியை )  வெளிக்கொண்டு வந்து மக்கள் பயனுறச் செய்யலாம்.

வயப்பட்டவன் அவன் வயப்பட்ட இடத்தில் அகப்பட்டுக் கொள்கிறான்.  வயது அப்படிப்பட்டதுதான்.  காலக் கடப்பில் நாம் மாட்டிக்கொள்கிறோம்.  வயதை வென்றவனும்  அகவையை வென்றவனும் எவனும் உலகில் இல்லை. எல்லோரும் நேரம் வரும்போது காலமாகி மறைந்துவிடுகிறார்கள்.

அகவையும் வயதும் எல்லா உயிரற்றவைக்கும் உயிருள்ளவைக்கும் பொதுவான கருத்துக்களன் ஆகும்

நம் முடிபு  தமிழும் சமஸ்கிருதமும் ஒரு களத்தில் தோன்றியவை ஆகும்.

இதனை ஒரு மொழிநூற் கருத்தாகவும் சொன்னூல் ஆய்வாகவும் முன் வைக்கிறோம்.

அறிக மகி

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.