வெள்ளி, 29 மார்ச், 2024

சந்திப்பு சொல்

 சந்திப்பு  என்ற சொல்லை சிற்றூர் மக்களே முதன்முதல் உருவாக்கிப் பயன்படுத்தியவர்கள். இதன்பின் அது தமிழ் இல்லமொழியிலும் தொழுகை மொழியிலும் இடம் பிடித்தது. இதற்கு நேரான தமிழ்ச்சொல்: எதிர்கொள்தல்.

கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்

எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்

------என்பது ஒளவையின் பாடல் வரிகள்

தண்டுதல் என்ற சொல்லின் பொருளின்படி இருவர் சந்தித்தாலும், ஒருவர் மற்றவரிடம் பணம் கொடுத்தார். பணம் கைமாறாத  வேளையில் அது தண்டுதலாகாது என்று நினைத்தனர். தண்டுதல் என்பது கைதொடுதல் என்று பொருள்பட்டாலும்,  எதிர்மறையில் மட்டுமே  "தொடாமல்" என்ற பொருளில் "தண்டாமல்" என்று வரும் என்றனர். இது ஒரு வகையில் வியப்புக்குரிய விளக்கமே.

மரங்கள் செடிகள் முதலியவை அடர்ந்திருந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த சிறுவர்கள் விளையடச் செல்கையில் வேர் குச்சி முதலிய தடைகள் தண்டாமல் செல்க என்று தாய்மார்கள் சொல்லியனுப்புவது வழக்கம்.  தண்டுதலின் எதிர்மறைதான் அவர்களின் கவனத்துக்குரியதாயிற்று. நான்போய் ஊர்த் தலையாரியைத் தண்டிக்கொண்டு வருகிறேன் என்றும் சொல்லியிருக்கக் கூடும். சந்திப்பு என்ற சொல்லுண்மையின் காரணமாக, தண்டிவருதல் என்பது நாளடையில் வழக்கிறந்தது.  


தட்டுதல் என்பது தொடுதல் கருத்துடைய  சொல்லாதலின், அதன் மெல்வடிவமாகிய தண்டுதல் என்பதும் சந்தித்தல் பொருளைத் தரவேண்டும்.  ஆனால் அது "வசூலித்தல்" என்று பொருள்படுகிறது. காலக்கழிவில் பொருண்மையில் வழுத் தோன்றிற்று என்று தெரிகிறது.

இனிச் சந்திப்பு என்ற சொல்லுக்கு வருவோம். 

ஒருவன் இன்னொருவனை எதிர்கொள்வதே சந்திப்பு. எனினும் இச்சொல்லின் பொருள்  முன் அறிந்தோனை எதிர்கொள்வதையே குறித்தது.  அறியாதவர்களைத் தெருவில் காண்பதும் சந்திப்பு எனப்பட்டாலும் இவை பெரும்பாலும் காண்பதே அன்றி ஒரு சந்திப்பு ஆகாது. தெருவில் ஒருவனைத் தாண்டிப் போவது சந்திப்பு ஆகாது.

தன் - சன்.  ( தகர சகர மாற்றீடு )

திரும்பு > திருப்பு > திப்பு.  இடைக்குறை.

சன் + திப்பு >  சந்திப்பு  ஆயிற்று.

தான் திரும்பக் காண்தல் என்பது பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

 


வியாழன், 28 மார்ச், 2024

வாச்சியம் திரிபு

"பொண்ணு மாப்பிளையை வாத்துங்க"  என்பது பண்டை நாட்களில் பாட்டிமார் வாய்மொழியில் வருவது.  வாழ்த்தியம் என்ற சொல்லே வாத்தியம் ஆனது.  இயம் என்பது இசைக்கருவிகள் வாசிக்கும் குழுவினரைக் குறிக்கும் சொல்.

வாழ்த்து >  வாத்து  இது பேச்சுத்தமிழ் வினைச்சொல்.  இஃது ஓர் இடைக்குறை.

வாழ்த்தியம் >  வாத்தியம்.  இது இடைக்குறை.

தகரம் சகரமாய்த் திரியும். இடுகைகளில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. காண்க.

 வாத்தியம் > வாச்சியம்

இது தனி > சனி என்பதுபோலும் திரிபுதான்.  

வாசிச்ச இயம்  என்பது பேச்சுமொழித் தொடர்.

இது மருவி வாச்சியம் ஆயிற்று எனினும் ஏற்கலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

புதன், 27 மார்ச், 2024

கூட்டம், கோத்திரம். கொத்து சொல்லமைப்புகள்

 இந்தச் சொற்களின் பிறப்பு  பற்று இப்போது உங்களுடன் ஆய்வுசெய்வோம்.

இவற்றுள் மிக்க எளிதான வழியில் அறியத்தக்க சொல் கோத்திரம் என்பதுவே.

கோத்தல் என்ற தொழிற்பெயரின் தொடர்பு காட்டும் கோ என்பது  ஓர் ஏவல் வினை.

ஓரு வினை எச்சத்திலிருந்து முழுச்சொல்லை அமைத்துக்காட்டும் மரபு தமிழ் இலக்கணியரிடம் அருகியே உள்ளது எனினும்,  மற்ற மொழியாளரிடம் பெருவழக்கு  ஆகும்..  எடுத்துக்காட்டு: பாலிமொழி,  சங்கதம் முதலியவை.

கோத்து  என்பது வினை எச்சம்.

கோத்து + இரு+ அம் >  கோத்திரம்   ஆகிவிடும்.

இவ்வாறின்றி, தமிழ் முறைப்படி,  

கோத்தல் வினை:

கோ + திரம் >  கோத்திரம்.

திரம் என்பது திறம் என்ற முழுச்சொல்லின் இடையினப்பட்ட திரிபாகவோ, இரு+ அம்     என்பனவுடன்  துகரம் முன்னின்ற இணைப்பாகவோ கருதலாம். இப்படிக் கருதுவதால் அடிப்படை வேறுபாடு எதுவும் எழுவதில்லை. தமிழ்மொழியின் நெடிய வரலாற்றில் ரகர றகர வேறுபாடுகள் பின் முளைத்தவை என்பதே மொழிநூற் கருத்து ஆகும்,  எவ்வாறாயினும் திரம் திறம் என்பவை விகுதிகளே.

சமஸ்கிருதம் என்பது உள்ளூர்ப் பூசை மொழியே என்பதால்  கோத்திரம் என்பது தமிழென்றாலும் அன்றென்றாலும் ஒன்றே  ஆகும்.  சொல் வேறுபடுதல் இல்லை.  ஆய்வும் திசை பிறழ்வதில்லை. திரு அம்> திரம்  எனினும் அதுவே.

கொத்து என்பது பெரும்பாலும் மலர் போலும் அஃறிணைப் பொருட்களுக்கும் பயன்பெறவு உள்ள சொல்லாதலின்,  அதனைக் கோத்திரத்திற்கும் பயன்படுத்துவதில் தடை  எதுவும் இல்லை.  கொத்து என்பதும் கோத்திரம் என்றாகும்.

கொத்து + இரு + அம் >  கொத்திரம் >  கோத்திரம்.

இது வெறும் நீட்டலே.  கொ> கோ:    முதனிலை நீண்டு திரிதல்.

வா என்ற பொருள் அடிப்படையிலெழும் சொல்லில் கூட  வந்தான், வாருங்கள் என்று நெடிலும் குறிலுமாகிய நீட்டக் குறுக்கங்கள் வருகின்றன.   கோத்திரம் என்பது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிடுகிறது.

கூடு என்ற வினைச்சொல்லுக்கு நிகராக  துகர இறுதியை உடையதாய் கூகாரத்தில் தொடங்கு  சொல் ஒன்று இல்லை.  ஆனால்  கூதல் என்ற சொல் கூது என்ற அடியில் தோன்றியதே  ஆகும்.   அடிச்சொல் என்ற முறையில் கூடு> கூது என்பன இணையானவை ஆதலினாலே இவை பொருளொற்றுமை உடையவை..  இதன் பொருள் சேர்தல் என்பதே. கடுங்குளிரில் குழந்தையைத் தாய் இறுக அணைத்துக்கொள்வது ஒருவகைக் கூடுதலே.  ஈருயிர்கள் மிக்க நெருக்கமாகி ஒன்றன் வெப்பத்தை மற்றொன்று  மேற்கொள்ளுதல். குளிர் என்பது கூடுவதை விளைவிக்கிறது/ இதை உருவாக்குவது கூதல் அதாவது குளிர். இவ்வகையில் கூடுதலை வெகுவாகப் புரிவிப்பது கூதலே  ஆகும். கூத்திலும் கூடுதல் உள்ளது ஆதலின்,  கூத்து என்ற சொல் கூடுதல் அல்லது சேர்தல் குறிக்கும் சொல்லே.  பனிக்குளிர் காய்ச்சற் குளிர் இரண்டும் வேறுபடுத்தி அறியப்படுவது. ஊறு எனற்பாலவற்றுள் வேறானவை.

கூட்டம் என்பது ஒன்றாதல் ஆதலின்  கோத்திரம்  கொத்து என்பவற்றுக்குச் சமமாமவை ஆகும்.

குளிர் என்ற  சொல்லும் குள்> குட்டை என்று பிறப்பிப்பதே.  குளிர் உயிரினங்களை உடலைக் குறுக்கிக்கொள்ளச் செய்வதாகும்.  இவற்றில் தமிழ்ச் சொற்கள் தங்கள் பொருள் வளத்தையும் சொல்லாக்க உயர்வையும் காட்டுவனவாம்,

கோத்திரம் என்பது Gகோத்திரம் என்ற ஒலியால் வேறுபடுத்தல்  வெறும் மேற்பூச்சுத்தான்.  கொத்து இரு அம் என்பதன் நீட்சிதான். காட்சிப் படுத்தத் தக்க வேறுபாடு ஒன்றுமில்லை. வேறுவகையில் விளம்புதல் வேண்டின் மனிதக்கொத்து என்னலாம். 

கூட்டு>  கூத்து> கோத்து > கோத்திரம் எனினுமது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 28032024  2226