வெள்ளி, 3 செப்டம்பர், 2021

மறதியும் ஓர் இன்பம், ஓர் ஆற்றல்

 மறதியும்ஓர்   ஆற்றலாமோ

புகழ்தல் நன்றோ  ----  அதனை

இறுதியான கருத்தென்று

கோடல் உண்டோ.  ..... 1

கோடல் -  கொள்ளுதல்.


இனிமைதரும் பண்புமதோ

மகிழ்வேன் எண்ணி  ---  என்றன்

தனிமைதரும் துன்பினையே

தாண்டற் காகும்.   ..... 2

துன்பினை -  துன்பத்தினை

தாண்டற்கு -  வெற்றிகொள்வதற்கு. 

ஆகும் -  பயன்படும்.


உலகமைதி உடைந்துவரும்

நேரம் இன்றே  ----  துன்பம்

உற்றுமடி கின்றவர்பால்

உள்ளம் செல்லும்.  .....    3

பால் - பக்கம்


பலமடியாய்த் துயர்படுவோர்

மீளும் ஆக்கம்  ----  இந்த

பரந்துபடு உலகுபெற

இறைப  ணிந்தோம்.  ....   4

மடி  -  அடுக்கு(கள்)

பரந்துபடு -  பரந்த,  விரிந்த

இறை -  கடவுள்.


ஒருவருக்கு ஒன்று எழுதிக்கொடுப்பதாகக் கூறியிருந்தேன். மறந்துவிட்டேன். அன்றைத் தினம்

அவரும் அவர் அம்மாவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது. 

அதனால்  அவரும் வரவில்லை.  நான் மறந்துவிட்டதற்காக வருந்திய அவ்வேளையில் அவர் 

அதை  ஓர் ஆற்றல்  ( பவர் )  என்று புகழ்ந்தார்.  நமக்கெல்லாம் அத்தகைய ஆற்றல் இருக்கின்றது 

என்பதற்காக மகிழவேண்டும் என்றார்.    கோவிட் காரணமாக வீட்டிலே அடைபட்டுக் 

கிடப்பதால்  இப்படிப் புகழ்ந்து என் துன்பத்தை விலக்குகிறீரோ என்று வினவினேன்.  அதை 

மறந்த நேரத்தில் எதை நினைத்துக்கொண்டிருந்தேன் என்பதை மூன்றாவது பாடல் வரிகள் 

விளக்குகின்றன.  இறுதி வரிகள் நம் வேண்டுதல் பற்றியது ஆகும்.  


கவிதை நன்றாயின் வாசித்து மகிழ்க.

1640 04082021

சில தட்டச்சுப் பிறழ்வுகள்  திருத்தம் பெற்றன.




நோய்நுண்மிக்கு எதிராக ஒன்றுபடுவோம்.

 சிங்கைப் பெருநகரிலிருந்து:


போன எமச்சளிநோய் ---  இங்கு 

புகுந்தது மீண்டுவந்தே,

மானை நிகர்த்த உலா ---- வந்தோர்

மாண்டது துன்பமையா.


என்று தொலையுமிதே ---  சனியன்

என்று மனம்பதைத்தோம்,

நன்று செயவெளியில் ---  போக

நடுங்கி அடங்கிவிட்டோம்.


மன்றுகளிற்  கூடிப்  ---  பேசி

மனித உறவுமிக,

இன்று விழைவதுவோ ---  இல்லா

ஏழையர் நாமாகினோம்.


கன்றுநல்  ஆபிரிந்தே --- படுதுயர்

கனவிலும் வேண்டாததே,

ஒன்று  படநின்றே---  இத்துயர்

ஒழித்திட ஓடிவாரீர்.  


சிவமாலையின் கவிதை.


பொருள்:

எமச்சளிநோய் ---  கோவிட்  ( முடிமுகி,  மகுடமுகி)

துன்பமையோ என்று எழுதி, இப்போது துன்பமையா என்று

வந்துள்ளது.  இதுவே நன்றாக இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.

சனியன் என்றது இந்த நோயை.

செய -  செய்ய. (தொகுத்தல் விகாரம்).

மன்று - மக்கள் கூடுமிடங்கள்.

மனித உறவு -  படக்காட்சி அது காட்டப்படும் கூடங்களில் பார்த்தல்,

விளையாhttps://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_3.htmlட்டுத் திடல்களில் கூடல்,  உணவகங்களில் கூடல் முதலிய

தொடர்புக் கூடுகைகள்.

ஏழையர் -  எளியவர்கள்.

கன்றுநல் ஆ  -  பசுவைக் கன்று (பிரிதல்),  இறத்தல் முதலியவை.


சனி ( சனியன்  ஆண்பால் விகுதிபெற்றது  மக்கள் பயன்பாட்டில்). இதுபற்றிய இடுகை உங்கள் வாசிப்புக்கு:

தனி -  சனி  திரிபு.

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_3.html

https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_24.html

தங்கு > சங்கம் திரிபு

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_46.html



கோவிட் நிலவரம்

 [Sent by Gov.sg – 3 Sep]. 

சிங்கப்பூர்

As of 2 Sep 12pm, there are 32 persons infected with COVID-19 who are seriously ill. 27 require oxygen supplementation and 5 are in ICU. 


As of 2 Sep 12pm, there are 187 new locally transmitted cases.


80% of our total population have completed the full regimen*.

இது தடுப்பூசி இடுதலைக் குறிக்கிறது.  


_*Received both doses or 1 dose for recovered individuals_  (தடுப்பூசி )


go.gov.sg/moh020921