சனி, 14 நவம்பர், 2020

சமாதானம் (தாம் தானாதல்)

 நம் நேயர்கள் தங்களின் இனிய தீபாவளி அல்லது தீபஓளிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ச்சியில் இருந்துகொண் டிருப்பீரகள். இவ்வேளை எங்கும் நல்லமைதி நிலவும் என்பது எம் எதிர்பார்ப்பாகும்.  இவ்வேளையில் சாமாதானம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

தாம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தன்மைச் சொல். தான் என்பதே ஒருமையாகும். ஒருமைக்கு மறுபெயர் ஒற்றுமை. ஒற்றுமை இருந்தால் சாமாதானம்.

இன்னொரு வகையில் நோக்கினால் தாம் என்பது தம்மைச் சுட்டிக்கொள்ளும் இருகுழுவினரையும் (அல்லது அவ்வெண்ணிக்கையின் மேற்பட்டோரையும்)  தான் என்பது ஒருகுழுவினரையும் சுட்டுவதாய் எடுத்துக்கொள்ளுதலும் ஆகும்.

சமாதானம் நிலவுவதாயின் இருவர் ஒருவராக வேண்டும்.

உடலளவில் இருவர் ஒருவராக முடியாது.  ஆனால் கலாய்த்துக்கொண்டிருக்கும் இருமனங்கள்  அல்லது இருநிலைப் பன்மனங்களும் ஒன்றுபடவேண்டும். இதையே சமாதானம் என்ற சொல் காட்டுகிறது.

தம் எனற்பாலது சம் என்று திரிவது தம் > சம் மோனைத் திரிபு  ஆம்.

தம் + ஆ+ தான் + அம்

சம் + ஆ + தான் + அம்

சமாதானம் ஆகிறது.

தம் என்பது சம்  ஆனது.  ஆ என்பது ஆகுதல் குறிக்கும்,  தான் - ஒருமையாதற் குறிப்பு. அம் அமைவு குறிக்கும் விகுதி.

இப்படி இச்சொல்லைப் புனைந்துள்ளனர்.

அறிக மகிழ்க.


௷ய்ப்பு பின்



வெள்ளி, 13 நவம்பர், 2020

இருபிறப்பிக்குச் சங்கத உதாரணம்

 இருபிறப்பிச் சொல்லுக்கு சமஸ்கிருதத்திலிருந்து எடுத்துக்காட்டு.

 ததா+கத்த> ததாகத்த -  வருகை தந்தவர்

ததா+ அகத்தா > ததாகத்த - போய்மறைந்துவிட்டவர்.

இரண்டு சொற்களும்  முடிபொருமை  கொண்டன.

இதில் இன்னொரு சிறப்பு யாதெனின் இச்சொற்கள் முரண்பொருளன

ஆகுமென்பது.

 


இதை மனனம் செய்துகொள்ளுங்கள்

யானைகளைக் காப்பாற்றிய கவனமுள்ள ஓட்டுநர்

 https://twitter.com/i/status/1326377941463408640