By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 8 செப்டம்பர், 2018
மேகம்
பெட்டாமெதாசோன் வேலரெட் என்ற சொல்லைப் போல மேகம் என்ற சொல்லில் அறிந்து உயர்த்திக் கருதத்தக்க அமைப்புகள் ஏதுமில்லை. மிக்க எளிதாகவே அமைந்த சொல்லே அது.
வானத்தில் மேலே இருப்பது மேகம். முதலில் மேல் என்ற சொல்லின் இறுதி லகர ஒற்று ஒழிந்தது. இலக்கண ஆசிரியர் லகர ஒற்றுக் கெட்டது என்பார்கள். கெட்டது என்றால் இல்லாததானது. இப்போது மே மட்டுமே உள்ளது. அதில் கு அம் ஆகிய சிறு துண்டுச் சொற்களைத் தந்து நீட்டினால்
மேகம் ஆகிவிடும்.
கு என்பது சேர்விடம் குறிக்கும் சிறு சொல். சிங்கப்பூருக்கு, மலாக்காவிற்கு என்பவற்றில் அது உருபாக வந்து சேருமிடம் குறிக்கும். மே கு அம் என்பதில் "மேலுக்கு" என்பது பொருள் கொண்டாலும் பொருளற்ற இணைப்பு என்று கொண்டாலும் அதனால் கூறத்தக்க விளைவுகள் எவையுமில்லை. நீங்கள் எப்படி வைத்துக்கொண்டாலும் நல்லதே. அம் என்பது அமைவு என்பதன் அடிச்சொல். இங்கு விகுதியாக வருகிறது. அதற்குப் பொருளிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஏன் இப்படிச் சொல்கிறோம் என்றால், சொல்லமைப்பில் அமைந்தபின் உள்ள மொத்தப்பொருள் அல்லது இறுதி அடைவே நாம் சொல்லைப் பயன்படுத்த உதவுவது ஆகும். நாற்காலி என்பதில் நாலு என்றும் கால் என்றும் பிரித்தறிவது சொல்லாய்வுக்குப் பயன்படலாம்; அதில் உட்காருவோனுக்குத் தேவையில்லை. முக்கால்கள் உள்ளதை நாற்காலி என்று குறித்துவிட்டாலும் பெரும் விளைவுகள் ஒன்றுமில்லை.
வானிற் பறக்கும் மேகத்தைக் கையால் பிடிப்பதைவிட இச்சொல்லை அறிந்துகொள்ளுதல் மிக்க எளிதாம்.
மேகம் என்பது சிற்றூர்களில் பேச்சில் அறியப்படும் சொல் ஆகும். மேலே உள்ளது என்பதுதான் பொருள். மேலே உள்ளவெல்லாம் மேகமாகிவிடுமா? நாலு கால் உள்ளதெல்லாம் நாற்காலியா? ஆகவே இது பகுதி காரணமும் பகுதி பயன்பாடும் உய்த்த காரண இடுகுறிப் பெயர். நிலாவும் சூரியனும் மேலேதான் உள்ளன! அவை மேகமல்ல. சொல்லமைப்பில் முழுமையும் காரணங்களைத் தழுவிச் சொற்கள் அமைதல் குறைவு. வீட்டில் பேசும் பணிப்பெண்ணைப் பேச்சாளர் என்பதில்லை. ஆனால் அவளும் பேசுகிறாள். ஆகவே "பேச்சாளர்" என்பதுகூட முழுமையும் காரணம் தழுவியது என்று கூறுவதற்கில்லை.
காரண காரியங்களை ஆராயப்போனால் சூரியன் உதிப்பதுமில்லை; அழுந்தமிழ்வதுமில்லை. பூமியே சுற்றிக்கொண்டு போகிறது.
அஸ்தமிப்பது என்பது அழுந்தமிழ்வது ஆகும். அழுந்து > அஸ்து; அமிழ் > அமி.
அஸ்தமி. நிலத்துக்குள் அல்லது கடலுக்குள் அழுந்துவது; அப்புறம் அமிழ்வது. இதைப் பார்த்துக் கோபமுற்றோர் அழித்துவிட்டனர். ஏறத்தாழ ஈராயிரத்துக்கு மேலான இடுகைகள் -- இவை பழையகால நெகிழ்தட்டுக்களில் (ப்ளோப்பி டிஸ்க்) உள்ளன. மேற்கொண்டு அவற்றை வெளியிடவில்லை, மீளா இருளில் சில மூழ்கியிருக்கலாம்.
சங்கப் புலவர் சிலர் பாடியவாக ஒன்றிரண்டு பாடல்களே கிடைக்கின்றன. அவர்கள் நல்லிசைப் புலவர்கள். ( அப்படியென்றால் பெரும்பெரும் புலவன்மார்.) வாழ்க்கை முழுமைக்கும் இரண்டு பாட்டுத்தாம் பாடினரோ? பல்லாயிரம் இருக்கும். நம் கைக்கு எட்டியவை : 2.
எட்டியவையே கிட்டியவை: அவை கொண்டு தமிழ் போற்றுவோம்.
வெள்ளி, 7 செப்டம்பர், 2018
மோகன் வரையாது வழங்கினவர்.
Click here for Mohan Swami's photo: http://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_85.html
மோகன் நினைப்பினிலே முன்வந்து நிற்பதெல்லாம்
ஆகும் பொழுதெல்லாம் அன்புடனே --- தாகம்
பசியின்றிப் பாரோர் மகிழப்பா டிக்கை
மிசைக்காசு தந்துவத்த லாம்.
இதன் பொருள்: மோகன் நினைப்பினிலே - மோகன் அவர்களுடைய எண்ணங்களில்; முன் வந்து நிற்பதெல்லாம் - முதலாக மேம்பட்டுத் தோன்றுவதெல்லாம்; ஆகும் பொழுதெல்லாம் - தேர்வு செய்யப்படும் நல்ல நேரத்திலே; அன்புடனே - நேயமான நெஞ்சமுடன்; பாரோர் - இன மத வேறுபாடின்றி எம்மனிதரும்; தாகம் பசி இன்றி மகிழ - நீர் வேட்கையும் உணவை வேண்டுதலும் ஆகியவற்றுக்காகத் துன்பமடையாமல், பாடி - நல்ல இசையின் அரவணப்புடன்; கை மிசை - கைகளில்; காசு தந்து - அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தந்து; உவத்தல் ஆம் - தம் மனம் மகிழ்வு கொள்ளுதல் ஆகும்.
இவர் முதியோர் இல்லங்கள் பலவற்றுக்கு வரையாது வழங்கியவர்.
இவர் படம் முன் இடுகையில் உள்ளது.
இறைவன் இவருக்கும் இவர் மனையாளுக்கும் செல்வங்களை வாரி
வழங்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
என்றார் வள்ளுவனார்.
ஊரில் உள்ள மக்களெல்லாரும் குடிப்பதற்கு நீர் எடுக்கும் குளம் அல்லது ஏரி ஊருணி எனப்படும். ஊர் உண்ணும் குளம் ஊர்+ உண்+ இ; அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தால் எப்படி இருக்கும்? ஊரார் மகிழ்வுடன் நீரருந்தித் தாகம் தவிக்காமல் இருப்பர், மகிழ்வர் அல்லரோ? அறிவாளி ஒருவருக்குப் பணம் கிடைப்பது அது போன்றதே. அதனால் பலருடைய துன்பங்களும் தீரும். ஒரு தற்குறியிடத்தில் பணம் இருந்தால் அது நன்மக்களுக்கும் முதியோருக்கும் சிறாருக்கும் கல்வி உணவு உடை உறையுள் முதலியவற்றுக்குப் பயன்படாது. மோகன் உலகு அவாம் பேரறிவுடையார்: இப்பாரிலுள்ளோர் விரும்பும் சிறந்த அறிவு மிக்கவர் என்று பொருள். திரு வென்பது செல்வம்.
ஒரு சமயம் கோவில் அன்னதானத்துக்கு ஓர் ஆயிரம் பற்றாக்குறை ஏற்பட்டது, கேள்விப்பட்டவுடன் அந்தக் காசைக் கொடுத்து உதவினார்.
வண்டி வசதி இல்லாத அன்பர்களுக்கு தம் உந்து வண்டியில் பூசை பாட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வார்.
இன்று சமைக்கவில்லை என்று மட்டும் சொல்லக்கூடாது, இவரிடம். உடனே சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும்.
இத்தகைய பரந்த உள்ளம் பாரிக்கு இருந்தது. பாரி என்ற சொல்லே பரந்த என்ற சொல்லுடன் தொடர்புடையது. பர > பார். முதனிலை நீண்டு பெயரானது. இவரும் அத்தகைய அன்னதானப் பிரபு ஆவார்.
நான் இந்த உடல் அன்று என்ற வேதக் கருத்தை மிகவும் போற்றுவார் இவர்.
இவருடைய துணைவியார் ரஜினி அம்மையார் இவர் போன்ற தங்கமான குணத்தவர்.
இவர்கள் எல்லா நலமும் பெற்று மகிழ வாழ்த்துவோம்.
மோகன் நினைப்பினிலே முன்வந்து நிற்பதெல்லாம்
ஆகும் பொழுதெல்லாம் அன்புடனே --- தாகம்
பசியின்றிப் பாரோர் மகிழப்பா டிக்கை
மிசைக்காசு தந்துவத்த லாம்.
இதன் பொருள்: மோகன் நினைப்பினிலே - மோகன் அவர்களுடைய எண்ணங்களில்; முன் வந்து நிற்பதெல்லாம் - முதலாக மேம்பட்டுத் தோன்றுவதெல்லாம்; ஆகும் பொழுதெல்லாம் - தேர்வு செய்யப்படும் நல்ல நேரத்திலே; அன்புடனே - நேயமான நெஞ்சமுடன்; பாரோர் - இன மத வேறுபாடின்றி எம்மனிதரும்; தாகம் பசி இன்றி மகிழ - நீர் வேட்கையும் உணவை வேண்டுதலும் ஆகியவற்றுக்காகத் துன்பமடையாமல், பாடி - நல்ல இசையின் அரவணப்புடன்; கை மிசை - கைகளில்; காசு தந்து - அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தந்து; உவத்தல் ஆம் - தம் மனம் மகிழ்வு கொள்ளுதல் ஆகும்.
இவர் முதியோர் இல்லங்கள் பலவற்றுக்கு வரையாது வழங்கியவர்.
இவர் படம் முன் இடுகையில் உள்ளது.
இறைவன் இவருக்கும் இவர் மனையாளுக்கும் செல்வங்களை வாரி
வழங்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
என்றார் வள்ளுவனார்.
ஊரில் உள்ள மக்களெல்லாரும் குடிப்பதற்கு நீர் எடுக்கும் குளம் அல்லது ஏரி ஊருணி எனப்படும். ஊர் உண்ணும் குளம் ஊர்+ உண்+ இ; அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தால் எப்படி இருக்கும்? ஊரார் மகிழ்வுடன் நீரருந்தித் தாகம் தவிக்காமல் இருப்பர், மகிழ்வர் அல்லரோ? அறிவாளி ஒருவருக்குப் பணம் கிடைப்பது அது போன்றதே. அதனால் பலருடைய துன்பங்களும் தீரும். ஒரு தற்குறியிடத்தில் பணம் இருந்தால் அது நன்மக்களுக்கும் முதியோருக்கும் சிறாருக்கும் கல்வி உணவு உடை உறையுள் முதலியவற்றுக்குப் பயன்படாது. மோகன் உலகு அவாம் பேரறிவுடையார்: இப்பாரிலுள்ளோர் விரும்பும் சிறந்த அறிவு மிக்கவர் என்று பொருள். திரு வென்பது செல்வம்.
ஒரு சமயம் கோவில் அன்னதானத்துக்கு ஓர் ஆயிரம் பற்றாக்குறை ஏற்பட்டது, கேள்விப்பட்டவுடன் அந்தக் காசைக் கொடுத்து உதவினார்.
வண்டி வசதி இல்லாத அன்பர்களுக்கு தம் உந்து வண்டியில் பூசை பாட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வார்.
இன்று சமைக்கவில்லை என்று மட்டும் சொல்லக்கூடாது, இவரிடம். உடனே சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும்.
இத்தகைய பரந்த உள்ளம் பாரிக்கு இருந்தது. பாரி என்ற சொல்லே பரந்த என்ற சொல்லுடன் தொடர்புடையது. பர > பார். முதனிலை நீண்டு பெயரானது. இவரும் அத்தகைய அன்னதானப் பிரபு ஆவார்.
நான் இந்த உடல் அன்று என்ற வேதக் கருத்தை மிகவும் போற்றுவார் இவர்.
இவருடைய துணைவியார் ரஜினி அம்மையார் இவர் போன்ற தங்கமான குணத்தவர்.
இவர்கள் எல்லா நலமும் பெற்று மகிழ வாழ்த்துவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
