ஞாயிறு, 26 மார்ச், 2017

Female baby names : KuRaL derived

அவிர்மதி (குறள் 1117)
தூவிதா ( குறள் 1120)
பணிமொழி (குறள் 1121)
நுதல்யா (> திருநுதல் குறள் 1123)
அமர்க்கண்ணி (குறள் 1125)
ஏமிதா ( ஏமம் - குறள் 1131)
மலரன்னா (மலர்+அன்னை, மலர், குறள் 1142) Also like a malar
ஒப்பிடுக: தம் +அன்னை, தமன்னை, தமன்னா)
மலர்மதி
அரிதாமணி (குறள் 1153) அரிதாகும் மணி என்பதன் சுருக்கம்.
உய்வினி (>உய்வு) குறள்1174
பசந்தி ( குறள்1188) பச்சை நிறம் தோற்றம்
தந்தவள்
இது வசந்தி என்பதனோடு மயங்கி நிற்கும் பெயர்.

நனவிதா ( குறள்1219)

மாலிகா (மாலை, குறள்1221)
இது பழைய பெயர் போலாகிவிட்டது.

போதிதா (போது = அரும்பு) குறள்1227

குழலினி. குழலிகா. குறள் 1228

மாயா குறள் 1230 இது பழைய பெயர்

சனி, 25 மார்ச், 2017

முதலீட்டால் முன்மைபெற்று உயர்க


A poem on international relations....


நாடுகளே நீங்களே ஒன்றுபடுங்கள்
கோடுயரப் பேட்டைகளில் தொழில்நிறுவுங்கள்!
ஒத்துழைப்பு மிக்குறவே பாடுபடுங்கள்!
சொத்துமிகு முன்முயற்சிக்கு ஈடுகொடுங்கள்.
அணுக்கமதே  ஆல்போல் இணக்கவிரிப்பால்
சுணக்கமறச் சூழ்பயனாய்ச் சுரக்கவிடுங்கள்.
தொழில்தொடங்கு நோக்குடனே வானவூர்தி
எழில்பயணம் எல்லையின்றி மேனிலையாக!
பங்காளித் தன்மையாண்டும் பரக்கவேண்டும்;
தங்காமல் எப்பணியும் சிறக்கவேண்டும்!
குமுகங்கள் புதுமையிலே குதூகலிக்க‌
குழந்தைகளும் மிகுந்தமகிழ் வதில்சொலிக்க!
புத்தாக்கம் புதுமுனைப்புப் பரிமாற்றங்கள்
பூத்துவந்தால் நாடுபெறும் உருமாற்றங்கள்!
பண்டுவந்த உறக்கத்தைக் களைந்துவிட்டுத்
தொண்டுசெய்து தூயமனம் விளைந்துவாழ்க!
சிதலரித்த சீர்கேட்டுக் கொள்கைநீங்கி
முதலீட்டால் முன்மைபெற்று உயர்க நீரே.    


அருஞ் சொற்பொருள் :
கோடு  =  வரம்பு .  தேசத்தின் செழிப்பு வரம்பு.
குமுகம்  = சமுதாயம்.
பேட்டை - தொழில் பேட்டை 
பரக்க  -  விரிவு அடைய .
குதூகலிக்க  -  மகிழ்வில் துள்ள 
சிதல்  =  கரையான் .
முன்மை  = முன் நிற்கும் தன்மை . 

அச்சமோ யாங்கள் அடையோமே.........!

பயங்கரவாதிகட்கு அரசியல் தலைவர்கள் கூற்று.

அச்சமோ யாங்கள் அடையோமே எங்களின்
மிச்ச உறுதியும் விஞ்சியே ‍‍~~~ உச்சமுறக்
கொட்டினீர் உங்கள் கொடூரத்தை; தாங்களாய்
விட்டாலும் விட்டிலோம் யாம்.

பயங்கரவாதத்தை நீங்கள் விட்டாலும் விடாவிட்டாலும் நாங்கள்
நாடுகாக்கும் எங்கள் உறுதியை விடமாட்டோம் என்பது பொருள்.
மிச்ச உறுதி =  குண்டுகள் வெடிக்கையில், முன் எடுத்த உறுதியில்
எஞ்சி இருந்த நடவடிக்கைகளைத் தொடரும் உறுதி;  விஞ்சி = மிகுதியாகி;  கொடூரம் = கொடுமை ஊர்ந்து மிகுதியான நிலை.
கொடு+ஊர்+அம் = கொடூரம். ஊர்தல் =மெல்லவே  மிக்குவரும் நிலை.
குமுகத்தில் கொடுமைச் சிந்தனைகள் மெல்ல உருவாகி, நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பெரியனவாகி இறுதியில் வெடிக்கின்றன. தாங்களாய் விட்டாலும் ‍ : செய்வதைச் செய்துவிட்டு, அகன்றுவிட்டாலும். விட்டிலோம் : விட்டு இலோம் (இல்லோம்) : விடமாட்டோம் என்பது.














ரு