செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கடிகாரம் ‍ கடித்துக்கொள்ளும் காரப்பொருளா?

கடிகாரமென்பது நல்ல பெயர்.  கொஞ்சம் காரமான சிற்றுண்டி கிடைத்து அதைக் கடித்துக்கொண்டு கொழுந்துநீர் tea அருந்துகிற போது, இது கடிகாரம் என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அதற்கு விளக்கமும் நீங்களே சொல்லுங்கள்.  இலக்கணப்படி பார்த்தால், கடி+ காரம் = கடிகாரம் ஆகிறது. வினைத்தொகை என்னும் வகையைச் சேர்ந்த சொல். கடிகாரம் என்பதில் வல்லெழுத்து  மிகாது. (x கடிக்காரம் x )

ஆனால் நாம் இதை மணிப்பொறி, மணிகாட்டி என்ற பொருளிலேயே வழங்குகிறோம். மொழிபெயர்ப்பு ஏடுகளில் மணிப்பொறி என்றாலும் இது இன்னும் பேச்சுவழக்கில் ஆட்சிபெற முயன்று முடித்த  சொல்லன்று.


இது யாழ்ப்பாணத் தமிழில் "கெடாரம்" என்று வழங்குகிறது. தமிழாசிரியர்கள் இதனைக் கடிகாரம்  என்ற சொல்லின் திரிபு என்று கருதுகிறார்கள். ஆரம் என்பது வளையம்போன்ற பொருளைக் குறிப்பதாலும்,  முன்காலத்து மணிப்பொறிகள் பெரும்பாலும் வட்டமான முகப்பு உடையனவாய் இருந்ததாலும், மணிக்கெடுவைத் தரும் இந்தக் கருவி கெடு+ ஆரம் = கெடாரம் என்று சொல்லப்பட்டது பொருத்தமாகத் தெரிகிறது.  கெடு என்பது காலமுடிவு, நேரமுடிவு என்று பொருள்படும் சொல்தான். பெரும்பாலும் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்குச்   சென்றடைந்த நிலையில்தான் நேரம் என்பதை நாம் உணருகிறோம்,. இன்னும் அரைமணி நேரத்தில் நான் வகுப்புக்குப் போகவேண்டும் என்றால், கெடார முள் அந்தக் குறிப்பிட்ட புள்ளியிற் சென்றடையும் எதிர்பார்ப்புக் கெடுவைத்தான்  குறிக்கிறோம்.

"கடிகாரமு" என்று தெலுங்கில்  வரும் இந்தக் கடிகாரச் சொல்,
சங்கதமொழியில் காடகா (ghaTaka) என்று வருகிறது.  .காரி (Ghari) என்றும் சொல்லப்படும்  கேட்டுவாசல், பேக்குப்பை என்று சிலர்
சிற்றூர்களிற் பேசுவதுபோல, இரண்டும் சேர்ந்து  காடகா+ காரி1 என்றாகி, கடிகாரம் என்று திரிந்தது எனின், சரியாக இருக்குமோ
என்பது கேள்வி.  ஒரு சொல்லை அமைக்கும்போது, தமிழ் மூலங்களைக் கொண்டே அமைத்தாலும், நாம் மொழிபெயர்க்கும் முதற்சொல்லோடு ஒலியொப்ப வடித்தால் ( as homonym or near-homonym)  இதுவும் தொல்லையாகிவிடுகிறதன்றோ.  பார்லிமென்ட்
எனற்பாலதை பாராளுமன்று என்பது இத்தகு வாதத்தை ஏற்படுத்தலாம். Government  என்பதை  கோவருமன்று என்று எழுதி,  கோ =அரசன் , அரசு,   அரு - அரிய , இணையற்ற ,  மன்று -  அவை'  -  அரசாளும்  அவை,  ஆகவே  அரசு ஆள்வோர்  என்றாலும்,  குழப்பம் நீடிக்கவே செய்யும்.- வாதிடும் சிலரால்.

இது முன் இலங்கையில் கெடாரம்  என்று வழங்கிப்    பின் கடிகாரம் என்று தமிழ் வாத்தியார்கள்  திருத்தியமைத்துச் சங்கத ஒலி யுடன் ஒப்புமை ஈட்டப்  பட்டதாய் இருக்கலாம் என்பதும் ஆய்வுக்குரியதே.

கெடாரம்  - மணிக்கெடு வைத்துக்கொள்ள  உதவும் ஒரு வளை முகப்புப் பொருள்.


----------------------------------------------------------------------

1.சங்கதத்தில்  இது நீர்க் கடிகாரம் என்று பொருள்படுவது,  குட நீரின் அளவு கொண்டு  மணி தெரிந்துகொள்வது.  கடகா என்பது குடம் என்ற தமிழின் திரிபு ஆகும். குறைவான உள்ளிடம் இருப்பதால் குடம் எனப்பட்டது. குடம் > கடம் > கடகை > கடகா.





.

Why not blog in Malay?

Why not blog in Malay? 
With over 220 million speakers around the world, and a rapidly growing audience, Malay content could be the next opportunity to get you new readers.,,,,,?

நல்ல  ஆலோசனைதான்!    சொல்லாய்வுகள்  சுறுசுறுப்பாக்குமா  அவர்களை?  என் வேலை  பன்மடங்காகிவிடுமே......


சிவஞான போதம் 9: " உராத்துனைத் தேர்."

ஊனக் கண் பாசம் உணராப்  பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை  தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே. ( சி  போதம்  9)


இங்கிருந்து  தொடர்கிறோம் :

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_17.html

துனை :

ஒன்பதாம் நூற்பாவில் இந்தத் தேர் குறிப்பிடப் படுகிறது. இந்தச் சொல்லில் வரும் துனை என்பது விரைவு என்னும் பொருளுடையது ஆகும்.

துனைதல் என்னும் வினைச்சொல் விரைதலென்னும் பொருட்டாதலின்
துனை என்னும் பகுதி மட்டும் நின்று பெயர்ச்சொல் ஆயினால் அது முதனிலைத்  தொழிற்பெயராய் விரைவு என்றே பொருள்தரும்.

 உராத்துனைத் தேர்

உரா  என்ற சொல்லின் பொருளை அறிவோம்.   இதன் உறவுச் சொற்களை ஆய்வதன் மூலம்  பொருளை எளிதில் கண்டுகொள்ளலாம்.  அதைப் பின்வருமாறு  விளக்கலாம் ,

உர்  என்பது அடிச்சொல் .   இது உள் என்னும் வினையாக்க விகுதி பெற்றுச்  சொல் அமைகின்றது .  உர்  உள் > உருள். உள் என்பது பெயராக்க விகுதியாகவும் வரும். -  வேறு சொற்களில்.

உரு >  உருள் > உருளுதல்.
உரு >  உருடை  ( வண்டிக்கு இன்னொரு சொல்).
உரு >  ஊர்  .  ஊர்தல். (வண்டியில் செல்லுதல்)
உரு >  ஊர் > ஊர்தி  =  வண்டி.( வானூர்தி,  வானவூர்தி  என்ற‌
வழக்குகள் காண்க.)
உரு >  உரா  (  உருளுதல்.)

நில்>. நிலா.  கல் >கலா, பல் > பலா (சுளை பல உடையது )  வில்>  விலா (ஓர்  எலும்பு ) என்பன நோக்குக.

உரா என்பது உருளுதல்; துனை என்பது விரைவு.  உராத்துனைத் தேர் எனின் விரைந்து உருளும் தேர்.

தேர்த்து ‍ ‍=   "தேர் போல்வது"  என்னும் பொருட்டு

சக்கரங்களின் விரைவு உருட்சியினால் பாய்ந்தோடி மறைகின்ற  தேர்.

இதனால் உராத்துனை என்பது விளக்கப்பட்டது.
பின்பு மறுபார்வை செய்யப்படும் .

Hope your reading is more pleasant after editing and insertion of references.