திங்கள், 14 மார்ச், 2016

நை, நே நோ

நைந்து போவது என்றால் நசுங்கி  நார் நாராக வெளிப்பட்டு உருக்குலைந்து இல்ல்லாமலே  போய்விடுவது.

பொருள் நைந்துவிடின் முன் உரு இருக்காது.

ஆகவே  நை என்பதற்கு  வட இந்திய மொழிகளிலும் இல்லை என்ற பொருள் ஏற்பட்டது .

நை, நே  நோ என்றெல்லாம்  வெள்ளையன் மொழியிலும் புகுந்தது.

நை - நைதல் என்பதற்கு  இல்லை என்பது  வடிகட்டிய அர்த்தமே  அன்றி  கருவிலமைந்த திருவார்ந்த   பொருள் அன்று.

நை என்பதிலிருந்து நசி  போந்தது,

நசி  +  அம்  =  நாசம்   முதனிலை நீண்டு விகுதி பெற்றது.

நசி  >  நசித்தல்.

stay tuned to me for more.

written this before but it is missing. will restore.

puthalvar meaning one's children


புதல்வர்

புதல்வர் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் மக்கள் என்பது. புதல்வர் தமிழன்று என்பர் தமிழாசான்மார்.

புதல்வர் என்பதன் அடிச்சொல் புது என்பதே. முன் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்போரை நோக்க, புதுவரவுகளாகிய புதல்வர் புதியவர்களே ஆவர். இச்சொல்லை இப்படிப் பிரிக்கலாம்.

புது +  அல் + வ்+ அர்  =  புதல்வர்

அல் என்பது பல சொற்களில் விகுதியாய்ப் பயன்படுவதே. மத்தியக் கிழக்கு மொழிகளில் இது சொல்லின் முன் நிற்கும்.  உதாரணம்:   அல் கைதா.  அல் காதிப்.  அல் கிதாப்.  (al is like  "the" in English)

தமிழில்  பெரும்பாலும் தொழிற்பெயர்  விகுதியாய் வரும்.  காட்டாக: காணல், ஆகல்.

புதல்வர்  என்பதற்கு  நேராக,  தாய் தந்தையரைக் குறிக்கப்  "பழல்வர்"  என்ற சொல் அமையவில்லை.

---------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : -  அல் சொல்லீ்று  ஆங்கிலத்திலும் உள்ளது:  committal, acquittal. நம் விகுதிகள்  அல்லது  சொல்லீறுகள் பல 

ஞாயிறு, 13 மார்ச், 2016

உடல் தணுப்பினால்....சிலேத்துமம்

சிலேத்துமம் என்ற சொல்லை ஆராய்வோம்.

இதன் அழகை நன்கு சுவைத்தபின் சில ஆண்டுகட்குமுன் நான் ஓர் ஆய்வு எழுதியிருந்தேன்,  அந்த வலைப்பூ மூடப்பட்டுவிட்டது. அதில் எழுதியவை அழிவுற்றனவாய்  என்னிடம் இருந்த பதிவுகளும் மீட்டெடுக்க முடியா நிலையில் உள.  அவற்றை மீட்க மிகப் பழைய சவள்வட்டு  ஓடிகள் (Floppy Drive)  தேவைப்படுகின்றன.

இனிச் சுருக்கமாகச் சொல்லைப் பார்க்கலாம்.

சளி  >   ஸ்லே.

தும்மல் .  தும்மம்.   >துமம்


ஆக, சளியும் தும்மலும்  வருநிலைதாம்   மொத்தத்தில்  சிலேத்துமம் ஆகும்

மருத்துவ நூல்களில் உடல் தணுப்பினால் வரும் நோய்கள் கூறப்படுகின்றன என்ப.  சிலேத்துமம் என்பது இதனைக் குறிப்பது.

இச்சொல் மலாய் மொழியில் ஸெலஸெம  என்று வழங்குகிறது. சளியைக் குறிக்கும்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய  மூன்று.    (திருக்குறள் ).