செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அந்நியன் ஒரு மறுபார்வை

அந்நியன்  என்ற  சொல்லுக்கு முன் விளக்கம் எழுதியுள்ளோம்.  அதை இங்கு சுருங்கச் சொல்வதானால்      அ  என்பது தமிழில் ஒரு சுட்டு,   அங்கு என்று படர்க்கையை  அது சுட்டும்,   ஆனால்  அ  என்பது  அன்மை என்றும் பொருள் படுவது,   அன்மையாவது  அல்லாமை;  அல்லாதது.  அல்லாதன;  அல்லாதவன்  என விரியும் . இதுவன்று   அவை அல்ல   என வரும்.  அல் திணை >  அஃறிணை ;  அல்வழி '  அன்மொழி என்பவை பழஞ்சொற்கள்

அல்  தன்  லகர ஒற்றை இழந்து  அ என்றும் நிற்கும்.   மங்கலம் >  அமங்கலம் போல.  அதாவது  மங்கலம் அல்லாதது.

அல்  + நீ  + அன் =  அன்னியன்    (  நீ  அல்லாதவன் ;   அடுத்தவன்;  பிறன் )
இங்கு  நீ  என்பது  நி  என்று   குறுகியது.  நீ  சிலவிடத்து   நி  என்று  குறுகும்.   நின்  என்ற சொல்லில்  அது குறுகியது காண்க.   நின்  புகழ்  =  உன் புகழ்.

அல்  என்பது   அ  என்றும் குறையும்  என்பதால்     அ + நீ + அன் =  அந்நியன்
என்றும்   ஆகும்.  நகரம் இரட்டித்தது. மற்றும் முன் கூறியதுபோல   நீ  குறிலாகிற்று.

நீ  என்பது நீக்கப் பொருளது என்பதை முன் இடுகையில் விளக்கியுள்ளேன்,
http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_13.html
அதையும் மறுபார்வை செய்துகொள்ளுங்கள்.   நிவாரணம் என்ற சொல்லில்
நீ  குறுகியுள்ளது.   நீ +  வரு+   அணம்  >  நிவாரணம் .    நீங்கி வருதல்.   நீக்க நிலை  அண்மி வருதல் என்று விரிக்கலாம் எனினும்   ஒன்றே.     இந்தச்     சொல் எங்கும் பரவிப் புகழ் பெற்ற  சொல்.  நீ . என்பதே நீங்குதல்

அடுத்து  அயல் என்பது காண்போம்.

குறிப்பு:
பழனி  என்பதில்  பழம் நீ  என்பது  நி என்று  குறுகிற்று என்ப


செடியிற் பூத்ததொரு சிறுபூ‍‍‍‍

ஒரு வலைத்தளத்தைப்  புகழ்ந்து எழுதியது,

செடியிற்  பூத்ததொரு சிறுபூ‍‍‍‍----  அதன்
செழுமைஎன் சொல்வது
வளமையில்  வெல்வது
அடியில் இருந்து நுனி வரையில் ‍‍--- பார்க்கின்
அதுவொரு தேனடை
அழகாம்  தமிழ் நடை,

பழுத்து  விளைந்தபல  கருத்து ----  அது
பயன்மிகத் தந்தது
பளிங்கென்  றொளிர்ந்தது
தழுக்கும் தமிழுணர்வும் உலகில்  ---- பெறும்
தகுந்த  ஊக்கமினி
தகைத்தல் நீக்கும்கனி  .



சொற்குப்  பொருள் காட்டும்   ஆடி ---- தமிழ்
சொந்தம்  எனவு ணர்த்தும்
சோர்வில்  நிலைஇ  ணர்த்தும் ;
தெற்கில்  இலகு தமிழ்  உலகை ---  எந்தத்
திக்கும்  புகழ்ந்திடவே
தக்க   நிகழ்ந்திடவே.,                                            (செடியிற்)

தகைத்தல்  =  இளைத்தல், களைத்தல் .
தழுக்கும் -  செழிக்கும்.
சொற்கு  -  சொல்லுக்கு 
ஆடி  -  கண்ணாடி 
சோர்வில்  -  சோர்வு இலாத 
இணர்த்தும் -  நெருங்கச்  செய்யும் 
இலகு  - விளங்கும் 
தக்க   -  தக்கவை .



திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஆசாரி ஆனாலும் பூசாரி ஆனாலும் MURDER

ஆசாரி  ஆனாலும்  பூசாரி  ஆனாலும்
கூசாமல்  கொத்துவோர்  நிற்பரோ -----  நேசமொடு
நோய்ப்பட்டார்  என்றே  இரங்குவரோ சாவினது
வாய்ப்பட்டார்க் கியாமிரங்கு வோம் ,


யாப்பியல் குறிப்பு:
டார்க் கியாமி  இங்கு அலகு பெறாது.  பொதுவொரு நாலசையே என்பது காரிகை . நாலசை வருமென்பார் பண்டித நா.மு.வே . நாட்டார்.


ஒரு சீனக்கோவிலில் நடந்தது ஒரு கொலை   அது பற்றி:


https://sg.news.yahoo.com/case-of-dead-man-in-temple-reclassified-to-murder-094659836.html