சனி, 28 பிப்ரவரி, 2015

யுவானும் லின்னும் காதலர் (தொடர்ச்சி)

என்ன வேலையோ தெரியவில்லையே என்று மனம் குழம்பியவாரே லின்
தனது இருப்பிடம் சென்றாள். இரவு பதினொன்று வரை தொலைபேசியில் அழைத்துப் பார்த்தாள்  -  பதிலேதும் இல்லை .

அடுத்த நாள் , அதற்கடுத்த நாள் -  சந்திக்க முடியவில்லை. வேலை அதிகம் என்று தொலைபேசி அழைப்புகளை வைத்துவிட்டான்,  எதுவும் பேசாமல்.

இரண்டு வாரங்கள் சென்றன.  பல்கலையின்  நடைபாதையில் யுவான்  வந்துகொண்டிருந்தான்.  எதிரே சென்ற மாணவி மாலா அவனோடு பணிவன்பைப் பரிமாறிக்கொண்டாள்.  நான் தான்.

"லின் எங்கே ,  வரவில்லையா ?"  என்று நான்  கேட்க ,
" இல்லை, ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் " என்றான்.
"என்ன! ஐயோ பாவம் ! மனம் எப்படிக் கடினமான இடர்ப் பட்டிருக்கும் !
லின் நல்ல பெண் ஆயிற்றே.. என்ன நடந்தது என்று  நான் தெரிந்துகொள்வதில்  உனக்கு  மறுப்பு  எதுவும் இல்லையென்றால்,  சொல்லலாமே " என்றேன் .
" இன்று நாம்  சீனச் சைவ உணவகத்தில்  மாலை ஆறுக்குச் சந்திப்போம்.
நானும் உன் னுடன் உட்கார்ந்து சாப்பிட்டு  இரண்டு மூன்று மதங்கள் ஆகிவிட்டன.  தவறாமல் வா"  என்றான். விரைவாகப்  போகவேண்டிய வேலை ஏதோ  இருந்ததுபோலும்.
"சரி " என்று சொல்லிவிட்டு கையசைத்துவிட்டு நடந்துவிட்டேன்.

மாலை ஐந்து மணிக்கு  தொலைபேசி  மணி என்னை அழைத்தது. இன்னொரு மாணவி தனது வண்டியில் என்னை என் இருப்பிடத்திலிருந்து எடுத்துகொண்டு உணவகத்திற்குக் கொண்டு வருவாள் என்று யுவான் சொன்னான்.  ஏதோ பெரிய விடயம்போலும் என்று எண்ணிக்கொண்டு,  ஐந்து மணிக்கெல்லாம் புறப்பட்டு  அரை மணி நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தோம்.

சில நிமிடங்களில் யுவான் அங்கு வந்தான்.   சீனச் சைவ உணவு  உண்டோம்.
அவன் எதையும்  தொடங்காமல் இருக்கவே,  நான் லின்னையும் கொண்டு வந்திருக்கலாமே  என்றேன்.

"முற்றுப் புள்ளி என்று சொன்னேனே!  எப்போது வந்தாலும்  அங்கே சரியில்லை, இங்கே சரியில்லை,  அதில் அழுக்கு, இதில் அழுக்கு, இதைத் தேய்க்க வேண்டும், அதைக் கழுவ வேண்டும்  என்று  முணுமுணுத்துக் கொண்டே  இருப்பாள். அவற்றைக் கழுவிக்கொண்டும் தேய்த்துக்கொண்டு மிருப்பாள்.  கைகளைப் பல முறை கழுவுவாள். இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தால் இடர் ஒன்றுமில்லை. கூடுதலாக இருக்கிறது . இந்த வயதிலேயே இப்படி என்றால் கிழமாகிவிட்டால்,  எனக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் தலைவலி  ஆகிவிடும். இதனால் சண்டை வம்புகள் வரக்கூடும்.  இது ஒரு விதமான மன நோயின் அறிகுறி. அதனால், என் அறைக்கு இனி வராதே என்று சொல்லிவிட்டேன் . சந்திப்புகளையும் வெட்டிவிட்டு  இப்போது கொஞ்சம் அமைதியாய் இருக்கிறேன்.  " என்றான்.

என்னோடு வந்த பெண்ணும் சீன நங்கைதான்.  இவன் சொன்னதெல்லாம் அவளுக்கு முன்கூட்டியே தெரியுமோ என்னவோ!  அவள் என்னைக் கவனித்தாள்.  ஒன்றும் பேசவில்லை .  எனக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.  அப்போது என் முன்னிருந்த சூப் என்னும் காய்கறிகள் வெந்த நீரை மெதுவாக உறிஞ்சிக்கொண்டே  யுவனை உற்று நோக்கினேன்.

(தொடரும் )    



யுவானும் லின்னும், காதலர்



யுவான் நல்ல வாட்ட சாட்டமான சீன இளைஞன். யூக்கியூவில் மருத்துவத்துறையில் பயின்றுகொண்டிருந்தான். அதே பலகலைக் கழகத்தில் சட்டத்துறை மாணவி லின். இருவரும் படித்துமுடித்தபின் வேலையிலமர்ந்து திருமணம் செய்துகொள்ள  வேண்டிய வயதை அடையக் கொஞ்சகாலமே காத்திருக்க வேண்டியவர்கள்.

யுவானின் தந்தை மகன் தங்கிப் படிப்பதற்காக ஒரு வீட்டையே வாங்கிக் கொடுத்திருந்தான். இரண்டுமாடி வீடு. பல அறைகள். ஓர் அறையிலேதான் யுவான் குடியிருப்பு. மற்றவை எல்லாம் ஆளில்லாமல் கிடந்தபடியால்,  மாணவ மாணவிகள் சிலரிடம் அறைகளை வாடகைக்கு விட்டிருந்தான்.  

வீடு திரும்பும்போது லின் யுவானுடன் கூடவே வந்து,  சமையலறை முதலியவற்றைச் கூட்டிப் பெருக்கிக்  குப்பைகளைக்
களைந்துவிட்டு கொஞ்சம் தே நீர் அருந்துவாள். அப்புறம் சில வேளைகளில்  வாடகை வண்டியில் தன் இருப்பிடம் போய்விடுவாள். இல்லாவிட்டால் உடற்பயிற்சி என்று சொல்லிக்கொண்டு, நடந்தேகூடத்  
தன் இடத்திற்குப் போய்விடுவாள்.

அழகான ஆடவனுக்கு அழகிய காதலி என்று மற்ற மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். அதிலும் லின், பால் நிறத்து வெள்ளை யழகி.

அங்கு வந்து யுவானுக்கு  உதவிகள் செய்துவிட்டு அவன் அறையில்
கொஞ்ச நேரம் இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். வீடு எப்படியெல்லாம் அழகாக இருக்கவேண்டும் என்ற தன் கனவுகளையெல்லாம் அப்போது அவள் அவனிடம் விவரிப்பாள். யுவான் பெரும்பாலும் பதில் கூறாமல் கேட்டுக்கொண்டிருப்பான்.

காதலிக்க வேண்டும். அந்தச் சமயத்தில், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். போதுமான வசதிகளுடன் ஓர் இல்லம் அமைத்து குடும்பவாழ்க்கையில் ஈடுபடவேண்டும். பெற்றோர் பக்கத்திலிருந்து  வாழ்த்துரைகள் வழங்கி மகிழ்விக்கவேண்டும்.  பட்டங்கள் பெற்று வேலைக்கமர்ந்தவுடன் இதெல்லாம் இடர் ஏதுமின்றி நடைபெறவெண்டியவை

ஒரு நாள் தன் கனவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டு அவனறையில் அவன்முன் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் லின். கனவுகளா?  அவைகளெல்லாம் யுவானுக்கு எதிர்பார்ப்புகளாகவே இருந்தன. தேனீர்க் குவளையைக் கழுவி அடுக்கிவைப்பதில் என்ன கனவு இருக்கிறது? இது அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே பட்டது.  

"லின், உனக்குத் தேர்வு நெருங்கிவிட்டதல்லவா? உலகில் எது கிடைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. பாடங்களை மீண்டும் ஒரு முறை
படிக்கவேண்டுமே,,,,"

இப்படிச் சொல்லி லின்னை வீட்டுக்கு  விரைவாக அனுப்பி வைத்தான்
யுவான்.  அப்புறம் தன் பாடங்கள்....

ஒரு நாள் அவன் கேட்கச் சென்ற மருத்துவச் சொற்பொழிவுகள் முடியும் வரை லின் வெளியில் மண்டபத்தில் காத்திருந்தாள்.

பொழிவுமுடிந்து அவன் வந்தான். " லின்,  இன்று நீ வீட்டுக்குப்
போகிறாயா..... எனக்கு அவசர வேலை.... நான் வீடு போக நேரம் ஆகும்..." என்று மன்னிப்பு வேண்டியபடி யுவான் கிளம்பிவிட்டான்.

சந்திப்புகள் தொடர்ந்தால்தானே காதல் மொட்டு பூக்கும்?

தொடரும்









ஒரு நாள் தன் கனவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டு அவனறையில் அவன்முன் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் லின். கனவுகளா?  அவைகளெல்லாம் யுவானுக்கு எதிர்பார்ப்புகளாகவே இருந்தன. தேனீர்க் குவளையைக் கழுவி அடுக்கிவைப்பதில் என்ன கனவு இருக்கிறது? இது அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே பட்டது.  

"லின், உனக்குத் தேர்வு நெருங்கிவிட்டதல்லவா? உலகில் எது கிடைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. பாடங்களை மீண்டும் ஒரு முறை
படிக்கவேண்டுமே,,,,"

இப்படிச் சொல்லி லின்னை வீட்டுக்கு  விரைவாக அனுப்பி வைத்தான்
யுவான்.  அப்புறம் தன் பாடங்கள்....

ஒரு நாள் அவன் கேட்கச் சென்ற மருத்துவச் சொற்பொழிவுகள் முடியும் வரை லின் வெளியில் மண்டபத்தில் காத்திருந்தாள்.

பொழிவுமுடிந்து அவன் வந்தான். " லின்,  இன்று நீ வீட்டுக்குப்
போகிறாயா..... எனக்கு அவசர வேலை.... நான் வீடு போக நேரம் ஆகும்..." என்று மன்னிப்பு வேண்டியபடி யுவான் கிளம்பிவிட்டான்.

சந்திப்புகள் தொடர்ந்தால்தானே காதல் மொட்டு பூக்கும்?

தொடரும்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

Will the former DPM succeed obtaining pardon?

PKR supports pardon plea by Anwar’s family


http://www.themalaysianinsider.com/malaysia/article/pkr-supports-pardon-plea-by-anwars-family


There are many commentaries dealing with the incarceration of the former DPM. There are many views too. You can find one such view here, though one may hesitate to agree with everything said therein. The complaint was made by a private individual and the prosecutor conducted the case on a fiat. The government maintained a hands-off policy on the case.   


http://www.economist.com/news/asia/21643227-jailing-anwar-ibrahim-setback-whole-country-not-just-opposition-malaysias