வெள்ளி, 27 மார்ச், 2026

நிபந்தனை என்பது

 நி என்பது ஒரு சங்கத முன்னொட்டு என்றாலும்,  அது நில் என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறைச் சொல்தான்.  நில்- நி. அதாவது ஒரு நிகழ்வின் அல்லது எதிர்நோக்கும் நிகழ்வின் முன்நிற்பது.

பந்து என்பது பற்றி நிற்பது என்னும் பொருளது.  பல் + து.  இது தமிழ் முறைப்படி பற்று என்று வரும்.  ஆனால் சமஸ்கிருதச் சொல்லாக்கத்தில்  பல்> பன்  ஆகிறது.  இது எழுத்துத் திரிபு அமைப்பின்படி தமிழிலும் வரக்கூடியது.  பன்+து > பந்து என்று விளையாடும் பந்து என்ற சொல்லிலும் வருகிறது. இதற்குக் காரணம், பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பட்டன.  அவ்வாறு கட்டி அதை அடித்து விளையாடினர். தேய்வை ( ரப்பர்)ப்   பந்துபோல் அடித்தவுடன் அமுங்கி எழக்கூடிய திறன் இதற்குக் குறைவு.

சங்கதத்தில் இது  முன் பற்றி நிற்கும் நிலையைக் காட்டுகிறது.

அன், ஐ என்பன விகுதிகள்.

எனவே முன்னரே பற்றி நிற்குமாறு  சொல்லப்படும் அல்லது விதிக்கப்படும் ஒரு நிலைப்பாடு ஆகிறது.

இதில் என்ன தெரிந்துகொள்கிறோம் என்றால் தமிழிலும் சங்கதத்திலும் எத்தகு உறவு உடையவை சொற்கள் என்பது. இதை மிக்க நெருங்கிய உறவு என்னலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

புதன், 25 மார்ச், 2026

கற்சிதைவில் உண்டான சொற்சிதைவுகள்.--கச்சிதம் என்பது ஒன்று.

 கல் சிதைவு என்றால் கல் உடைந்து சிறியதாகி அல்லது தேய்ந்து  சிறியதாகி பிற கற்கருவிகளை உண்டாக்கிக்கொள்வது என்பதுதான்.  இது கற்காலத்திலிருந்த நம்மிடையே நடைபெற்று வருவதாக இருந்தாலும், எல்லாச் சொற்சிதைவுகளையும் ஒரே இடுகையில் கவனித்துவிட முடியாது. நேரம் என்பது தேவைப்படும்.

இத்தகைய சொற்களையெல்லாம் பொறுக்கிச் சேர்த்து ஒரு நூலாகவும் எழுதலாம். நீங்கள் எழுதி ஒரு சேவையைச் செய்யலாம்,

இந்தத் தஅலிப்பு எமக்கு பிடித்துப்போய்விட்ட படியால் இதை மாற்றாமல் வைத்துக்கொண்டு இங்கு சில் கூறுவேம்.

கல் உடைந்து சிறிதாகிவிட்டால், அதையும் சில கருவிகட்கோ பொருட்களுக்கோ பயன்படுத்த வைத்துக்கொள்ளலாம்.. கற்காலத்தில் இதைச் செய்து மகிழ்ந்திருப்பார்கள்.

இன்று கச்சிதம் என்ற சொல்லை மட்டும் கவனிப்போம்.

முதலில் சிதைவு என்ற சொல் கவனிப்போம்.  சில்> சிறு> சிறிது > சிது> சிதை> சிதைவு  என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு திரிகையில், சில முழுச்சொற்கள் போல் தோன்றும்.  சிது என்பது சிறிது என்பது நடுகெட்டு அல்லது இடைமறைந்து,  அவ்வாறு வந்தது.  அதிலிருந்து இன்னொரு சொல் வந்ததைக் கண்டுகொள்வீர்.

கல் சிதை>  கல் சிதம்>  கச்சிதம்.   ஒரு கல் சிதைந்து நன்றாக அமைந்துவிட்டால் மனிதன் அதை எடுத்து, கொஞ்சம் சரிசெய்து கருவியாக்கிக் கொளல். மிக்கச் சரியாக அமைந்தது என்று பொருள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


சனி, 21 மார்ச், 2026

சில் என்ற அடிச்சொல். சின் என்று மாறுகிறது.

 சில் என்ற அடிச்சொல், ஒன்றுக்கு மேற்பட்டன என்று பொருள்படும். மணல்போல் நுண்மையாக இல்லாமல், சற்று பெரியனவாய் ஆனால் ஒரு பெரிய துண்டிலிருந்து பிரிந்து விழுந்து இருப்பனவைக் குறிக்கும்.

லகர மெய்யீறு,  னகர மெய்யீறாகத் திரியும்.  சில்> சின்> சின்ன > சின்னது என்பன காண்க.

சின்>  சினை  ( விலங்குகளின் கரு முட்டைகள்). சினைகளில் முட்டைகள் பலவாய் இருக்கும்.  எ-டு: மீன் சினை.  பசு சினைப்பட்டிருந்தால், கன்றுபட்டிருக்கின்றது என்பர். (கருவுற்று என்ற எச்சவினை, மாடு முதலியவற்றிற்குச் சொல்லலாகாது.) 

சின்னம் என்பது.   சின் என்றது அடிச்சொல்.  அம் என்பது அமைப்பு என்பதைக் குறிக்கும் அடிச்சொல்,  இங்கு ஒரு விகுதியாக வருகிறது.  அம்> அமைப்பு என்ற பொருளைக் குறிக்கும்  தமிழ் அடிச்சொல்.  இந்த அம் வந்த ஒரு சொல்லை எடுத்துக்க்காட்ட வேண்டின், நிறம் என்பதைக் காட்டுக.  நிறு+ அம் >  நிறம். நிறு என்றால்  மாறிவிடாமல் நிற்கச் செய்வது என்பதே பொருள்.

நிறு > நிறுத்து.   ( வினைச்சொல் பகுதியில் உண்டாகிறது.  இங்கு து என்பது வினையாக்க விகுதி.).  பொரு> பொருத்து என்ற சொல்லில் பொரு என்பது வினையடியாகவும் து என்பது வினையாக்க விகுதியாகவும் இருத்தலை  உணர்ந்துகொள்வீர்   நிறு என்ற அடிச்சொல் எப்படி உண்டானது என்றால்,  நில்> நின்று ( வினை எச்சமாகி),  பின் ன் என்பது இடைக்குறைந்து, நிறு என்றாகி இங்கு மீண்டும் வினையாகிற்று.   நிறு என்பது முன்வடிவில் நின்று என்று எச்சமாகி இடைக்குறைந்து நிறு என்றானது என்பதைக் கூறுவதில்லை. இங்கு இதை விரிவாக விளக்கியுள்ளோம்.

நில் > நிறு என்று வந்ததுபோலுமே  சில் என்பதும் சிறு என்று திரியும். சில்லிடுதல் என்ற வினை, இடு என்ற துணைவினை பெற்று வரும். 

சில்லுதல், சின்னுதல் என்ற வினைவடிவங்கள் கிடைக்கவில்லை.

சிறுத்தல் என்ற வினை வழங்கியுள்ளது. சிறுப்பனவாதல் என்பதும் ஒக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


செவ்வாய், 17 மார்ச், 2026

நீர் என்பது

 நீரின் தன்மை  குளிர்ச்சியாகவும் இருக்கலாம்,  வெப்பமாகவும் இருக்கலாம்.  வெந்நீர்க் குளங்களும் இந்தோனேசியா, மலேசியா முதலிய நாடுகளில் காணலாம்.  பிற நாடுகளிலும் உள.

நீர் என்பது பள்ளங்களில்  தன்னை நிறுத்திக்கொள்ளும் தன்மை வாய்ந்தமையால் ஏற்பட்ட பெயர்.

நில்> நிறு> நிறுத்து.

நில்> நிறு > நீர்.. இதன் முதனிலையாகிய நி என்பது நீ என்று நீண்டுவிட்டால், று என்பது ஏலாமையால், ர் என்பதே வந்து ஈற்றில் நின்று பெயராகும்.  நீறு என்பது நீரின் வேறுபட்ட சாம்பற் பொருள்.

நில்> நிறு> நீறு> நீற்றல்  என்ற வினை அமைகிறது.  இது சாம்பலாகிவிடுதல் என்று பொருள்படுகிறது. மேலாகச் சாம்பல் பூத்திருத்தல்.

நீர் உள்ளதாவது நீர்த்தல் என்ற வினையினால் சுட்டப்படுகிறது. நீர்ப்பு என்பதும் அமையும். 

நீர் என்பது இணைமொழியாகிய  சமஸ்கிருதத்திலும் வரும். அது தமிழினோடு வந்த மொழி. அது இந்தோ ஐரோப்பியம்  ஆனது அதிலிருந்து கடன் கொண்டு ஐரோப்பிய மொழிகள் தம்மை வளப்படுத்திக் கொண்டதால்  அவர்கள் அவ்வாறு கொண்டனர்.  இக்கருத்துக்கு (  இந்தோ ஐரோப்பியம் என்பதற்கு)  தேவநேயப் பாவாணரும் உடன்படுவார். என்றாலும், சமஸ்கிருதம் என்பது தென்மொழியின் வழிப்பட்டது என்று தம் ''முதல்தாய்மொழி'' என்னும் நூலில் அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை




சனி, 14 மார்ச், 2026

சிற்பம், சிற்பி, சிலை முதலியவை

 தலைப்பில் தந்துள்ள சொற்களை  ஆய்ந்து காண்போமா?

இந்தச் சொற்களுக்கு அடிப்படையான மூலச்சொல்,  சில் என்பதுதான்.  தமிழில் நாம் காணும் மூலச்சொற்களில் இது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னலாம்.

கண்ணாடிச் சில்,  சில்லை எற்றுதல், காலைக் குத்தின சில், உடைந்த சில், சில்லிகை, சில்லி துவாரம், சில்லிட்டுக் கனத்தது, சில்லபொல்லமாய், சில்லறை,சில்லறைச்செலவு,  கொட்டாங்காய்ச்சிச் சில்(லு),  இவை கண்டு பொருள் தெரிந்துகொள்க.

சில் -  சின்மை.  சில்+சில -  சிற்சில, சில்லோர் - பல்லோர், சில்லொண்டி, முதலானவும் பிறவும் கண்டறிக.

பெரிய கல்லிலிருந்து  சில்லுகள் பலவற்றைப் பேர்த்து எடுத்தபின்,  மீதமுள்ள உரிய கல்லை வைத்துச் செய்யப்படுவது சில் - சிலை என்று ஆனது. சில்லெடுத்துச் செய்பவன் தான்  சில்>  சில்+பு> சிற்பு>  சிற்பு+ இ > சிற்பி.  பின்னர் அழகான கல்லுரு,  சிற்பு+ அம் > சிற்பம் ஆகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

-----------------------------------------------------------------------------------------------------------------------------

The following draft is temporarily retained by the Editing staff for reference.  Please do not read.  Will be discarded later when no longer required

 தலைப்பில் தந்துள்ள சொற்களை  ஆய்ந்து காண்போமா?

இந்தச் சொற்களுக்கு அடிப்படையான மூலச்சொல்,  சில் என்பதுதான்.  தமிழில் நாம் காணும் மூலச்சொற்களில் இது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னலாம்.

கண்ணாடிச் சில்,  சில்லை எற்றுதல், காலைக் குத்தின சில், உடைந்த சில், சில்லிகை, சில்லி துவாரம், சில்லிட்டுக் கனத்தது, சில்லபொல்லமாய், சில்லறை,சில்லறைச்செலவு,  கொட்டாங்காய்ச்சிச் சில்(லு),  இவை கண்டு பொருள் தெரிந்துகொள்க.

சில் -  சின்மை.  சில்+சில -  சிற்சில, சில்லோர் - பல்லோர், சில்லொண்டி, முதலானவ்ம் பிறவும் கண்டறிக.

பெரிய கல்லிலிருந்து  சில்லுகள் பலவற்றைப் பேர்த்து எடுத்தபின்,  மீதமுள்ள உரிய கல்லை வைத்துச் செய்யப்படுவது சில் - சிலை என்று ஆனது. சில்லெடுத்துச் செய்பவன் தான்  சில்>  சில்+பு> சிற்பு>  சிற்பு+ இ > சிற்பி.  பின்னர் அழகான கல்லுரு,  சிற்பு+ அம் > சிற்பம் ஆகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

புதன், 11 மார்ச், 2026

மூத்திரம் ( மீத்ததை இருத்தல்)

இது ஒரு திரிபுச் சொல். இதை இவ்வாறு அறிந்துகொள்க.

உடலில் மிகுத்த நீரை, நம் உடல் வெளியேற்றிவிடுகிறது.  நீர்க்கழிவுகள் வெளியேறுவதால் உடல் நலத்துடன் வாழ்கிறது என்பது நீங்கள் அறிந்ததாகும்.

பகுதி என்ற சொல், பாதி என்று திரிந்து வழங்குகிறது. பகு>பா,  அதுபோல மிகு > மீ என்று திரிகிறது.

மிகுதி> மீதி,  மீதி+ அம் >  மீதம்.  தி என்பதில் உள்ள இறுதி இகரம் வீழ்கிறது.  மீத்+ அம்> மீதம்.  மிகுத்து அமை> மீத் அமை>மீத் அம்> மீதம் என்றும் காட்டலாம். எல்லாம் எப்படி விளக்கினால் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருக்கும் என்பதே நாம் காண விழைவது ஆகும்.

அஞ்சு > அச்சம் என்பதுபோல் மிஞ்சு > மிச்சம் ஆகிறது.

பகுத்துண்ணுதல் என்பது பகுத்துண்> பாத்தூண் என்று திரிதலைத் தெரிந்துகொள்க. பகு> பா.   அதுபோல்,  மிகுத்திரு> மீத்திரு> மூத்திரு+ அம் > மூத்திரம் ஆகிறது.  இது பேச்சுவழக்கில் விளைந்த ஒரு சொல்.

இதை வேறு விதமாகவும் ஆசிரியர்கள் விளக்குதலால், இது பல பிறப்பி  ஆகும். பலரும் கூறியவை அறிந்துகொண்டு இங்கு கூறுவதால்,  இதுவே சிறந்த விளக்கம் என்று உணர்க.

மிகுத்தது > மீத்தது.  'இருத்தல்'  இது பேச்சு வழக்கில் ''கழித்தல்''.  இருத்தல் என்பது கழித்தலைக் குறிக்கும் ஓர் இடக்கர் அடக்கல்  -  பேச்சு வழக்கு என்பதை உணரவும். இறுதியில் இன்றைய வழக்கு மூத்திரம் ஆகும்.  மீத்து இருத்தல் > மீத்திரு >  மூத்திரு> மூத்திரம்.

உடலும் அதிக நீரைப் பயன்படுத்துகிறது.  அதுபோக மீதமிருப்பதும் வேண்டாததும்  ஆவது.  மீத்தது > மூத்தது. பயன்பெறாமல் இருந்ததும்  ஒரு மூத்ததே ஆகும்.   அறிக.

மீத்தது, மிகுத்தது, மூத்தது,  என இவை முல் என்ற மூல அடியிலிருந்து பிறந்த தமிழ்ச் சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 9 மார்ச், 2026

கம்பி என்னும் சொல்.

 கம்பி என்ற சொல், முதனிலைத் தொழிற்பெயர்.  இரும்பினால் ஆன அசையும் தடிகளையும் குறித்தபடியால், பொருட்பெயருமாகும்.

கம்பித்தல் என்னும் வினைச்சொல் தமிழில் இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே ஆகும். கம்புபோல் நீளமாக  இழுக்கப்பட்டு  வளைக்கவும் அசைக்கவும் படும் நிலையினதாகையால்,  கம்பு> கம்பி  என்று இகர இறுதியுடன் முடிந்த சொல்லாகும்.

கம்பு என்பதும் தமிழ்ச் சொல்லே. கடுமை உடையது என்ற பொருளில் கடு> கடும்பு  என்று  புகர விகுதி பெற்று இச்சொல் முடிகிறது. பின்னர் டுகர இடைக்குறைந்து, கம்பு என்றாகி வர,  முன்னிருந்த சொல் கடும்பு, சற்று வழக்கிறந்துவிட்டது.

தொடக்கத்தில் வரும்பால் கடும்பால் என்றது,  கடும்பு என்று கடைக்குறைந்தது. இதில் பு விகுதி எனக்கொண்டு,  கடுமை> கடும்பு எனினும் இதனால் இச்சொல் ஏதும் இழுக்குறாது நிற்கும்.  இதனால் கடும்பு என்ற குச்சியைக் குறிக்கும் சொல் வேறானது என்று உணர்ந்துகொள்க.

பிடிப்பதற்குக் கடுமையாக இருப்பதால், கடும்பிடி என்பது  கம்பி என்று குறைந்தது எனினும் ஒக்குமெங்க.   ஆகவே இது ஒரு பலபிறப்பிச் சொல் என்று கொள்க.  

கம்பித்தல் என்பது கற்பித்தல் போலுமொரு சொல் எனலாம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 6 மார்ச், 2026

ரசம் என்பது

 சாப்பிடும் போதெல்லாம்  ரசம் என்பதை மறந்துவிடல் ஆகாது.  இது ஓர் இன்றயமையாத தேறலாக இப்போது இடம்பிடித்துள்ளது.

பலவித மருந்துக் குச்சிகள், இலைகள், இணுக்குகள், கொழுந்துகள், வேர்கள் இன்னும் இவை போல்வனவற்றை வேகவைத்து, இவற்றை இறுத்து, வரும் ரசத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்றி அருந்தும் நீர்க்கலவைக்கு   ''இறசம்'' என்று சொல்வோம்; எனினும் இது ரசம் என்றே வழங்குகிறது.  எழுத்தில் வேண்டுமாயின் இரசம் என்று எழுதலாம்.  இதை இறசம் என்று எழுதினால் இது இறுத்துக் குடித்தலுக்கு ஏற்ற பெயராக  அமைகிறது.

இவ்வாறின்றி,  போட்ட குச்சி முதலியவற்றை நீக்க மீதமாக இருக்கும் நீரின் காரணமாக,  இரு+ சு+ அம் >  இரசம் > ரசம் என்றும் கூறினாலும் பொருந்துவதாகவே தெரிகிறது.

அரைத்து நீருடன் கொதிக்கவைத்து இறக்குவதால்,  அரை+ சு+ அம் >  அரைசம்> அரசம்> ரசம் எனினும் பொருத்தமே  ஆகும்.

அரிய மருந்துப் பொருள்களை வேவித்து இறக்குவதால்  அரு+ சு+ அம்> அரசம் > ரசம் எனினும் பொருத்தமே.

உரைத்து வழித்து நீரிலிட்டுக் கொதிப்பித்து இறக்கி,  அதைக் குடித்தாலும்,உரை+ சு+ அம்>  உரசம்  ( ரை என்பது ர என்றானது ஐகாரக் குறுக்கம்)  உகரம் அகரமான திரிபு வழியாக  ரசம் என்றே  ஆகும்.   உகரம் இகரமாக ஆகும் என்பதை முன்பு நிறுவியுள்ளோம்.  பழைய இடுகைகளில் கண்டு தெளிக.

உரிய மருத்துவம் என்ற பொருளில்,  உரி+ சு+ அம் >  உரிசம்>  உரசம் > ரசம் என்றும்  ஆகும்.

இன்னும் பலவிதமாக வரலாம்.  ஆகவே இதைப்  பல்பிறப்பிச் சொல் என்று முடிக்கவேண்டும்.

நாவில் சற்று உறுத்தலான சுவையுடன் வருவதால்,   உறு+ சு+ அம் > உறசம்>  ரசம் என்றுமாகும்.

உடன் உருப்பட வேண்டின் குடிக்கவேண்டும் என்ற பொருளில்,  உரு+ அ+ சு+ அம் > உரசம் > ரசம் என்றுமாகும்.

சம/ஸ்கிருதம் என்பது தமிழின் இணைமொழியாக வளர்ந்ததே ஆதலின்,  ஆரிய மொழி என்னும்  அயலார் மொழி அன்று.   ஆர் என்ற பணிவுச் சொல் உடையோரான பெரியோர்க்கு உரிய மொழி என்ற கருத்தில்  ஆரிய மொழியாகலாம். இங்கு அனைத்தும் தமிழ் மூலமாகவே கூறியுள்ளோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது


புதன், 4 மார்ச், 2026

அருமை என்பதன் உணர்ச்சி எப்போது வந்தது: அருமை, அரு> ஆர்

அருமை என்னும் உணர்வு:

 மனிதனுக்கு அருமையானது ஒன்று என்ற எண்ணம் எப்போது பிறக்கிறது? ஏதேனும் ஒன்று மிக்கத் தொலைவிலிருந்தால்,  அது  அருமை என்ற எண்ணம் எளிதில் வருவதில்லை.  அது அருகில் வந்தபோதே அது அவனைப் பாதிக்கிறது. இதை இன்னும் சிந்தித்து விரிவாக்கலாம்.  ஆனால் இதை விட்டுவிட்டோம். அருகு-  அது குறைந்த போதும் அதன் அருமையை உணர்கிறான்.  எடுத்துக்காட்டாக, குளிருக்குத் தீக்காய்தல் அருமை.  ஆனால் தீ குறைந்துவிட்டால் அதன் அருமை உணரப்படுவதாகிறது. ஒரு மனிதன் மதிக்கத் தக்க பல அருங்குணங்களை உரியவனாகிறான். அதனால் அவன் உணர்ந்து போற்றற் குரியவனாகிறான்.  

அரு என்பது ஆர் என்று திரிதல்:

இப்போது அரு> ஆர் என்று திரிந்து,  வந்தார் (ஆர்), போனார் (ஆர்) என்று அவன்றன் அருமை உணரப்படுகிறது. இதற்கு முன், ஒருவனே அல்லன், பலர் வந்த போது அந்த அருமை உணரப்பட்டது.  நம் வீட்டுக்குப் பலர் வந்தனரே, என்னே அருமை என்று எண்ணிப் பூரித்தான். அரு> ஆர் என்று பலரைக் குறிக்கும் விகுதியாய் அது இருந்தது.  வந்தார்.  (ஆர்).

இதற்கு மாற்றான சிந்தனை என்னவென்றால்,  மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் என்று எண்ணுவது ஒன்று.  கடல், உலகம் என்பன விரிந்தனவாகவும் தொலைவிலும் உள்ளனபோலும்.  மழையும் தொலைவில் பெய்தாலும் அருகில் பெய்தாலும் அன்ன (பன்மையில்).  கலி - மகிழ்வு என்ற உண்டுபண்ணுதற் குறிப்பில்,   ஆர்கலி என்ற சொல் படைப்புறுகின்றது..  ஆர்கலி வாரணம் என்ற தொடரைக் கவனிக்க.  வாரி+அண்+ அம்> வாரணம். இகரம் கெட்டது( தொலைந்தது).

அருணவம்  ( அரு, அண், அவம்).

அருகும்  தொலைவும்

அருணவம்:  அருமை,  அது அருகில் இருந்தாலும்,  (அண்> அண்மை);  அவம் -  அவ் அண்மை கெட்டுத் தொலைவில் இருந்தாலும்.  ஆகவே அருணவம் என்ற சொல் இரண்டையும் உட்படுத்தி அமைந்திருந்தாலும் என்று  அறிக.  அவி+ அம்- அண்மை கெடுதல் அல்லது மாறியமைதல்.

தனிமைச் சுவை உடைய சொற்களைக் கொண்டது தமிழ். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


திங்கள், 2 மார்ச், 2026

பாரியா என்பது

பாரியா என்பது மனைவி என்று பொருள்படும் சொல்.  தமிழில் பெருவழக்கு உடைய சொல்லன்று. அருகியே எழுத்துலகில் பயன்பாடுடையது ஆகும்.

ஆடவனை மணந்துகொண்ட பெண்ணின் உடன்வாழ்வு, கணவனின் உயிர்வாழ்வு முழுவதும்  தொடர்தல் மட்டுமின்றி,  அவனிறந்த பின்னும் தொடர்வதாகும். பிள்ளைகளையும் வளர்த்து மணம் செய்வித்து,  சிறப்புச் செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பும் உடையவளாகிறாள்.

மணப்பெண் பெரும்பாலும் ஆடவற்கு வயது குறைந்தவளாய் இருப்பாள். அவன் உயிர்வாழ்க்கை முழுவதும் அவனுடன் ''பரவி'' நிற்பதுடன் அவள் கடமைகள் பின்னும் தொடர்வதால்,  ''பர(த்தல்)''  என்ற முதற்பகவு பொருந்துகிறது.  பர(த்தல்) என்பது பார் என்று முதனிலை நீண்டு அமைகிறது.

அவன் வாழ்விடம் இயைந்து செல்வதால்,   இயை - இயா என்ற இரண்டாவது பகவும் மிகப் பொருத்தமுடைய தாகிறது.

இச்சொல் ''பாரியாள்''  என்றும்   -ஆள்  பெண்பால் விகுதி  பெற்றும் வரும்.

பாரியா, பாரியாள், பாரியை என்ற மூன்று வடிவங்களும் ஏற்புடையனவே எனினும்,  பாரியை என்பது சிறந்த சொல்வடிவம் என்பது எம் கருத்தாகும்.

இது மலையாள மொழியில் நல்ல பயன்பாடு காண்கிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 1 மார்ச், 2026

அலங்காரம்

 அலம் புரிதல்  ( அலம்புரிதல்)  என்றால்  அதிகமாகச் செய்தல் என்று பொருள். முகத்தை நன்கு கழுவித் துடைத்தால் அதுவே  அழகு செய்தல் தான்.  அத்துடன் அழகுமாவு அல்லது முகமாவு பூசினால்,  அது இன்னும் அதிகமாகச் செய்தல். ஒவ்வொரு முறையும் சற்று அதிகமாகத் தடவும்போது,  மிகுதி செய்தல் ஆகிறது.  அழகின் எல்லை விரிந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லை கடந்துவிட்டால், தேவைக்கு அதிகம் ஆகிவிடலாம்.  அப்போது அழகின்மை தோன்றவும் கூடும், அன்றி மிக்க அழகு தோன்றினும் தோன்றும். இதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அளவினைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அத்தொழிலில் இல்லாதவனுக்கு இது பற்றித் தெரிந்துகொண்டது ஓரெல்லைக்கு உட்பட்டிருக்கும். நமக்கே யாவும் தெரியும் என்று நினைப்பதும் தவறு  ஆகிவிடக்கூடும்.

இயற்கை அழகு என்பது எல்லார்க்கும் இருப்பதில்லை. சிலர்க்கு அழகின்மை சிலவிடத்து இருத்தல் கூடும்.  அழகுக் கலைஞர்கள் அவ்விடத்தையும் அழகுடைத்தாக மாற்றியமைக்கும் திறன் பெற்றவர்கள்.  ஆளையே வேறு ஒருவராகக் காட்டவும் வல்லவர்கள். நசுங்கிவிட்ட உந்துவண்டியின் மேற்கூட்டினை எவ்விடத்துத் தட்டினால் முன்போல வந்துவிடும் என்ற அறிவை உடையவர்க்கு நல்ல சம்பளம் கிடைப்பதை அறிந்துகொள்வீர்.  

ஆகவே அலம் என்ற சொல்லுக்கு அன்மை கடந்து மேலும் செய்தல் என்று பொருள் கூறுவது நன்றாகும்.

அல் -   அழகு அன்மை.

கு  -  கூட்டிச் சேர்த்தல்.   இது வேற்றுமை உருபாகவும் பயன்பாடு காணும் சொல்.

ஆர்(தல்)  -  நிறைதல். நிறைத்தலுமாம்.

அமை(தல்):   இது அம் என்ற விகுதியால் சுட்டப்படுகிறது.

அலம்+ கு+ ஆர் + அம் =  அலங்காரம் ஆகிறது.   இதன் பொருள்:  அன்மை அல்லது அழகு அன்றான / அல்லதான ஒன்றை  அதனோடு சேர்ப்பிக்கும் முறையினால் நிறைவு செய்து,  அமைவுறுத்துதல்.

தமிழில்,  அலங்கரித்தல் என்பதும் அலங்காரித்தல் என்பதும் காணப்படுகின்றன.  எனவே, அரு என்பதிலிருந்து தோன்றிய அரி,  ஆரி என்ற இரண்டும் கொள்ளற்குரியன. இதை முன்னர் --கரித்தல் என்று பிரித்தனர்.   இது உண்மையில் கு+ அரித்தல் அல்லது கு+ ஆரித்தல் என்பனவின் பிறழ்பிரிப்பே  ஆகும்.. கு என்பதன் உகரம் கெட்டது.  கு என்ற பழஞ்சொல், கெ, கி என்றெல்லாம் கீழை மொழிகளில் வரும். சிலவற்றை இங்கு தவிர்க்கிறோம். கண்டுபிடித்துக் கொள்ளவும். 

அலம்+ கு+ ஆரம்  என்றால் அழகு அல்லாதனவற்றுக்கு நிறைவு செய்தல் என்பது இங்கு கச்சிதமாக வருகிறது.  அதுதான் அழகுறுத்துதல்.  இச்சொல் அலம்+கு+ அரண்+ அம்  > அலங்கரணம் என்றுமாகும் என்பதுணர்க.

பழ > பல என்பதுபோல்,  அழ(கு) >அல என்றுமாவது கண்டுகொள்க.  இதை இங்கு விரிக்கவில்லை.  வேறு இடுகையில் இதை விளக்கலாம்.

புரியாதவிடத்து எழுதிக் கேட்கவும்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

அனுமான், அனுமானம்

 அனு என்ற முன்னொட்டு,  அணுகுதல் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட ஒரு திரிபு  ஆகும். இதில் ணுகரம்  மாறி,  னுகரம் ஆயிற்று.  இது எதையும் மறைப்பதற்காகச் செய்யப்பட்ட திருட்டுத்தனம் என்று நினைக்கவேண்டாம்.  அப்படி நினைப்பதால் சொல்லியல் ஏதும் சிகரத்தில் ஏறிவிடுவதில்லை.  அணுகு என்பது மற்ற வடிவங்களுடன் இணைந்து சொல்லாகும்போது,  முன்னொட்டு வடிவத்தில் நின்று, இருசுழியுடன் திரிவதால், சற்று இலகு  நிலைபெறுகிறது.  அணு என்ற சொல்லின் பொருளையும் அணுகு என்ற சொல்லின் பொருளையும் நினைவுக்குக் கொணர்ந்து மூளைக்குச் சுமை ஏற்றாமல்,  புதிய சொல்லாக்கத்தின் புதுப்பொருளை முழுமையாகப் பெறுவதற்கு நல்ல வழியை வகுக்கின்றது என்பதை உணரவேண்டும்.  

அனுமான் என்ற சொல்லில்,    அணுகு> அனு- (முன்னொட்டு).  இது கூறினோம்.  மான் என்பதில் மகன் என்ற சொல்லானது, மான் என்று திரிந்தது.  இதற்குரிய சொற்பொருள்:   அணுக்கமான மகன் என்பது.  பிறப்பு என்ற பொருளுடைய மக என்ற அடிச்சொல்லிலிருந்து உண்டாவதால்,   அணுக்கப் பிறப்பு என்று பொருள்.  பழங்காலத்திலே, இவர் மனிதனுக்கு மிக்க நெருங்கிய உருவமைப்புடன் சிறக்கப் பிறந்தவர் என்ற நற்பொருள் கிடைக்கிறது.  அனுமான் என்பது உயர்வுப் பன்மை பெற்று,  அனுமார் என்றபடி வந்திடினும்,  இச்சொல்லை இழிவாக நோக்குவதற்கு எந்தச் சரியான காரணமுமில்லை. இராமபிரானுக்கு மிக நெருக்கமான அவர்,  மனிதருடன் நெருக்கமான உறவுடையார் என்க. இராமருக்கு நெருக்கமுடையார் ஆதலின், இறைப்பற்றினால் எந்த மனிதருக்கும் முன்னே உள்ளவர்.

மான் என்னாமல் மன் எனினும், மனிதன் என்பதன் அடிச்சொல் அதுவாகும். மனிதப் பிறவிக்கு நெருங்கியவர்.

அனுமானம் என்ற சொல்லிலும், அனு என்பது அணுக்கமே பொருளாகக் கொண்டது.   மானம்  என்பது அளவு என்ற பொருள் உடையது எனினும் ஒருவன் ஒன்றை அணுகி உள்ள தகவல்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பொருண்மை அல்லது கருத்தளவு ஆகும்.  அனு என்பது அணுகுவதே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


புதன், 25 பிப்ரவரி, 2026

விகிதம் வீதம்

 இந்தச் சொற்கள் ஆய்வுக்குரியவை.

பரிவற்சனம் என்பதற்கு பொருள்கூறுகையில்,  அகரவரிசை ஆசிரியர் கதிர்வேற்பிள்ளை அவர்கள்,  1. கொலை, 2 விகுதல் என்ற இருசொற்களைப் பதிவிட்டுள்ளார். விகுதல் என்பது அருகிவழங்கிய ஒரு சொல்வடிவம் என்று தெரிகிறது.  விகுதல் என்ற சொல் சில அகரவரிசைகளில் பதிவுபெறவில்லை என்று தெரிகிறது.

விகுதல் என்ற வினைவடிவம்:

மிகுதல் > விகுதல் என்ற மகர - வகரத் திரிபாகவும்,

விழுதல் > விகுதல் என்ற வழித் திரிபாகவும்

வரும்.

எடுத்துக்காட்டு:

மிஞ்சு >  விஞ்சு;

தொழுதி -  தொகுதி.  ( திரட்சிக் கருத்து).

மிகு> விகு> விகுதி  ( மிகுதி - விகுதி).

தொகு> தொழு - திரிபு.

புழுதி என்பது பூதி என்றும் திரியும்.

பகுதி என்பது பாதி என்றும்  மிகுதி என்பது மீதி என்றும் திரிவதால்,  விகிதம் என்பது வீதம் என்று திரிவது படியமைந்ததே ஆகும்.  அகலமாகப் பரவி நிற்கும் மரம் ஆலமரம் என்று பெயரிடப்பட்டதையும் நோக்குதல் வேண்டும்.

விழுக்காடு  (விழு)

விகிதம்  ( விகு< விழு)

இவற்றின் தொடர்பும் அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.



ஆதிபத்தியம்

 இந்த இருசொற் புனைவை இப்போது அறிவோம்.

ஆதி என்ற சொல் திருக்குறளில் முதல் பாட்டிலே வந்துவிடுகிறது.  ஆதி என்பது ஒரு தமிழ்ச்சொல். அதனை வெளியாரியர் சொல் என்று இருபதாம் நூற்றாண்டின்  தமிழ்ப்புலவர் எவ்வாறு நம்பினர் என்று எண்ணிப்பார்க்கையில் விந்தையாக உள்ளது.  அந்நாட்களிலே,  புலவர்கள் சிலர் சற்றுத் தயக்கத்துடனே அது ஆதல் என்ற வினையிலிருந்து தி என்னும் விகுதி புணர்த்து எழுந்த சொல் என்று சுட்டிக்காட்டினர். இதற்கு முன்னரே இங்கு,  சொல்லாக்கத்தில் அல்லது புனைவின்போது, சொல்லின் பகவுகள் ( உள்ளுறுப்புகள்) தமிழ் அடிச்சொற்களாய் இருந்தால், அஃது தமிழ்ச்சொல்தான் என்று எழுதியிருந்தேம்.1

( அஸ்தி ,  ஆஸ்தி என்ற என்ற சொற்கள்  ஆதி என்பதனோடு தொடர்பு பட்டவைபோல் ஒலிப்பின் காரணமாகத் தோன்றினாலும்,  கருவில் அஸ்தி (எலும்பு)  முந்தித் தோன்றியதாய்  எண்ண ஆதாரமில்லை.  விந்து என்னும் நீர்ப்பொருளிலிருந்தே  தோற்றம் ஏற்படுகிறது.  )

ஆதி என்னும் சொல்  ஆதல் என்னும் வினையடியாய்த் தோன்றியது.  இச்சொல்லுக்கும் இந்தோ ஐரோப்பியத்துக்கும் தொடர்பு கிட்டவில்லை.

பத்தியம் என்ற சொல்லில், பற்றி இயலுதல் என்பதே பொருள். கூடுமானவரை, சொல்லிலுள்ள அடிகளை வைத்தே சொல்லை விளக்கவேண்டும் என்பது எமது கொள்கையாகும்.  ஆகவே ஆதிபத்தியம் என்பது உண்மையில் ஆதி பற்று இயமே ஆகும்.  இச்சொல் தமிழுடன் மிகுந்த தொடர்பு உடையதே  ஆகுமாறு உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


---------------------------------------------------------------------------------------------------------

இருந்தேம் - இது இருந்தேன் என்பதன் தன்மைப் பன்மையாக இங்கு கையாளப்படுகிறது. 

செனக்ஸ்  என்ற இலத்தீன் சொல்,  பழைமை,  பயின்ற முதுமையுடையது என்பது சொல்லப்படுகிறது.   செந்தமிழ் என்ற சொல், இந்தச் சொல், தமிழ் என்பதனுடன் தொடர்பு பட்டபின் பழமை குறிக்கக்கூடும்.  சென்-, சென்றது என்பனவும் பழமை குறிக்கலாம்.  நீங்கள் எழுதி தெரிவிக்கவும்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

கிழமை ( மற்றும் கிழவன், கிழவி என்பவும்)

 தலைப்பில் கண்ட சொற்களை இன்று சிறிது காண்போம்.

கிழங்கு என்ற சொல்லை  ஆய்ந்தால்,  அது கீழ் என்ற அடிச்சொல்லினின்று பிறந்தது எனற்பாலது நன்கு புலப்படும். கீழ் + அம்+ கு > கிழங்கு என்றாகும்.  கீழ் என்ற சொல்லில் கீழ் என்பது (கீ)  நெடிலில் தொடங்கினாலும்,  சொல்லாக்கத்தில் நெடிலான கீ,  குறிலாகிவிடுகிறது.(கி). இப்படிப் பெயர்ச்சொல் ஆனவுடன் முதலெழுத்து குறிலாகிவிடும் பல.

கிழங்கு என்பது கீழ் என்பதிலிருந்து தோன்றியது போலவே,  கிழமை என்ற சொல்லும் கீழ் என்பதிலிருந்து வருகிறது.  கிழங்கு என்பது வேர்.  கிழவி கிழவன் என்போரும் குடும்பத்தின் வேர் போன்றவர்களே. செடியின்  இலை, இணுக்கு என அனைத்தும் மண்ணுக்கு மேலிருப்பவை. இது மரம் கொடி அனைத்துக்கும் ஒக்கும்.  பிள்ளைகளும் பின் தோன்றல்களும் அப்படியே.  வேரானது செடிக்கு உரிமை, உரிமையும் அவ்வாறே. இதனால் கிழமை என்பது உரிமை குறித்தது.

கிழவன், கிழவி என்போரும் உரிமையானவர்கள் என்றே பொருள்தரும்.  பிற்காலத்து இதை மறந்து, இச்சொற்களுக்கு  முதியோன், முதியோள் என்ற பொருள் ஏற்பட்டுவிட்டன.

கிழத்தி என்பதும் உரிமை உடையாள் என்ற  பொருள் உடைய சொல்லே. இல்லக் கிழத்தி,  காதற்கிழத்தி  என்று வருவனவுக்கும் அவ்வாறே பொருள் கொள்க.

வெள்ளிக்கிழமை என்றால் வெள்ளிக்கு உரிய நாள்.  இவ்வாறே பிறவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை.





புதன், 18 பிப்ரவரி, 2026

கானம் என்ற சொல்.

 கானம் என்ற சொல்லினை இங்கு ஆய்ந்து காண்போம்.

இந்தச் சொல் தமிழிலும் வழங்குகிறது,   சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது. கன்னல் என்ற சொல் கரும்பைக் குறிக்கிறது.  கன் என்பதே இதன் அடிச்சொல்.

கன் > கனி   ( விகுதி இ ).  பழம்,  இனிமையானது என்பது பொருள்.

கனைவரிவண்டு  என்பது  கேட்பதற்கு இனிய ஒலியினை எழுப்பிக்கொண்டு பறந்து திரியும் வண்டு. வரிகளும் உடையது.

கன் > கனி.

கன் > கனை.  இனிய ஒலி எழுப்பு.  ந ந என்பது இசை ஒலி,

கா என்றால் தொடர்வரவாதல். கா, மற்றும் ந இரண்டும் இசை ஒலிகளும் ஆம்..

கா-  காத்தல் என்றால்  தேவையான அளவில் இடர் இன்றிப் பாதுகாத்தல். இனிய ஒலி காக்கப்பட்டுத் தொடர்வரவாதலே  இசை.

கா -  நா >  கானம்  ( அம் விகுதி வந்து) கானம் ஆகிறது.  காத்து நாவில் வைக்கப்படுவது. நா என்பதற்குப் பதில் கா+ இன்+ அம் என்பன,  இன் குன்றி ன் என்றே நின்று,  கானம் என்று வரின்,  இன் என்பது  இனிமை என்று கொண்டு,  காத்து இனிமையினால் வைக்கப்பெறுவது என்று முடிக்கலாம்.  இதுவும் பொருத்தமே ஆகும்.

கனத்த இருள்,    கனை  இருள்.  இது முழுமை குறிக்கும்.  முழுமையும் இனிமையே.  திணிந்த இருள்.  திண்> திண்மை.

இனி குறில் நெடில்  பற்றிக் கூறின்,  வா என்ற ஏவல்,  குறுகி வந்தான் என்றாகிறது.    தா என்பது தந்தான் என்றாதல் காண்க. தாள் என்ற சொல்லிற் பிறந்த  சொல்  தளம் என்று குறுகும். குப்பை சேர்ந்திருத்தல் குள் > கூளம் ஆகிறது. தண்ணீர் சேர்ந்திருத்தல்  குள்> குளம் ஆகிறது. இது போதும்.  பழைய இடுகைகளையும் படிக்கவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை



திங்கள், 16 பிப்ரவரி, 2026

சுதர்சன் என்பதன் பொருள் தமிழ் மூலம்

 சுதர்சன் என்ற சொல், தொன்றுதொட்டுத் தமிழிலும் வழக்குடைய  சொல். பெரும்பாலும் விட்ணுவையும் குறிக்கக்கூடும்.  அழகுடையது,  தோற்றப்பொலிவு கொண்டது என்பர். இதில்  சு, தர்ஷன் என்ற இரண்டு சொற்கள் உள.  

தெய்வ தெரிசனம் என்ற தொடரில் தெரிசனம் ( தெரி+ சன்+ அம்) என்றால் தெய்வம், தெய்வச்சிலை முதலானவை கண்ணுக்குத் தெரிவது அல்லது காட்சி தருவது.  தெரிதல் என்ற வினை தமிழ். இது தர்ஷன் என்று தமிழல்லாத இந்திய மொழிகளில் திரியும்.  சன் என்பது  சு விகுதியும் அன் விகுதியும் இணைந்த இணைப்பு.  சு என்பது சுற்றிலும் அல்லது சூழவும் என்ற பொருளது. அதன் ஒரு சொற்குறுக்கம்:  இங்கு கடைக்குறை போல்வது,  முன்னொட்டாக நின்றது. சு என்பது நாளடைவில் சுபம் அல்லது தீங்கற்றது, மேலானது என்று பொருள்வரத் திரிந்தது. இரண்டும் இந்திய மொழிகள் என்பது பல இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது.

இங்கு கண்டவற்றை  விரித்து உணர்ந்துகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வியாழன், 12 பிப்ரவரி, 2026

சர்வம் என்பது

 இதைப் பற்றிச் சற்று விரிவாக இங்கு எழுதியுள்ளோம்.

https://sivamaalaa.blogspot.com/2022/02/blog-post_8.html

ஒரு சரிவில் கொட்டிய நீரனைத்தும் சரிவினடிக்குச் சென்றுவிடுவதால், அடியிற் சென்று மீட்டாலன்றி, எல்லாம் ஓடிவிட்டது என்றுதான் சொல்வர். சரிவிலிருந்து மீட்டல் அரிய ஒன்றே ஆகும்.  இதன் அடிச்சொல் சரு என்பதுதான்.  அரு> சரு> சருவு> சருவம்> சர்வம் என்றானதுதான் இச்சொல். சரு என்பதற்கு முந்திய அடி அரு என்பது கூறினோம். மீட்டல் அரிது  என்பதை அரு என்ற அடி காட்டுகிறது. சரிதல் என்பது  சொன்னவன் பக்கம் சாய்ந்துகொள்வது என்ற பொருண்மையால் ஒத்துக்கொள்ளுதலும் உணர்த்துகிறது.

சர்வம் என்பது சமஸ்கிருதம் என்று வைத்துக்கொள்வோம்.  அப்படியானால் அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள்.  சம - ஒப்புமையுடன்  கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது.  இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார்.  சுனில் குமார் சட்டர்ஜீ  என்பது அவர் பெயர்.  இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள்  'தற்சமம்'',  ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின.  இதை மறந்துவிட்டு,  சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லா நினைப்பது  மூடமதேயாகும்.  உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ >  என்றால் முன் நிற்பதாக  ஆகுவது என்று பொருள்.  அண்- அண்மி நிற்பது.   அம் - அமைப்பு.  எல்லாம் சேர்த்தால்  ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும்,  சம கதம் என்பது புரிகிறதா?    கதம் என்பது:  கத்து,  இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம்,  அல்லது கிர்தம் என்றாகும்.  இப்போது சமஸ்கிருதம் என்ற சொல்  கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.

வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி,   இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே  ஆகும்.

சர்வம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஜீவன் என்ற சொல்.

 ஜீவன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இது சீவித்தல் என்று வினையாகவும் வரும். இதற்குப் பல சொல் தோற்றங்கள் சொல்லப்பட்டிருந்தாலும்,  இதைத் தமிழ் மூலத்தது என்று  ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.

மனிதன் இறந்தபின் மீண்டும் மறுபிறவி கொள்கிறான் என்பது ஒரு கொள்கையாகும். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதார் பலராயினும், நம்புவோரும் பலராவர்.  Lobsang Rampa முதல் பலர் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி மறுபிறவி உண்டென்று கூறுவர்.  தமிழ்ச் சங்க காலத்திலும் மறுபிறவி நம்பிக்கை உடையோர் பலர் இருந்தனர்.

உயிர் >  யிர் >  ஜிவ் > ஜீவன்,  ஜீவித்தல் என்று வருதல் கூடுமென்பர். இது இலங்கை ஆய்வாளரின் கருத்து. (1)

சீர் வருந்ந >  சீவன்ன  > சீவன் என்று வருதலும் கூடுமென்க.

சீர் மிக்கது என்பது புவி வாழ்வே என்பது இதன் கருத்தாக,  உயிர்> உசிர்> சீர்> சீர்வன்ன >  சீவன் என்றாகுமென்ப.

சிர் > சீர்,  வருந்ந என்பது வருகின்ற  என்பது. இன்று என்ற சொல் இன்னு, இன்னக்கி என்றெல்லாம் பேச்சுமொழியில் வருகிறது. ஆகவே வருகின்ற என்பது வருகின்ன -  வருன்ன ,  இதில் வரு என்பது வ  என்று குறுகும்.  வரு என்ற மூலவடி,  வந்த என்ற இறந்தகால வடிவத்தில், தன் ருகரமிழந்து, வந்த  எனவாதல் அறிக. சீவன் என்பதில் இந்த வன் மட்டும் உள்ளது.  வந்> வன். இதில் அன் விகுதிபோலும் அழகு வந்துவிட்டபடியால், அதையே இறுதிநிலை ஆக்கிவிட்டனர்.

வரு என்ற வினைப்பகுதியும்  வருந்து என்ற வினைப்பகுதியும் இவற்றின் காலவினைத் திரிபுகளுடன் கலந்து மயங்குமாறு விளைதல்,  தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.

உயிர் என்ற சொல்லே ஜீவன் என்று வந்தது என்று பிற அறிஞரும் கூறியுள்ளனர்.

தலைச்சொல் இழக்கை (தலை எழுத்து இழக்கை) பல சொற்களில் வந்துள்ள காட்சி ஆகும். எ-டு:  அரங்கன் - ரங்கன். இனி ரங்கா என்பது விளிவடிவம்.  பண்டை நாட்களில் கீழே நெடுஞ்சாண்கிடையாக  விழுந்தோ, நின்று முன்வாட்டாகச் சாய்ந்தோ வணங்கிய கடவுள், ''சாய்மி''   என்பது சாமி  ஆயிற்று.

சமஸ்கிருத மொழிச்சொற்கள் தமிழிலும் தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்திலும் கலந்துள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

[இலங்கைப் பன்மொழிப் புலவர்,  ஞானப்பிரகாச அடிகள், SJ  அவர்களின்

ஆய்வும்  கவனத்தில் கொள்ளப்பட்டது. (1) ]   எம் முன்னோர் சிங்கையில் 

பதிப்பித்த புதிய உலகம் மாத இதழ் இவர்தம் மாணவர் பணடித  

சேகரம்பிள்ளை அவர்களால் பதித்து வெளியிடப்பட்டது.



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சந்தா வாய்தா

 இப்போது சந்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.

இந்தச் சொல்லில் இரண்டு பகவுகள் உள்ளன.  ஒரு சொல்லின் பகுதிச் சொற்களைத் தாம் பகவுகள் என்று குறிக்கின்றோம். பகவுகள் ஆவன:

அண்> சண்> சண்+தா> சண்தா > சந்தா  ஆகும்.  இதைச்

சண்> சம்>  சந்தா  என்று குறிக்க, இன்னும் தெளிவாகும்.

முழுச்சொற்கள் வாக்கியத்தில் புணர்கையில்  சண்+தா> ச ண்டா என்று வல்லொலி மிக்குப் புணரும்.  சொல்லாக்கத்திலும் கூட இவ்வாறும் வருவதுண்டு. எடுத்துக்காட்டாக,  அண்> சண்>  சண்டை.  இறுதியில் வந்த ''தை'' விகுதி: சொல்லாக்கப் புணர்வில், டை என்று மாறிவிட்டது. தை என்பது இதில் விகுதி யன்று, விகுதி டை தான் என்று வாதிட்டாலும்,  இந்த வாதத்தினால் எந்தப் பெரும்பயனும் விளையப்போவதில்லை. இருவழிகளிலும் இதனை விளக்குதல் கூடுமென்று வைத்துக்கொள்வதில் ஒன்றும் இழுக்காது என்றுணர்க. மொழியில் போதுமான சொற்களின் தொகுதி வேண்டுமென்று முயற்சி செய்யும்போது, இதை எல்லாம் நுணுகி  ஆய்தலினால் பயன் இல்லை. 

''நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் 

பயனில  சொல்லாமை நன்று''

என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கினை சிரமேற் கொள்க.

சண்+தை,  சண்+டை என்ற இரண்டு சொற்களிலும், ஒரே அடியிலிருந்து இரண்டு சொற்களைப் படைத்தளித்தல்  திறனே என்று கொள்க.  விகுதிகள்தாம் மாறின.   அடுத்துச்செல்லாமல் சந்தையு மில்லை,  சண்டையும் இல்லை.

பண்டைக் காலத்தில்,  அடுத்துச் சென்றுதான் பணம் கட்டினர்,  சந்தா என்பதற்கு அதுவே பொருள்.  வாய்தா என்பதற்கும் அதுவே பொருள்.  இடம் என்றால் அதற்கு இன்னொரு சொல்: வாய்.  இச்சொல் பலபொருள் உள்ள சொல். இடத்திற்குத் தந்தது  வாய்-தா.   தா என்பது முதனிலைப் பெயராய்த் தருபொருள் குறித்தது.

வாய்தா என்பது  :  வாய் - இடம்;  தா-  தருவது. முதனிலைத் தொழிற்பெயராய், இங்குச் சொல்லின் பகவாய் வந்தது.  நிலவரிக்கு இது பெயராய் வந்து,  இங்கு வாய் - என்பது இடம் என்று பொருள்படும் தமிழ்.   அப்புறம் வாய் என்பது வாயென்னும் முக உறுப்பையும் குறிப்பதால்,  வாயினால் கேட்டுப்பெறுவது என்றும் பொருள்பட்டது. இது அரபுக்களினுடன் ஏற்பட்ட தொடர்பினால்  அங்கும் சென்று வழங்கி,  அரபுச் சொல் என்றும் நினைத்தனர்.

பல தமிழ்மூலங்களை அரபு மொழியிலும் காணலாம்.  அல் காதிப்  என்போர் முன் காலத்தில் தமிழரிடை இருந்த காப்பியக் குடியினர் போல,  நூல்கள் ஓதும் வகுப்பினர்.   ஸ்க்ரைப்  (scribes)  என்று ஒரு குடியினர் இஸ்ரவேலரிடம இருந்தமை போலும் இது. பழைய யூத புராணத்தையும் படித்து இதை அறிந்துகொள்ளலாம்.  பாரிசிகள்,  சாதுசிகள் என்றவர்களும் இருந்தனர்.  Dead Sea Scrolls என்ற நூலையும் படியுங்கள். C J Buckle SJ  எழுதியவையும் படிக்கலாம்.

Sadusee என்ற சொல்லுக்கும்  சதை என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஏதும் நீங்கள் தொடர்பு அறிகிறீர்களா என்பதை எமக்குச் சொல்லுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை