செது என்பது ஓர் அடிச்சொல். தமிழில் உள்ளது. இழைத்தல் என்பதுp ஏறக்குறைய இச்சொல்லின் பொருளாகலாம். இச்சொற்கள் பருப்பொருள் ஒற்றுமையும் நுண்பொருள் வேறுபாடுகளும் உடையனவாயிருப்பது மறுக்கவியலாது. ஒன்று ஒருவருக்குக் கூடுதலான அல்லது குறைவான பொருண்மையை வழங்கலாம். நிகண்டுகள் எது கூறினும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தெடுக்கும் காரணங்களும் இருக்கும்..
செதுக்குவது வேறு இழைப்பது வேறு எனலாம்.
கதுவுதல் என்றாலும் செதுக்குதல்தான். இதிலிருந்து கதவு என்ற சொல் வருகிறது. பழங்காலக் கதவுகள் செதுக்கிச் சேர்க்கப்பட்டவை. இப்போது நெகிழிக் (plastic) கதவுகள் ஒரே வார்ப்பாக உள்ளன, இணைக்கப்பட்டவையும் உள,
கது > கதுவு > கதுவுதல் ( வினைச்சொல்: கதுவு).
கது > கதுவு > கதவு.
ஒப்பு:
உது > உதவு
உது என்பது முன்செல்லுதல் குறிக்கும் அடிச்சொல்.
மடை என்பது மதகு எனவும் படுவதாகும்,.இவற்றின் வேலை, அளவோடு நீரை வெளியேற்றுதல்.
இனிச் செது. இந்த அடியிலிருந்து,
செது > செதுக்கு.
செது > செத+ அம் > சேதம். முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.
ஒப்பு: சா+ அம் > சவம், இங்கு முதனிலை குறுகிற்று. தோண்டு > தொண்டை என்பதிலும் காண்க.
செது - ( செதும்பு )- செதும்பல். ( குழம்பிய மண்).
செதும்பல் தாமரை.
செதுகு என்பது குப்பை கூளத்தையும் உட்படுத்தும் சொல். செதுகாத படை என்றால் குற்றமற்ற படை என்றும் பொருள்.
செதுகை என்றால் தீமை என்றும் பொருள். சேதமில்லாத இந்துஸ்தான் என்று பாரதியார் பாடலில் வருகிறது.
செது என்னும் அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை