ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வாத்தியம்

 வாத்தியம் என்ற சொல் தமிழ்ச்சொல்.  இதை ''வாத்யம்''   என்று எழுதி சமஸ்கிருதம் ஆக்கிவிடலாம். சமமாகக் கத்துவது என்ற கருத்துத்தான் இறுதியில் '' சம + கத்து+ அம் '' >( சமக்கத்தம்) > (சமக்கதம்) > சமஸ்கதம்> சமஸ்-கிருதம்> சம்ஸ்கிருதம் > சம்ஸ்கிர்தம் என்றெல்லாம் பேசுபவன் கற்பனைக்கேற்ப வடிவங்கள் மாறின.

ஏன் இடையில் ரு வந்தது என்று நீங்கள் கேட்கலாம்.  மெது என்பது மிருது என்று வரவில்லையா?  வெளியார் மெது என்பதை உச்சரிக்கும்போது நாவிற்கு எளிதாக, ஒரு ரு-வை இடையில் நுழைத்து தமக்கு வேண்டிய முறையில் நீட்டிக்கொள்வார்கள்.

இதுவே போல்,  கத்து என்ற சொல்,  கடத்து என்ற சொல்லுடன் தொடர்புடையது.  எப்படி என்றால், ஒலியானது நாவினால் உச்சரிப்புற்று அல்லது பலுக்கப்பட்டு, ஒலி ஆகும்..  கத்து என்பதற்கும் கடத்து என்பதற்கும் என்ன தொடர்பு? சிந்திக்க வேண்டுமே.  சொல்லாய்வு முறையில் சிந்திக்கவேண்டுமே. ஒரு வல்லின எழுத்து சொல்லிடையில் இருந்தால் ,  அதை எடுத்துவிட,  சொல் வேறு வடிவம் பெற்றுவிடும்.  ஒலியைக் கடத்துவது நாவு.  அது சில வேளைகளில் சோர்வினால் கடத்து என்பதைக் கத்து ஆக்கிவிடும்.  எப்போது என்பதை எப்போ என்னும். என்னடி என்பதை என்ரி  என்னும். யாம் எப்போதும் ஒரு பீடுமன்  (பீடுடைய மன்னன்) என்பதைச் சொல்வோம்.  அது பீமன் என்று வரும்.  நாற்புற ஏனச் சுவரையும் மருவி நிற்கும் ஒரு சிலுப்பி உடைய தண்டினை, மத்து என்னும்.  இது இடையின ஒலி ஆயினும் இங்கும் வரும்.  வல்லின ஒலியே இடையினமாகிவிடும்.  மருத்து, ( மருவித்து ). நாற்புறத்தையும் மருவி நிற்கும் ஒரு தடி, மத்து ஆகிறது.  மடி என்ற டகர ஒலி, மரி ஆகிறதன்றோ?  எப்படிப் போலி  ஆனது?

வாழ்த்தியம் என்பது வாத்தியம் என்றாகலாம்.  வாய்த்தியம் என்பதும் அப்படி வந்திருக்கலாம். வாய்தான் வாழ்த்திப் பாடுகிறது.  பாடுவது எப்படிப் பாவானது?  டு ஏன் தொலைந்தது?

இனியும் உரை செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை


கருத்துகள் இல்லை: