செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

எந்த உத்தரவும் மேற்கொண்டு செய்யும் படை (கொந்தக்குலம்)

 பாண்டிய மன்னனின் ஆட்சியின்போது,  அவ்வப்போது ஏற்படும் சூழல்களுக்கு ஏற்ப,  படைஞர்களை  சிறப்பு வேலைகளில் ஈடுபடுத்த வேண்டிய தேவை, மன்னனுக்கு ஏற்பட்டது.  அப்போது போர் தொடுத்துமிருக்கலாம்,  போரில்லாத வேளையாகவும் இருக்கலாம்.  இப்படையினர் எந்த வேலையையும் ஏற்றுக்கொண்டு செவ்வனே செய்து முடித்தனர்.

இத்தகையோர், கொள்ளுந்தகைக் குலத்தோர் என்று குறிக்கப்பட்டனர். இவர்கள் ஓர் ஊரில் நிறுத்தப்பட்டனர்.

கொள்ளுந்தகைக் குலம் என்பது நாளடைவில் கொந்தக்குலம்  என்று திரிந்தது.

கொள்ளுதல் என்றது, எதுவானாலும்  ஏற்றுக்கொள்ளுதல் எனற்பொருட்டு.

கொள்ளுந்தகை >  கொந்தகை

கொ(ள்ளு)  ந்தகை > கொ(ளு)ந்தகை  > கொந்தகை.   இடைக்குறைச் சொல்.

இங்கு " ள்ளு" என்ற ஈரெழுத்துகள் மறைந்தன.

கொந்தக் குலம்

அறிக மகிழ்க,

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: