ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

தெய்வப் பற்று செழிக்கப் பாடுபட்டவர்,

தெய்வப்பற்று மிகப் பாடுபட்டவருக்கு ஆலயச் சார்பில் பிரார்த்தனை.


 இன்றுநடை  பெற்ற  இரங்கு  பதினாறில்

நன்றுபலர்  சேர்ந்து  நலம்தந்தார் ---- ஒன்றிணைந்து

நாடிவன  சாபுகழில்  நாடுதெய்வப்   பற்றுயர

ஓடுபுனல் பாடுமுயர்  வாம்.

பொருள்:
திருமதி  வனஜா அம்மையாருக்கு 18.4. 2023ல்  ஆத்ம சாந்திப் பூசை
நடந்தேறியது.   கலந்து கொண்ட  அவர்  தொண்டு  அறிந்தோர்  அவர்தம்
கடின உழைப்பினை நினைவுகூர்ந்தனர்.  தெய்வப்பற்று மேம்பட அவர் பாடுபட்டார்.  ஓடையில் சலசலவென்று ஓடும் நீரும்  அவர்தம் உயர் பண்பினை பாடிக்கொண்டு ஓடுகின்றது என்கிறது இப்பாடல்.

பதினாறு -  ஆத்மசாந்தி

இரங்கு-   பிரிவுத் துன்பம் அல்லது கையறுநிலை.

பலர் சேர்ந்து -   திரளான வருகை.  ஒன்றிணைந்து -  கூடினர் என்பதும் அது.

வனசா -  வனஜா  (  பெயர்)

தெய்வப் பற்றுயர -   இது பத்தி மார்க்கம் செழித்ததை உணர்த்துகிறது,

ஓடுபுனல்    ஓடும் ஓடையின்  நீர்.

கருத்துகள் இல்லை: