திங்கள், 17 ஜூன், 2019

கரு என்ற அடிச்சொல். also மயானம்

கரு என்ற அடிச்சொல்லைப் பற்றி உரையாடுவோம்.  இதிலிருந்து சிந்தித்து அறியத்தக்கவை பல.  அகரவரிசை அல்லது அகர முதலாய் ஆதலுற்ற  சொற்சேமிப்பு நூலிலிருந்து  ( அகர ஆதியிலிருந்து_) அறிய முற்பட்டால் கோழிமுட்டையேனும் கிட்டுவதில்லை.

கரு >  கருது > கருதுதல்.  ( ஒலி எழுப்பாமல் உள் எண்ணி அறிதல் )
கரு >  கரைதல்  (   மாவு கரைதல்,  மண் கரைதல்,  காக்கை கரைதல், )  கரு + ஐ..

கரு+  இ +  அம் =   காரியம்  (  கருதிச் செய்யும் செயல் )

கரு + அண் + அம் =  காரணம்

கரு +  அண் +  இ =   காரணி.

கரு என்பது இச்சொற்களில் பலவினும் கார் என்றும் திரிந்தது.

கருமேகம் =  கார்மேகம்.
கார்முகில்;  கார்காலம்.
கார்மழை

ஒன்றைக் கருதி உள் நெய்போலும் உருகினால்

கரு +  உள் + நை   கருணை.  இது ஒரு புனைவுச்சொல்.

நெய் =  நை.
நெய் +  அம் =  நேயம்.   நெய் போலும் உருகி இணைதல்.

நெய் என்ற சொல் உருகி இணைதலையே குறிக்கும்.  நெய்யும் அப்படி இணைவதாலே அப்பெயர் பெற்றது.
 

நீரால் கரைதல் உடைய நிலங்களும் நெய்தல் எனப்பட்டன.

1.  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_54.html

2   https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_15.html

3  https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_87.html  கருணை.

இவற்றையும் வாசித்து  (  வாய் > வாயித்தல் >  வாசித்தல்:  யி > சி. )  அறியவும்.

நெய் >< நை போலும் உறவு உடையதே  மய் > மய > மை என்பதும்.  இரு அல்லது மேற்பட்டன மயங்கிக் கலப்பதால் உருவாவதே மை.

மய+ ஆன + அம்=   மயானம்  ( புனைவு)
பலரும் கலந்து உறங்கும் அல்லது எரியூட்டப்பெறும் இடம்.

மய் > மய > மை.   மையம் என்பதும் அது.

இனி மாய் + ஆன + இடம்=  மயானம்.  மாய்ந்தோரை இடும் இடம்.  மாய் என்பது மய் என்று குறுகிற்று எனினும் அமைவதால் இது இருபிறப்பி

சொற்களிடை உள்ள உறவினை ஆய்ந்தறிவோனே அறிஞன்.

நெயவு?

பிழைத்திருத்தம் இனி. வேண்டின்.



கருத்துகள் இல்லை: