திங்கள், 12 ஜனவரி, 2009

viiram

வீரமே ஓர்முதலாய் வெற்றியே ஊதியமாய்
வீறுடன் போராடும் வெஞ்சமரில் --- சீருடனே்
நெஞ்சில் விழைந்ததெலாம் நேராம் விடுதலையே
நஞ்சுமே நாடெனின் ஊண்.


போரிடும் மறவர்க்கு வீரமே ஒரு  மூலதனம் ஆகும் 
வெற்றிதான் அவர்கட்குக் கிடைக்கும் இலாபம்.
கடினமான போரில் எழுச்சியுடன் போராடுகிறார்கள் .
அவர்கள் வேண்டியதெல்லாம்  உண்மையான நேர்மையான விடுதலையே ஆகும்.
நீ  நஞ்சை நாடு ( நாட்டம்  கொள் ) என்றாலும் அவர்கள் அதுவே எமக்கு "ஊண் " (உணவு ) எனறு  உண்டு அமைவர் .

இது வீரத்தின் இலக்கணம் ஆம் .

கருத்துகள் இல்லை: