திங்கள், 26 ஜனவரி, 2009

உறங்கும் உலகினர்

மையக் கிழக்கில் நடக்கும்சண்டை -- அது
மனத்தை உருக்கும் உலகெங்குமே! -- ஆயின்
நையத் தமிழரைப் புடைத்துக்கொல்வார்--கண்டு
நாவினை யேனும் அசைத்ததுண்டோ? -- இன்று
செய்யத் தகுந்தவை அனைத்தும்செய்த -- தமிழ்ச்
சீர்பெறும் ஞாலத் தமிழெரெல்லாம்,-- சென்று
பைய உலகினர் கண்களுக்குள் --- தோன்றி
பாய்ந்து விழித்தெழச் செய்திடாரோ?

கருத்துகள் இல்லை: