ஞாயிறு, 27 அக்டோபர், 2024

காவிடமும் திறவிடமும் (பஞ்ச திராவிடம்)

.திறவிடம் என்றால் திறப்பான அல்லது கடலைக் காணக்கூடிய இடம். இச்சொல்லுக்கு வேறு பொருள் இருப்பின் அவற்றை நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. பிராமணர்கள் கடலைக் கடத்தலாகாது என்பது பண்டை இருந்த ஒரு விதி ஆகும். இந்தப் பொருள் கட + அல் > கடல் என்பதிலே உள்ளது. கடல் என்ற சொல் அமைந்த காலத்தில் இந்த விதி பிராமணர்களுக்கு இருந்து, பிறருக்கும் ஒரு கடைப்பிடியாக இருந்ததா என்பதை இப்போது கூறுதற்கில்லை. கடலிலே தம் வாழ்க்கையை முழுதும் செலவிட்ட மீனவர்கள் போன்றோர் பண்டைக் கால முதலே தமிழருள் இருந்தனராதலால்,  இவ்விதி எல்லாரும் பற்றி ஒழுகியது என்று கூறவியலாது. இதனை நாம் இங்கு மேற்கொண்டு ஆராயவில்லை.

திறவிடம் என்ற   சொல் பல்வேறு வழிகளில் பொருள் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. முந்திய காலத்தில்  இது  பயன் பட்ட  ஏடுகளைக்         காட்டினாலும் இது பயன்பாட்டில் இருந்த ஏடுகள்  இவை என்பதைக் காட்டுமே அன்றிச் சொற் பொருளை விளக்க மாட்டா.

திரை என்பது கடலைக் குறிக்கலாம் ஆதலால்  இச்சொல்லும்  திரவிடம் என்ற சொல்லமைய அடியாய் இருந்திருக்கக் கூடும். ஐகாரம் இறுதியில் வந்து அகரமாகித்   திர என, இடம் என்ற சொல்லுடன் கூடி, திர + இடம் > திரவிடம் என்ற சொல் அமைந்திருத்தலும் கூடும்.

தமிழும் இனமொழிகளும் இந்தியாவெங்கும் வழக்கில் இருந்தன என்பதும் வரலாறான காரணத்தால் ,  தமிழ்ச்சொல்லடியாய் ஒரு சொல் சமஸ்கிருதத்துக்கு அமைதலும் இயல்பானதே. சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்ற கருத்தை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ரோமிலா தாப்பார் நூல்களை எடுத்துக்காட்டுவோம்.

சமஸ்கிருதம் பாணர் மொழி என்பது என் கருத்தாகும்.  இது எவ்வாறாயினும் சமஸ்கிருதத்தில் தமிழ் அடிச்சொற்கள் பல உள்ளன. வேதங்களிலும் எண்ணூறு முதல் ஆயிரம் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களுக்கு ஒப்ப முடிந்த கூற்றாகும்.

ஆகவே திராவிடம்  என்ற சொல்லுக்கு அடி எம்மொழியிலிருந்தும் காணப்படுதலில் ஒரு வியப்பு இல்லை. 

முன்னாளில் எங்கும் பாணர்களே பரவி வாழ்ந்தனர்.  அவர்கள் பாதுகாப்பாக வாழ்ந்த இட.ம் பண்சார் காவிடம் [ pancha gauda ] என்று உயர்த்திக் கூறப்பட்டது.  இது "பஞ்ச கவுடா" ஆனது. பாணர் என்போர் பாடியவர்கள்.

பாதுகாப்பில்லாத  தென் திசை    பண்சார்  திறாவிட(ம் ) [ puncha dravida]  ஆயிற்று.

(முற்கால) மொழி வரலாற்றுக் காலத்தில்  தமிழில் ரகர றகர வேறுபாடின்றியும் பல சொற்கள் வழங்கின  ஆகவே  திற திர என்பவை வேறுபடக் கருதற்குரியவை அல்ல .  சமஸ்கிருதத்தில் ற ர வேறுபாடு இல்லை.


பஞ்ச கவுடா, பஞ்ச திராவிட

பஞ்ச என்பது பின்னாளில் ஐந்து என்ற பொருளுடையதாயிற்று. 

இவை பிராமணர்களுக்குள் உண்டான ஒரு வகைப் பிரிவினைப் பெயர்கள்.

பிரிவினை அல்லது "புத்தகம்"(புது அகம்) புகுதல்: இதனால் உண்டானதே திறவிடம் > திராவிடம் என்பது.  இவர்கள்  திராவிடப் பிராமணர்  ஆயினர்.

பிராமணர் என்போர் பாடகர்கள்.  வேதங்கள் பாடல்களே.  நாகரிகம்    பாண நாகரிகமே.

பிராமணரைக் குறித்த "திராவிட" என்ற சொல்  (அடைமொழி ) மற்றவர்களை எவ்வாறு தழுவிற்று என்பது ஒரு வியப்பு என்றே சொல்லவேண்டும்.

அக்ரஹாரங்கள் தென்திசையில் இவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன.

திராவிடம் என்பது  மற்ற  மக்களை எப்படிச் சென்று தழுவிற்று என்பது வியப்புக் குரியதே ஆகும்.

ஒருசொல் சம்ஸ்கிருத மொழிக்காகப் படைக்கப்பட்ட தானால் அது எந்த அடிச்சொல்லால் அமைந்திருந்தாலும் அது சமஸ்கிருதம் என்றே சொல்லப்படும். அதாவது வழக்கால் அல்லது பயன்பாட்டினால் அது அம்மொழிக்குரியது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 

சில திருத்தங்கள்: 30102024  0253 





சனி, 26 அக்டோபர், 2024

அரக்கன் நன்னாரி வேர் மற்றும் சரசபரில்லா ( சாசி )

 அரக்கன் என்னும் ஆண்பாற் சொல்,  இச்சொல் அன் நீக்கி அம் விகுதியைப் பெற்ற நியையில்  அரக்கம் என்று வரும்.  அரக்கம் என்பதற்கு அரத்தம் ( ரத்தம்) என்றும் பொருள்.  இச்சொல்லில் தகரத்திற்குக் ககரம் வந்துற்றது.

க, ச , த என்பன ஒன்றுக்கு இன்னொன்று மாற்றீடாக வருதலுண்டு.

சகரத்துக்குக் ககரம் வரும் என்பதால்,  அரசன் என்பதற்கு  அரக்கன் என்றும் வரும். இங்கு ககரம் இரட்டித்தது. இது பொருளிலும் திரிந்து,  அரசனின் நிலைக்குத் தாழ்ந்த குணங்கள் உள்ள ஆட்சியாளனைக் குறிக்கும்.  இராவணனை அரக்கன் என்றபடியால் தாழ்குண அரசன் என்பது பெறப்பட்டது.

இச்சொல்லில்  அரச என்பது  சகர முதலாய் சரச என்று திரியும் என்பது திரிபுநெறி.  ஆதலினால் அரச என்பதே சரச ஆயிற்று. ஆனால் சரச என்பது முள் என்று அரபியில் பொருள்படும் ஆதலின் அங்கிருந்து வந்திருக்கலாம் என்று ஐரோப்பிய ஆய்வாளர் கருதினர். ஆனால் நன்னாரி வேருக்கு அரக்கம் என்றும் தமிழில் பெயரிருப்பதால் இது தமிழிலிருந்து சென்ற சொல்லாக இருக்கும் என்பதே உண்மை. இதற்குக் காரணம் நன்னாரி தமிழ்நாட்டில் கிட்டுவது. தென் கிழக்காசியாவில் அரசி என்பது சரசி, சாசி என்று திரிந்து வழங்குகிறது. அகரம் சகரமாகும்,  எடுத்துக்காட்டு:  அமணர் - சமணர்.

அரக்கம் என்பதே சரக்கம், சரசம் என்று திரிபு எய்திற்று.

பரில்லா என்பது பர - பரவும்,  இல்(லா) - கொடி. கொடியிடம்.  பர இல் - இடத்தில் பரவுவது என்பது. பாஸ்கு மொழியில் உள்ள பரில்லா என்பது தமிழில் உள்ள பர இல் என்பதுதான்.  இடத்தில் பரவுவது.

சாசி என்ற தமிழ்மூலம் மறைக்கப்பட்டுள்ளது அல்லது அவர்களுக்குத் தெரியவில்லை. தமிழ் அறியாதார் செய்த ஆராய்ச்சி.

அரக்கன்> அரச்சன்>  ரச்சசன்> ராட்சசன் என்பதும் அறிக. சகர ககரப் போலி.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

வியாழன், 24 அக்டோபர், 2024

கவிராயர் என்ற சொல்.

 கவிராயர் என்ற சொல் இப்போது மக்களிடையே வழக்கிலில்லை.

இன்றைய வழக்கு அல்லது சொற்பயன்பாடு,  கவியரசர் என்பதுதான்.  பாவேந்தரென்றும் கூறுவர்.  கவி, பா என்பன ஒருபொருட் சொற்கள்.

கம்பர் என்னும் கவிஞர்:  இவர் இராமாயணத்தைத் தமிழில் பாடினார்.  வால்மிகி என்பவர்தாம் இராமயணத்தைப் பூசைமொழியில் ( சமஸ்கிருதத்தில்) பாடினார். இவர் வால்மிகியை " நாவினார்" என்றார்.

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

மூவ ரானவர் தம்முளும் முந்திய

நாவினார்"

என்றார்.  நாவினார் என்பதற்கு உண்மையில் நாவலர் என்று பொருள்கொள்ளவேண்டும்.  வெறுமனே "நாவை உடையவர்"  என்று மட்டும் கூறுதல்  முட்டாள்தனமாகும்.  திறனுடன் பாடும் நாவை உடையவர்" என்றால் சரியாக இருக்கும். வல்ல நாவினார் என்பதும் நாவலர் என்பதும் ஒன்றே.

பாடல் வல்ல நாவினாரைத் தாம் நாம் கவியரசர் என் கின்றோம்.

ஓர் இருநூறு ஆண்டுகளின் முன்னர் வாழ்ந்த தமிழ்ப்பெருங்கவிகள்  கவிராயர் எனப்பட்டனர்.  இது கவியரசர் என்பதே.

அரசர் என்ற சொல் அரையர் என்றும் வரும்.  அரையர் என்பது திரிபு அல்லது போலி.

அரையர் -  இது ராயர் என்று பேச்சில் திரிந்து வழங்கும்.

இந்தத் திரிபுச் சொல் சமஸ்கிருதத்திலும் வழங்கிற்று.

பலருக்கு ரை என்பது வருவதில்லை.  ராய், ராயர் என்றுதான் வரும்.  யகரத்துக்குப் பதில் வகரமும் வரும். அவ்வாறு வரும்போது ராவ் என்று மெய்யெழுத்தாக முடியும்.

சில நிலப்பகுதிகளில் இந்த ராவ்களை 'ராவ் அது" என்று பணிவுடன் சொன்னார்கள். ராவ் அது  ( அவர் ராவ் அல்லது அரசர் அல்லது அதிகாரி)  என்பது ராவ் அது > ராவது > ராவத் என்று ஆனது. ராவது என்பதில் ராவத் உ என்று உ இறுதியில் ஒலிக்கிறது,  ஆனால் து என்று சேர்ந்து ஒலிக்கிறது.

ராய் அல்லது ராவ் என்பது இலத்தீன் மொழியில் ரெக்ஸ் என்று திரியும்.  ரெக்ஸ் என்போன் அரசன்.  பெண்பால் ரெஜினா.

இதை யாம் பிறர் எழுதிய நூல்களில் பார்க்கவில்லை.  நூலை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து வெளியிடலாம். ஆனால் பகர்ப்பு அல்லது காப்பி செய்யக்கூடாது, அனுமதி இல்லாமல்.

கவிராயர் என்பது கவி+ ராய் + அர்.  இதிலும் ராய் இருக்கிறது.

திரிபுகளை உணருமுன் இறந்துவிட்டவர்கள் பலர். கோவிட்டில் பலர் இறந்தனர். பாவம்.

இலக்கணம் உணர்ந்தோர் அறிக.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்,