திங்கள், 23 மே, 2022

பவானி என்ற பெயர். மற்றும் தொடர்புடைய சொற்கள்.

 பவனி என்பது ஓர் அழகிய சொல்.  தமிழில் இச்சொல்லும் வழங்குகிறது.  ஊர்கோலம் என்ற சொல்லும் வழங்குகிறது.  இது ஊர்வலம் என்றும் வழங்கும். ஊரைக் கோலி வருவது ஊர்கோலம்.  கோலிவருதல் என்பது இப்போது அவ்வளவாக வழக்கில் இல்லை. பாட்டிமார் காலத்தில் பெரிதும் அறியப்பட்ட சொல் அது. இன்று முதியவர்களாகிவிட்ட சிலர்,  அவர்கள் பாட்டிகாலத்துச் சொல் என்று இதைக் குறிக்கிறார்கள்.

முதலில் பவனி என்பதை இங்கு அறிந்துகொள்ளுங்கள்:

பவனி ஒரு தாக்கத்தை .....இடுகைத் தலைப்பு



ஊர்வலம் என்பது ஊரை  வலமாகச் சுற்றிவருவது என்போர் ஊர்கோலம் என்பதை ஊர்வலம் என்பதன் திரிபு என்றும் கருதுகிறார்கள்.

இச்சொற்கள் பல ஆண்டுகட்கு முன்னரே வழக்குடையன ஆகிவிட்டபடியால், ஆய்வின் மூலமே இதை முடிவுசெய்தல் வேண்டும். இது நிற்க:

பவானி என்பதும் அழகிய சொல்லே.

பவானிக்கும் பவனிக்கும் பரவுதற் கருத்தே ஒரு பொதுமையைத் தருகிறது.  அந்தப் பொதுமை .வேறன்று.

பவானி அம்மனுக்கு இன்னொரு பெயர்.  பாவானி எங்குமுள்ளதாகிய தெய்வத்தின் பெயர்.

பரவலாகச் சுற்றிவருவது  பரவு அணி,  இதில்  ரகரம் இடைக்குறையாகி, பவ அணியாகி,  பவ அனியாகி, பவஅனி > பவனி   ஆனது. 

அணி என்பது அண்மி ( அடுத்தடுத்து)  நிற்றல்.

அண்> அணி.   

நாம் அன்புகொள்ளும்போது, அடுத்துச்செல்கிறோம்.

அண்<> அன்    

அடுத்தலில் உடலால் அடுத்தல், மனத்தால் அடுத்தல் என்று இரண்டும் அடங்கும்.

அன்> அனை> அனைவர் என்று மக்களைக் கூட்டிச் சொல்கையிலும் அனைத்து என்று பொருளைக் கூட்டிச் சொல்வதிலும் இந்தக் கருத்து மறைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்க.   

பவ + அன் + இ >  பவ ஆன் இ >  பவானி.

எங்கும் பரவி இருப்பவளும் அம்மை; நம்மை அடுத்திருப்பவளும் நம் அம்மை.

இதனோடு கடவுள் என்பதை ஒப்பிடுக:

யாவையும் கடந்து நிற்பதும் கடவுள். யாவினும் உள்ளிருப்பதும் கடவுள்.

அன் >  அன்பு.   அன்>  அனி   என்றாலும் அடுத்தல் கருத்து வரும்.

ஒரு நூலாகவும் எழுதலாம்.  இடுகைகள் சுருக்கமாக இருத்தலே நன்று.

இன்னொருகால் இங்குச் சொல்லாமல் விட்டவற்றைச் சற்று விரிப்போம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.




ஞாயிறு, 22 மே, 2022

மின் குளிர் காற்றிருக்க, வேண்டுமோ தென்றல்?

அடுக்குமாடி வீட்டு அம்மா பாடுவது:

மின்பனிக் காற்று ஏற்றலும்

தென்றலை மறுத்தலும். 


அறுசீர் விருத்தம்


வானிலே உலவி  வந்து

தரையொடு தடவிக் கொண்டு

கானிலே கொடியும்  ஆடக்

கடுமரம்  தழுவி ஓடி

மேனிலை அடுக்கு வீட்டுக்

கதவிடை மிதந்து மோதி,

யானுளேன் அவண்ம றந்தாய்

என்னகம் வழுவி   னாய்நீ


மின்பனிக் காற்றின் இன்பம்

மேனியை முத்தம் செய்ய,

அன்பனில்  லாத  வேளை

நண்புபோல்  வந்த தென்றல், 

என்பொடு தசையும் தொட்டாய்

என்னவோர் தீரம் கொண்டாய்,

உன்படை கொள்ளேன் நானே

என் கடை அடைத்து மீண்டேன்.

உரை:

யானுளேன் - நான் உள்ளேன்.

வழுவினாய் -  பிழை செய்தாய்

கானிலே கொடியும்  ஆட -  காட்டில் கொடிகள் ஆட

கடுமரம்  தழுவி ஓடி -  கடுமையான மரங்களையும் தழுவி

மேனிலை அடுக்கு வீட்டு  - அடுக்கு மாடி வீட்டில்

கதவிடை மிதந்து மோதி,-  கதவில் வந்து மோதி

யானுளேன் அவண்ம றந்தாய்  நானிருந்த இடத்தின் தன்மை மறந்து,

என்னகம் வழுவி   னாய்நீ  -  என்வீட்டுக்குள் தவறிவிட்டாய்



மின்பனிக் காற்றின் இன்பம் -  " ஏ.சி.க்காற்று சுகம்"

மேனியை முத்தம் செய்ய,--  என் மேனியில் சுகம் தர

மேனியை முத்தம் செய்ய,-- ( வருணனை)

அன்பனில்  லாத  வேளை  --

நண்புபோல்  வந்த தென்றல்,    நண்பு -  தோழமை ,காட்டி வந்த தென்றல்

என்பொடு தசையும் தொட்டாய்---- வந்து என்னைத் தொட்டுவிட்டால்.

என்னவோர் தீரம் கொண்டாய்,----  ( அடாவடிக் தனத்தைக் கூறுகிறது)

உன்படை கொள்ளேன் நானே--   படை-  மேல்படுவதை

என் கடை அடைத்து மீண்டேன்.  கடை -  கதவு என்பதாம்.


படங்கள்









படித்து மகிழ்க.

மீள்பார்வை பின்.

வெள்ளி, 20 மே, 2022

உலகில் அரியது இன்றும் சூரியன் தான். அதனால் அருணன்.

 வரலாற்றில் சூரியன் என்ற வாள்வெளி ஒளியுருண்டை,  ஒரு அரிய பொருள் என்றுதான் இன்றும்கூட நாம் கருதவேண்டும்.  வானநுல் ஏடுகளை வாசித்துவிட்டு,  அண்டமா வெளியில் பல சூரியன்கள்  இருக்கின்றன என்று நாம் முன்னின்று வாதிக்க முனைந்தாலும்.  அவை நம் ஊனக்கண்களால் நாம் கண்டுகொண்டவையல்ல.

பண்டை மனிதற்கு  ( ஒருமை)   கண்டறிந்த ஒளியுருண்டைக்குப் பெயரொன்று அமைக்கத் ததிகிணதோம் தாளம் போட்டுக்கொண்டிருக்கையில்,  தாம் கேள்விப்பட்டுக்கூட இராத பல சூரியன்கள் மனக்கண்முன் தோன்றுதல் எங்ஙனம்?  அவனறிந்தது ஒரு சூரியன் தான்.

தொலைவில் உள்ளது.  அதிலிருந்து ஒளியும் சூடும் நம்மை வந்து எட்டுகின்றன,.  அதைப்பற்றி..........தவிர  மற்றவை தெரியவில்லை.

என்ன அது? அதுதான் உலகைப் படைத்த கடவுளோ?  எங்கோ இருக்கிறது,  வெகுதொலைவில்.

பகல் வேளையில் சூடு கொடுக்கிறது, உணர்கிறோம்.

தேவர்களில் நமக்குச் சூடு கொடுக்கும் தேவன் இவன் தான்.

சூடு இவனால்தான் இயல்கிறது.   இவன் சூடு கொடுத்து இயல்பவன்.  இவன் சூடியன்.   இது திரிந்து சூரியன் ஆயிற்று.  டகரம் ரகரமாகும்.

இத்தேவனைப் போல் இன்னொருவன் இல்லை.  இவனுக்கு பாற்பகுப்பு இல்லையோ.  இருப்பினும் சூடியன் என்றே குறிப்போம்,  

பிறர்:  அவன் தேவன், அவனை வணங்குவோம்.

மூன்று நாட்களாய் இவனை வணங்கிக்கொண்டு இருக்கின்றேன்.  அம்மம்மா. நல்ல உணவு கிடைத்து மகிழ்ச்சியாய் இருக்கிறேனே. கடவுள் என்றால் இவனே கடவுள்.

குளிரையும் போக்கினான் இவன்!

ஆங்கே இருந்துகொண்டே சாப்பாடும் அனுப்புகிறான் இவன். 

இவனைக் காலையில் காலையில் வணங்கவேண்டும்.

[இவ்வாறு சொல்லிக்கொண்டே இருக்கலாம்.]

ஓர் அறிவு வாதி சொல்கிறான்: இது தேவனுமில்லை,  கடவுளும் இல்லை. இது வானத்து ஒளிப் பிழம்புருண்டை.

எதை எப்படிப் பார்த்தாலும் இறுதியில் எல்லாரும் இல்லாமல் ஒழிந்துதான் போகிறார்கள்.

சூரியன் அழியாததுபோல் இருக்கிறதே.......

உலகில் அரியது இது. இதுபோல் இன்னொன்றில்லை. எல்லாம் இவனிலிருந்து வருவதுதான்.

அரியதை உள்ளடக்கிய தேவன் இவன்.

அரு + உள் + நன்.

கடவுளில் உள் இருப்பதுபோல் இதில்  (இச்சொல்லில்) உள் இருக்கின்றது.

(உள்  என்பது ஒரு விகுதி)

அருணன்.

இவனுக்கு இன்னொரு செல்லப்பெயர்.அருள்நன் > அருணன் என்பாருமுண்டு.

இவனுக்கு ஒவ்வொரு மொழியிலும் பெயர்   (உண்டு).  இவன் செல்லப்பிள்ளை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்

சில திருத்தங்கள்:  21052022 2250