புதன், 24 நவம்பர், 2021

விருட்சம் மரம்

 விய் > விரி என்பன அடிச்சொற்கள்.  அடிச்சொற்கள் என்பவற்றுக்கு அடிப்படைப் பொருள் ஒன்றோ பலவோ இருக்கும்.   ஒன்றுக்கு மேற்பட்ட உறைவுகள் உடைய அடிச்சொற்கள் எவ்வாறு அந்நிலையை அடைந்தன என்று சிந்திக்கலாம். மனிதர்கள் சற்றுப் பெற்றுப் பெருகியபின், சிலவேளைகளில் பெரிதும் தொடர்பற்ற நிலையில் தங்கி வாழவும் நேர்ந்ததுண்டு.  எப்போதாவது கண்டுபேசித் தொடர்பு கொண்டோரும்  எப்போதும் தொடர்பு கொண்டோரென்றும் இருவாறு இவர்களைக் கூறுபடுத்தலாம். எப்போதாவது அல்லது அருகியே தொடர்பு கொண்டவர்கள் ஒரே ஒலி உடைய சொல்லை இருவேறு உள்ளுறைவில் பயன்படுத்திய நிலையில் ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டாகிவிடும்.  அதனால்தான் ஒவ்வொரு பண்டை மொழியிலும் ஒரே பொருளுடைய சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்டனவாகவும் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளனவாகவும் உருக்கொள்ள நேர்ந்தமை அரிதினுணரப் பாலனவாய் உள.  ஒரே சொல் பலவேறு வடிவங்களையும் மேற்கொண்டன.  இவ்வாறு வந்த சொற்களில்  tsai  என்ற சீனமொழிச் சொல்லும் உள்ளது.  பல்வேறு திரிபுகள் பெற்று,  அது chua என்று திரிந்துவிட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுவர்.  பாட என்ற தமிழ் எச்சவினை,  பஜ  என்று வரும் இன்னொரு திரிபுடன் தொடர்புறுத்தக் கூடியது.  ஆய்வினாலான்றி இதனை உணர்தல் குதிரைக்கொம்புதான் என்று உணர்க.

மரங்கள் வளர்ந்து மேலுயர்ந்து கொம்புகளும் கிளைகளுமாய்  இலைகளைப் பரப்பி விரிந்து நிற்பனவாகும்.  இவை கீழே வேர்களை விரித்தும் மேலே இலைகளை விரித்தும் இடம்கொள்பவை.  அதனால் அவற்றைப்  பெரிதும் "ஊறு"டைய,  உணரத்தக்க நிலையின்றி மரத்துப் போனவை என்பதால் " மரம் " என்று பெயரிட்டு வழங்கிய அதே வேளையில் வேர்களையும் இலைகளையும் விரிச்ச நிலையில் ( விரித்த நிலையில்  த - ச போலி )  அவை விரிச்சம் எனப்படுதலும் மிகமிகப்  பொருந்துதல் உடையதே  ஆம். 

விரிச்சம் என்ற சொல் திருத்தம்பெற்று விருட்சம் ஆயிற்று.  பழங்காலத்தில் "ஊரிய" (கிராமத்து)   நாப்பாட்டினை  அவ்வாறே ஏற்றல் இழிவென்ற கருத்து மேலிட்ட நிலையில் அதைத் திருத்தி விருட்சம் என்றாக்கி ஏற்றுக்கொண்டமை,  அன்றை நிலையைச் சமாளித்த உத்தியே ஆகும்.   பேரன் வளர்ந்த பின் தாத்தா இறத்தல் போல, விரிச்சம் என்பது எங்கும் வழங்கவில்லை. என்றாலும் முயலை மோப்பமிட்ட உதவியுடன் வேடன் கண்டுபிடித்தமை போல,  அதனை நாமும் மீட்டுருவாக்கம் செய்யத் தடையொன்று இலாமை உணர்க.

இதன்மூலம் மரமென்பதன் காரணமும் விருட்சமென்பதன் காரணமும் வெளிப்படுகின்றன.

 வில் என்பது விரிவு குறிக்கும் மூலம். வில்> விர்> விய் என்பன அடித்திரிபுகள். விர்> விரி;  விர்> விரு என்பன அவ்வடித் திரிபுகளின் மாற்றுகள்.  ஆகவே விரிச்சம், விருச்சம் எல்லாம் அடிப்படையில் வேறுபாடற்றவை. அக்கா தங்கைகள். நீங்கள் பயன்படுத்தும் விலை என்ற சொல்லும் விருட்சம் என்ற சொல்லும் உறவினர்கள்.

மொழிப்பெயர்களும்கூட வழக்கெல்லையும் பயன்பாடும் கருதிய கற்பனைப் பெயர்களே ஆகும்.  அவை உணர்வூட்டப் பயன்படுபவை;  ஆய்வுக்கு அத்துணைப் பயன் உடையவை ஆகமாட்டா. பயன்பாட்டு எல்லையும் தன்முனைப்பாக ஏற்பட்ட கற்பனை  ஆகவும் வாய்ப்பு உள்ளது.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


பிறக்கிணை - பிரக்ஞை

 நன்றாக இருந்த ஒருவன் மயக்கம் அடைந்துவிடுகிறான். மயக்கம் தெளிந்தவுடன், முன்னிருந்த இணையான நிலையை அடையும்போதுதான், "பிறக்கிணை"  திரும்பிவிட்டது என்று சொல்கிறோம். அதாவது,  பிறகு இணையான நிலை. 

இந்தப் பிறகு இணை என்ற தொடர் திரிந்து, பிறகு இணை > பிறக்கு இணை> பிறக்கிணை ஆயிற்று. பிறக்கிணை என்று சொல்லாமல் "பெறக்கண" என்போரும் உண்டு.

இது அயற் கற்பனை க்கு எட்டியவாறு, "பிரக்ஞை" எனப்பட்டது.  இதிலும் ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. இணை என்பது,  க் இணை > கிணை > ஞை ஆயிற்று.

எந்த மொழியாயினும், நிலைமைக்கு ஏற்றவாறு புதிய சொற்களைப்படைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் முன்னேற்றம் இல்லை. ஒரே சொல்லாக ஆக்க முடியவில்லை யென்றால், ஒரு சொற்றொடராகவாவது அமைக்கவேண்டியது கடமை.  "air filter" என்ற சொற்றொடர்போல. மொழிகளின்  மூலம் புதிய கருத்துகளுக்கு உருவம் கொடுப்பது அத்தகையது.

மயக்கத்துக்குப்பின், அல்லது மயக்கத்திலே இருக்கும்போது இன்னும் நலமாகத் திரும்பாத நிலையில் அவன் "பிறக்கிணை" இழந்துவிட்டான் என்பர். இதன்பின் உடன் நினைவிழந்த நிலையும் அதே சொல்லால் குறிக்கப்பட்டது. அதற்கு ஒரு தனிச்சொல் ஏற்படவில்லை.  ஒரே சொல் போதுமானதாகும்போது, இன்னொரு சொல் தேவைப்படாது.   சிறுசிறு மாற்ற நிலைகளுக்கும் அதே சொல் போதுமானதாக இருக்கும்.

பூசாரிகள் சேவைக்கு  இணையாக வழக்கப்படி ஏதேனும் வழங்குவதும் மக்களிடை காணப்படுவது ஆகும்.  அவர்களுக்கு மரியாதை அல்லது பணிவு தரும் வண்ணம் " தக்க இணை" வழங்கவேண்டும்.  இதுவே,  "தக்க இணை"  ஆகி,  தக்க இணை > தக்கிணை > தட்சிணை ஆனதும் காண்க.

பக்கம் >  பட்சம்,

பக்கி >  பட்சி 

ஆனவையும் காண்க.  இவைபோல்,  தக்கிணை > தட்சிணை ஆகும்.  ஆனால் பிறக்கிணை இவ்வாறு திரியவில்லை.

இலையில் இட்டதை உண்பதே " நாகரிகம்''  அல்லது ஏற்புடைய நெறி என்னலாம்.  நேராகச் சட்டியிலிருப்பதையே போய் எடுக்கக்கூடாது என்று அம்மா சொல்வார்கள். அதைப்போல "ஊரிய"  அல்லது கிராமத்து வழக்குகளை  ஒப்பிடலாகாது என்று நினைக்கலாம்,   இலையிலிருப்பது சட்டியிலிருந்துதான் வந்தது என்று மெய்ப்பிக்க வேண்டிய நிலை உருவாகும்போது சட்டியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது ஆய்வோன் கடனாகிறது.  இதற்கு ஏன் கவலை கொள்வது?  சிலருக்கு "ஊரிய" வழக்குகளில் உண்மையைக் கண்டெடுக்க  முடியவில்லை போலும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

திங்கள், 22 நவம்பர், 2021

மலரோடு மதுரம்

 மது என்ற சொல்லை நாம் அணுகி அதனுட் புகுந்து பொருள்கண்டுள்ளோம். அவை இங்கு உள்ளன:

மது:   https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_12.html

தேன்மது  https://sivamaalaa.blogspot.com/2016/10/blog-post_27.html

இன்னும் சிலவும் உள. அவை பட்டியலில் கண்டுகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html என்னும் இவ்விடுகையிலும் காணலாம்.

மது + உரு + அம் =  மதுரம்.

மது - மயங்குவதற்கு,  உரு -  வெளிப்பாடு,  அம் -   அமைத்துத்தருவது,  மேலும் அம் விகுதி.  

து என்பது, வல்லினத் தகர ஒற்றின் மேலேறிய உகரமாதலின்,  மது உரு என்ற இரு சொற்புணர்ச்சியில் இரட்டிக்கும் என்று வாதிட்டாலும்,  பின்னர் இடைக்குறையும்,  மத்துரம் > மதுரம் ஆம் என்பதால் இந்த வாதம் நொடித்த வாதம்.  மேலும் இது வாக்கியச் சொற்சந்தி அன்று. இரட்டித்தலை எழுப்பாமை நேரத்தை மீத்துத்தரும்.

மயக்குக்கு உருத்தருவதாகிய தேன் இனிமை, மதுரம்.

மலரோடு மதுரம் மேவும் -  எனின், மலரில் இனிமை மேலேறிய(து) என்பது.

மனங்காணும் -  மவுனமானது என்பது பொருள்.

மோகன இராகம் -  காதலைத் தூண்டும் இராகம் அல்லது பாட்டு.

மது உரம் > மதுரம், உகரம் கெட்டது; உரம் - தெம்புதருவது எனினுமாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.