சனி, 20 நவம்பர், 2021

நவநீதம் - புதுமை, வெண்ணெய்.

 நீதி பிழைத்தான் என்றெண்ணிய பாண்டியன் கோவலனைக் கொன்றான்.  இந்த வாக்கியத்தில் "பிழைத்தான்"  என்பதற்குப் பிசகினான், தவறினான் என்று பொருள். "மிஸ்டேக்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, தெளிவான பொருளை "டோர்ட்" என்னும் சட்டத்தொகுதி சொல்கிறது.  "Genuine Mistake" ---  உடலின் தேய்க்கும் மருந்தைக் குடிக்கும் மருந்தென்று எண்ணிக் குடித்துவிட்டீர் என்பதை உதாரணமாக முன்வைக்கலாம். உதாரணம்:[ உது-  முன்னால்; ஆர் - நிறைவாக; அணம் -  விகுதி, (நிற்பது எனல்பொருட்டு).]

நீதி என்ற சொல், நீதம் என்ற வடிவும் கொள்ளும். இரண்டும் நில் என்ற அடிச்சொல்லிலிருந்து வருவன:

நில் >  நி > நீ.  (  சொல் - கடைக்குறை - முதனிலை நீளுதல் ).

நில் > நீதி  ( தி தொழிற்பெயர் விகுதி).

நீதி + அம் >  நீதம்.  (  து என்பதில் உகரம் கெட்டது).

இது என்ற சொல் இடைநிலையாக வரும். இஃது,  " இது" என்றும்,  து என்று தலையிழந்தும், த் என்று மெய்யாகக் குறுகியும் வரும்,  சொல்லாக்கத்தில் ).

நி + த் + அம் > நீ + த் + அம் > நீதம்,   ( நி நீண்டது;  த் இடைநிலை).

நீதிக்கு நில் பகுதியானது,  ஏறக்குறைய நீதி ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் ஒன்றாக நிற்பதாலும் காலம் முதலிய காரணிகளால் கோடாமையும் ஆகும் ).  அதாவது:  நிற்பது நீதி. 

நவநீதம் என்ற கூட்டுச்சொல்லில் இரண்டு பாகங்கள் உள.  நவம் என்பது ஒன்று; நீதம் என்பது இன்னொன்று.  நவநீதம் - புதுமை எனின்,  நவம் - புதுமை; நீதம் - நிற்பது, புதுமையாய் முன்னிற்பது.

நவம் - புதுமை,  நீதம் - நெய்,  புதியது நெய்க்கு முந்திய வெண்ணெய்.  ஆகவே வெண்ணெய் என்பதும்  பொருள். திவாகர நிகண்டு இப்பொருளைத் தருவது காணலாம்.

நெய் என்ற சொல், நெய்+ து + அம் > நெய்தம்> நீதம் என்று திரிந்து இங்கு நெய்யைக் குறித்தது. நவ எனவே, வெண்ணெயைக் குறித்தது.  நீதம் என்ற இவ்வாறு திரியாத சொல், நெய்யைக் குறிக்காது.

இங்கு திரிபாக வந்து நெய்யைக் குறித்தது  " நீதம்" ஆகும். இது கூட்டுச் சொல்லிலன்றி இப்பொருள் தாராது உணர்க. முதற்குறையாய்க் கையாளப் பெற்றிருந்து நெய்யென்ற பொருள் போந்தவிடத்து அவ்வாறு கொள்க. வந்துழிக் காண்க.

"நவநீத சோரனும் என்று --  வருவான் என்று,

இராதாவும் ஏங்குகிறாள் நின்று  !  

கண்கள் காணாமலே -- சுகுமாரன்

கனிவாகப் பேசாமலே   (நவநீத )   "

மருதகாசியின் பாடல். 

இப்பாட்டில் நவநீதம் என்பது வெணணெயைக் குறித்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


வெள்ளி, 19 நவம்பர், 2021

சென்னை வெள்ளம் ( வேண்டுகோள் கவிதை)

 

சென்னைநகர் தண்ணீர்க்குள் அமிழ்ந்து காணும்

சீரகன்ற நிலைகண்டோம் துன்பம் கொண்டோம்

மின்னலொடு பேய்மழையால் மக்கள் அல்லல்

மிசைபொருளும் உண்ணீரும் இல்லா வாட்டம்!

பன்னரிய பல்லிடர்கள் அடைந்தார் முன்னர்,

பின்னிதுநாள் காறுமதில் விடுபா டின்றி!

இன்னுமதே நேர்ந்ததுவே திறமாய்த் துன்பம்

இனிவாரா வழிகண்டு பணிசெய் வீரே.



ஒண்ணும் பெரியோர் ஒன்றுபட் டுதவி

நண்ணிடும் நலமே பண்ணுதல் கடனே.



அரும்பொருள்

விடுபாடு -  துன்பத்தில் மாற்றம்

சீரகன்ற - கெடுதலான

மிசைபொருள் - உணவுப் பொருள்

பின்னிதுநாள் காறும் - இன்றுவரையிலும்

பன்னரிய - சொல்லிட முடியாத

ஒண்ணும் - இயலும்

நண்ணிடும் -  ஏற்ற

மேற்றிராணியார், அதிமேற்றிராணியார் ( bishops arch~)

 இப்போது கத்தோலிக்க மதத்தில் உள்ள "கண்காணியார்களுக்கு"  ( bishops )  பெரும்பாலும் கிறித்துவ  வெளியீடுகளில்  மேற்றிராணியார்,  அதிமேற்றிராணியார் என்ற பதங்கள் வழங்குகின்றன. 

இப்பெயர்களைப் பார்ப்போம்.

மேல்+ திரு = மேற்றிரு என்று வரும்.

மேல்+ திரு + அரண் + இ > மேற்றிரணி.

திரு என்பதில் ஈற்று உகரம் கெட்டது.  ஆகவே மேற்றிர் + அரணி > மேற்றிரணி என்றாகும்.

இது எளிதாகப் பலுக்குதல் பொருட்டு,  மேற்றிராணி  ஆயிற்று.  இது வழக்கிலும் ( அதாவது பயன்பாட்டிலும் ) ஏற்பட்டிருத்தல் கூடும். புனைந்தோரும் அவ்வாறு நீட்டியிருக்கலாம்.

ராணா, மகாராணா என்பவை: அரணா,  ராணா, என்று வந்திருப்பதால் இது மேற்றிராணி என்று வருவது சரியான திரிபே ஆகும்.  இதுபற்றிய இடுகை காண்க.

https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

அரண் உடையவனே அரசன்.  ஆதலின் அரணன், அரணா, ராணா என்பவை அரசனுக்கு வழங்கிய பெயர்கள். தமிழ்நாட்டுக்கு அப்பால் அன் விகுதி வழங்குவது அருமை.

இது மேற்றன் என்ற சிரியப் பதத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்டதுண்டு.

எனவே மேற்றிரு அரணியே மேற்கண்டவாறு திரிபுற்றது.  அரணி என்பது காவலர் என்று நல்ல பொருள் தருகிறது.

மேல் + திறன் > மேற்றிரண் என்று திரிதலும் கூடும்.  மேற்றிரன் > மேற்றன் என்றும் திரிதலும் கூடுவதே.

மேல்+திரு+ஆணை+ ஆர்>  மேற்றிராணையார்> மேற்றிராணியார் என்றும் ஆகலாம்.  இது பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.