செவ்வாய், 9 நவம்பர், 2021

ஸ்தம்பித்தல் சொல்லமைப்பு ( மாற்றுமுடிபு)

"தம்பித்து உயர் திசையானைகள் தளர" என்றான் கம்பநாடன், இராமாயணத்தில்.

ஒரு பொருள் அதன் பிறபாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பாடாமல்,  தொடர்பறுந்த நிலையில் நின்றுவிட்டால் அது தம்பித்துவிட்டது என்று சொல்லவேண்டும்.   ஒரு மனிதனின் இருதயம் 1  நின்று போனால் அது தம்பித்துவிட்டது என்று சொல்வது சரியான உரையாகிறது.  அதாவது பிற இணைப்புகளுடன் இயங்காமல் தாம் அல்லது தானாகிவிட்டது.  இதன் சொற்பகுதி தன் என்றாலும் தம் என்றாலும் முடிபில் வேறுபாடு தோன்றாது.

பிற பான்மைகள் பற்றிச் செல்லாது தானாக அல்லது தாமாகச் சுருங்குதல் அல்லது செயலிழத்தல்.

பிற்காலத்தில் தம், தன் என்ற பகுதியுடன் விகுதி பெற்று அமைந்த சொற்கள் ஒரு ஸகர மெய் எழுத்தை முதலாகக் கொண்டிருக்குமாறு உருக்கொண்டன.  இங்குக் கூறியது,  தான்,  தாம் என்ற வடிவங்கட்கும் பொருந்துவது.  ஒரு சொல் மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்குதலைத் தமிழ் ஏற்கவில்லை. ஆனால் சில மொழிகள் அதனை ஏற்றன. இது மொழிமரபுகளில் வேறுபாடு ஆகும்.

எ-டு:  தான் >  ஸ்தான்~~ 

 இவை பின் ஒரு விகுதியும் பெறும்.

இதனை இன்னொரு வகையிலும்  விளக்கலாம்.  

தம்பித்தல் என்பது தடைப்படுதல் என்ற பொருளும் உடையதாதலின்  தடு என்பதை பகுதியாகக் கொண்டு:-

தடு >  தடும்பி  >  தம்பித்தல்>  ஸ்தம்பித்தல்.

தடுப்பித்தல்  -  இதில் வல்லெழுத்து வந்தது  (டு).   ~பித்தல் என்ற பிறவினையிலும் வல்லெழுத்தே  மிக்கு வந்தது.  இதனை மென்மை செய்ய. "தடும்பித்தல் >  தம்பித்தல் என்று அமைக்கலாம்.  டு இடைக்குறைந்து சொல் மெலிந்தது.  செய்யுளில் இவ்வாறு மெலித்தல் செய்யத் தொல்காப்பியம் வசதி செய்கிறது.  கவிஞர் இதை எதுகை மோனை நோக்கிச் செய்வர்.  சொல்லமைப்பில் இதுவும் கைக்கொள்ளப்படும் உத்தியாகிறது.

இவ்வாறு சொல்லுக்கு இன்னொரு வகையில் அமைபுரைக்க முடிவதால், இச்சொல் இருபிறப்பி என்று உணர்க. முன் இடுகையில் இதைச் சொல்லாமல் தவிர்த்துவிட்டோம். எல்லா வடிவங்களையும் நாம் சொல்வதில்லை.  நேயர்கள் ஆய்வுசெய்து சொல்ல வாய்ப்பும் அளிக்கவேண்டுமன்றோ?

குறிப்பு:

1.ஈர்(த்தல்) - வினைச்சொல்.

ஈர்+து + அ + அம்   >  ஈர்தயம் >  இருதயம் 

து. அ என்பன இடைநிலைகள்.  அம் என்பது விகுதி.

ஈரல் என்பதும் ஈர் என்ற அடிப்பிறந்த சொல்லே.

இருதயம்  இடைக்குறைந்தால்  இதயம்.

இரத்தத்தை ஈர்த்துக் குழாய்களில் வெளியி லிடும் உறுப்பு.

இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர் என்றே திரியும்.  எ-டு:  ஈராறு கரங்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 8 நவம்பர், 2021

திரவநிலை

 நில் என்பது ஒரு வினைச்சொல்.  கால் இருக்கும் இடத்திலிருந்து நகராமல் அவ்வாறே (உட்காராமல் கிடக்காமல் ) இருபதைத்தான் நில் என்ற வினைச்சொல் குறிக்கிறது. நில் என்ற சொல்லைப் பல பொருட்சாயல்களில் பயன்படுத்தலாம்.  இதை  எழுத்துமொழியில் அவ்வளவு விரிவாகப் பல சாயல்களில் பயன்படுத்துவதில்லை.  " அவர்களின் வீட்டில் ஏழு பசு(க்கள்)  நிற்கின்றன"  என்பர்.  இவ்வாறு சொன்னால், " நின்றுகொண்டேதாம் இருக்கின்றனவோ., படுப்பது தூங்குவது எல்லாம் இல்லையோ?"  என்று சொல்வாருண்டு. (இதை ஒரு கேள்வி என்று கொள்வதற்கில்லை ). பசுக்கள்  நிற்கின்றன என்றால்,  அங்கு அவை வளர்க்கப்படுகின்றன என்று பொருள்.  எனவே, பேச்சுத்தமிழ் நில் என்ற சொல்லை குறுகிய பொருளில் எடுத்துக்கொள்ளவில்லை என்று இதன்மூலம்  அறியலாகும். பல்பொருளும் பல்பொருட் சாயல்களும் உள்ள ஒரு சொல்லை, குறுக்கிப் பொருள்கொள்வது தவறாகும்.  நிற்க என்று கடிதத்தில் எழுதினால் எழுந்து நிற்க வேண்டு மென்பது பொருளன்று.

எழுத்தில் உள்ளவையெல்லாம் சரியானவை என்றோ பேச்சில் உள்ளவை எல்லாம் தவறானவை என்றோ கொள்வதற்கில்லை.  ஒவ்வொன்றையும் ஆய்ந்துதான் முடிவுசெய்யவேண்டும்.

நிலை என்ற சொல்  நில் + ஐ என்று விகுதி பெற்று அமைந்த சொல்.  உலகிற்  பொருள்கள் காற்றுப்போலும் நிலையிலோ ( வாயு),  கட்டி போலும் நிலையிலோ ( திடப்பொருள் ) , திரவநிலையிலோ ( நீர்போலும் )  இருக்கும். இவற்றுள் 

திரவநிலை என்பதைப்  பார்ப்போம்.

இம்மூன்று வகைப்  பொருள்களில்  நீர்தான் திரண்டுவந்து அலையாகிக் கரையில் மோதுவதை மனிதன் முதன்முதல் அறிந்துகொண்டான்.  பின்பு காற்றும் இவ்வாறு திரண்டு புயலாவது கண்டுகொண்டான். தமிழில் அமைந்து கிடக்கும் திரட்சிக் கருத்துச் சொற்கள் பெரும்பாலும் நீர் பற்றியவையே ஆகும். இவற்றில் பலவும் நீரியன்மை தழுவிய சொற்கள்

திரள்,  திரள்தல்,  ( வினைச்சொற்கள் ).

திர என்பது அடிச்சொல்.  திர் எனினுமாம்.

திர + அள் =  திரள்.

திர + ஐ  =  திரை  (  அலைத்திரட்சி )

திர +  வ் + அம் = திரவம்  ( வகரமெய் --உடம்படு மெய்).

திர + ஆ + அகம்=  திராவகம். ( சில மருந்துச் சரக்குகள் திரட்சியாகிக் கரைந்து  உள்ளிருக்கும் நீர் ),  ஆ என்பது ஆகுதல் வினை.  வகர மெய்  -- உடம்படுமெய் ).

திரள்வு + அகம் > திரவகம் (  ள் கெட்டது) >  திராவகம் ( திரிபு)  என்றும் விளக்குவதுண்டு. எவ்வாறாயினும் ஒன்றுதான்.

திர -  திரு.  ( திரட்சி).  மதிப்புத் திரட்சியும் ஒப்புமையுடைய கருத்தே.

திர -  திரி  ( மாறுபட்டுத் திரளுதல் )

இன்னும் உளவெனினும் அடுத்துக் கிட்டும்  வாய்ப்புகளில் உரையாடுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.








 

ஞாயிறு, 7 நவம்பர், 2021

07112021 கோவிட் நிலைமை

 [Sent by Gov.sg – 7 Nov]


As of 6 Nov 2021: 

- 1,666 cases in hospital

- 299 require O2 supplementation 

- 65 under close monitoring in ICU 

- 74 critically ill in ICU

- Overall ICU utilisation rate: 72.8%  


3,871 cases discharged; 550 are seniors aged 60 years and above.


Over the last 28 days, of the infected individuals: 

- 98.7% have mild/no symptoms

- 0.8% require O2 supplementation

- 0.3% are in ICU

- 0.2% died


As of 5 Nov: 

- 85% of population completed full regimen/received 2 doses of vaccines

- 86% received at least 1 dose

- 17% received boosters


As of 6 Nov, there are 3,035 new cases. The weekly infection growth rate is 0.83.


go.gov.sg/moh061121