வெள்ளி, 17 செப்டம்பர், 2021

காவலிற் சிறந்த மாமணிகள்.

இவர்கள் குடியிருக்கும் வீடு,  ஓர் ஆற்றோரம் இருக்கிறது.  ஆனால் கொடிக்கால் எதுவும் இல்லை.  அருகில் இருப்பவை வானத்தை முட்டும் மாளிகைகள்..  அங்கு என்ன நடந்தது என்ற விபரம் கீழே.


இது சின்ன நாய்க்குட்டி என்று நினைத்துவிடவேண்டாம்.  பெரிய ஒரு பாதுகாப்பை இது வழங்கிக்கொண்டிருக்கிறது.  எசமான் தாளிகை படிக்கிறார்.  அருகிலே அமர்ந்துகொண்டு கண்காணித்துக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கூட  இத்தகைய இணையற்ற பாதுகாப்பை யாரும் வழங்கிடவில்லையே!  நெருங்கத்தான் முடியுமா யாராலும்?

இரவெல்லாம் நல்லபடி கண்காணித்துப் பாதுகாப்பு வழங்கும் இத்தகைய காவலர்களை, மிகப்பொருத்தமாகவே  மேடை ஏற்றி,  பூங்கொத்துகள் புடைசூழ தங்கள் நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள்,  திருமதி ரோஷினியும் அவர்தம் அன்புக்கணவரும்.  நல்ல சாப்பாடும் இருந்தது.   தங்கள் வேலைக்குத் தக்க சன்மானம் கிடைத்த மகிழ்வில் அவை நன்றியுணர்வுடன் அமர்ந்திருக்கின்றன.  காவலர்கள் வாழ்க! வாழ்க!

எப்படி இவர்கள் மேடை?  காவல்மாமணிகள் என்ற பட்டம் வழங்கவேண்டும்.

வியாழன், 16 செப்டம்பர், 2021

சிங்கப்பூர் கோவிட்நிலவரம்

 [Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 17]


செப்டம்பர் 16, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 77 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 98.2 விழுக்காட்டினருக்கு மிதமான அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லை; 1.6 விழுக்காட்டினருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 0.1 விழுக்காட்டினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்; 0.0 விழுக்காட்டினர் உயிரிழந்தனர். 

  

செப்டம்பர் 15 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 82 விழுக்காட்டினர் முழுமையாக/இரண்டு தடுப்பூசிகளைப்  போட்டுக்கொண்டுள்ளனர்; 84 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.


செப்டம்பர் 16 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 910 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh160921

மக்களைக் கவராத படைப்பாளிகள் --- சிதறல்

 இவையெல்லாம் மக்களுக்கு விரித்துவைத்தேன் எடுத்துரைப்பேன்,

நவையில்லா  நற்கருத்தே  நானுரைத்தேன்  என்றிருப்பான்

அவையென்றும்  அஃதில்லா  இடங்களிலும்  எழுத்தறிஞன்;

"சுவைதந்தேன்  கற்பவர்க்கே"   எனஇவைக்கு  மகிழ்பவனாம்.


மக்களென்ற பேருலகோர்  மயங்கிவிடார் இவைகளிலே;

தக்கதிததாம்  என்பதிலே  தயங்கிநின்றே இயங்கலின்றி .

ஒக்கவுறை   தலைப்பினையே ஒருமுறைதான் பார்த்தபடி,

மிக்கபிற  பாற்செல்வார்  படைப்பாளன் உடைப்புறவே..


இந்தச் சிறுகவிதை எளிமையாக உள்ளது.  கடினமொழிகள் எவையும் இல்லை. சில சொற்களின் பொருள்:  நவை -  குற்றம்    அவை - சபை.   அஃதில்லா - சபை இல்லாத.   இயங்கலின்றி -  படித்துவிட்ட பொருளறிய முற்படுதல் முதலிய முயற்சிகள்.  ஒக்கவுறை  -  உடன் இருக்கின்ற.  மிக்க பிற -  கூடுதலான மற்றவை.. படைப்பாளன் -  எழுத்தாளன், கவிஞன் முதலியோர்.  உடைப்புற - தன் திண்மை அல்லது ஊக்கம் அழியும்படி.