திங்கள், 1 பிப்ரவரி, 2021

பொருளிழந்த பிற்கால விகுதிகள்.

 சொல்லைப் பார்த்தவுடன் அச்சொல் அவ்வாறு அமைந்ததன் காரணம்  உடனே புரிவதில்லை.  இதைத் தொல்காப்பியனாரே  அவர்தம் நூலில் கூறியுள்ளார்.  நாம் இதுவரை கண்ட  பல சொற்களையும் இடுகைகளில் விளக்கியவாற்றால் இதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இங்கு கூறப்பட்ட பெரும்பாலானவை வெறுமனே பகுதி விகுதி அல்லது முதல்நிலை இறுதிநிலை என்ற அவ்வளவில் அறியவைக்கக் கூடியவையாய் இருக்கவில்லை.  சில சொற்களே தேவைப்பட்ட ஞான்று, விகுதிகளே வேண்டியவா யிருந்திருக்க வாய்ப்பில்லை.  அதற்கப்புறம் இன்னும் சொற்கள் தேவைப்பட்ட ஞான்று விகுதிகள் தேவைப்பட்டன. சொல்லை மிகுத்துக் காட்டிச் சொற்கள் அமைந்தன.  மிகுதி - விகுதி என்று அமைந்த இது,  சொற்கள் இன்னொரு சிறுசொல்லைப் பெற்று நீண்டு அமைந்த நிலையைக் காட்டியது.  இச்சொல்லில் அமைப்பும் முதனிலைத் திரிபுடன்  அமைந்தது.  இதுபோலும் திரிபுக்கு இன்னோர் உதாரணம் , மிஞ்சுதல் - விஞ்சுதல் என்பது.

மேலும் மிகுதியாய்ச் சொற்கள்  தேவைப்பட்ட போது,   விகுதியுடன் இடைநிலையும் தேவையானது.  எ-டு: பருவதம்:  பரு(த்தல்) + அது + அம் > பருவதம்.(பொருள்: மலை).  அது - இடைநிலை.  அம் - விகுதி.   அதற்கப்பால் மேலும் தந்திரங்கள் பலவற்றைக் கைக்கொண்டனர்.   திறம் என்பதைத் திரம் என்று மாற்றிக்கொண்டு சில சொற்களைப்  புனைந்தனர்.  அப்பால், இடைக்குறை கடைக்குறை முதலியவற்றைக் கையாண்டனர்.  சொல்செய் வழிகள் அனந்தம் அனந்தம் ....

இடைமிகையும் இதிற் பங்காற்றியுள்ளது:  எ-டு:  குறு > குன்று.  ( இடையில் ஒரு 0னகர ஒற்று மிக்கு வந்தது).

[அனந்தம் என்றால் முடிவேதும் இல்லா நிலை. இது அமைந்த விதம் முன் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது. ]

அன்று   அந்தி  https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_3.html

அந்தி :   https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_70.html ]

எதையும் சூழ்ந்து ( அதாவது ஆலோசித்து) திறம்படச் செயல்புரிந்து பயன்பாட்டுப் பொருள்களை விளைவிப்பவர்களே  சூத்திரர்கள்.  இச்சொல் சூழ்திறத்தார் >  சூழ்திறர் > சூத்திரர்  என்று அமைந்ததென்பதை முன்பு வெளியிட்டுள்ளோம். ழகர ஒற்று மறையும். எடுத்துக்காட்டு:  வாழ்த்தியம் > வாத்தியம். ழகர ஒற்று மறைந்தது.  இதனை ஆசிரியர் பிறர் காட்டியுள்ளனர்.  வாய்த்தியார் (வாய்ப்பாடம் சொல்பவர்)  என்பதும் வாத்தியார் ஆவது.

றகரம்  ரகரமாகும்.  சூத்திறம் > சூத்திரம். தந்திறம் > தந்திரம் 

என்பதும் காண்க. வந்து பற்றும் வறுமையைத் தரித்து அதை விலக்கு வழிகண்டு திறம்பெறவேண்டும்.  வறுமையை வெற்றிகொள் திறம் அதுவாம்.  ஆகவே தரி+ திறம் >  தரித்திரம் ஆயிற்று. இவ்வாறு வறுமையின் வாய்ப்பட்டார், "நல்கூர்ந்தார்". அவர்களுக்கு விரைந்து நல்வழி வரவேண்டும் என்னும் ஆன்றோர் அவரை " நல் கூர்ந்தார்"  ( நன்மையை நோக்கி நடப்பவர்கள் ) என்று இடக்கர் அடக்கலாகக் கூறினர்.  அவர்களை(வறியோர்)ப் பழித்தல் ஆகாது.

பேச்சு வழக்கில் தரித்திரியம் என்பர். அவர்கள் தரித்தது ---  திரிந்துவிடுகிறது என்னும் பொருளில். 

முற்காலத்தில் விகுதிகட்கு. பொருள் இருந்திருக்கும் என்பர். இருந்தது என்று நம் சொல்லாய்வு தெளிவிக்கிறது.  எடுத்துக்காட்டு: திறம் என்னும் விகுதி.  அது திரமான பின் பொருள் மறைந்து,  வெறும் விகுதியாய் வழங்கிற்று.  திறன் குறிக்கும் பொருண்மை சிறிதும் காணப்படாமல்,  வெறும் விகுதி ஆயிற்று. எடுத்துக்காட்டு:  மூத்திரம்.  (மூள் திரம் > மூத்திரம்).  வயிற்றில் மூள்வது .( மூள்வது:  உண்டாவது )  என்பது பொருள்.  இஃது உடலினியற்கையால் விளைவதனால்,  திறவெளிப்பாடு ஒன்றுமில்லை. ஆதலின் விகுதி அல்லது இறுதிநிலை ஈந்த பொருண்மை யாதுமிலது.

திரம் ( மூத்திரம் என்பதில்)  விகுதி அன்று,  திரள்வது குறிப்பது எனினும் அமையும்.  அடிச்சொல் தொடர்பினால். மூண்டு திரண்டு வருவது எனின், திறம் - திரம் திரிபு விகுதியின் வேறுபடல் அறிக. விகுதிப்பொருள் இழக்கப்பட்டது.

மூளுதல் என்னும் சொற்பொருள் அறிக:

முல் -  முன் (லகர னகரத் திரிபு)

முல் > மூல் > மூலை : சுவர்கள்  தொடங்கிடம்.

முல் > மூல் > மூலிகை: நோயறுக்கும் முன்மை விளைவேர்.

முல் > மூல் > மூலம்:  தொடக்கம், தொடங்கிடம், தொடங்குநூல்.

முல் > மூல் > மூள் > மூளுதல்: சிலபல ஆற்றல்கள் கூட்டியைவால் ஒன்று புதிது

தொடங்குதல்.

"முன்செய்த தீவினையால் இங்ஙனே வந்து மூண்டதுவே". - பட்டினத்தடிகள்.

முல் > முள்:  செடியிற்றோன்றும் குத்தும் கடுங்கூர்ப் பொருள்.

முல் > முள் > முளை > முளைத்தல் >  செடி கொடி மரம் முதலிய மண்ணினின்று

மேல்வருதல். புதிது தோன்றுதல்.

( So defined for you to comprehend the basic meaning of the root word  "mul" முல்  )

(You may discover for yourself other connected words from "mul")

நேரம் கிட்டினால் மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பின்  பார்க்கலாம்.

அறிக மகிழ்க.

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.


மெய்ப்பு  பின்னர்.

{இதிற் சில சொற்கள் அழிந்துவிட்டன.

தேடித் திருத்துவோம்.}

பொருள் முற்றும் சிதையவில்லை.

புரியத்தக்க நிலையில் உள்ளது.


குறிப்புகள்

( உது + ஆர்(தல்) + அண் + அம்)  -  உதாரணம்.

தரித்திரம் தரித்திரியம் வேறுபாடு:

ஓருவன் வேலையிழந்து வறுமையின் வாய்ப்பட்ட போது

அவன் தரித்திரம் அடைந்தான் என்க.  அவன் மேலும் 

வறியவனாய் பிச்சைக்காரன் ஆய்விட்டால் அது

தரித்திரியம்.  திறம் (திரம்) , திரிதல் (< திரியம்).

தரித்ததில் இன்னும் மீள் திறம் உண்டா முற்றும் 

திரிந்து அழிந்ததா என்பதுதான் கருதும் வேறுபாடு.

சிற்றூரார் சொல்வது  "~~திரியம்."

சூழ்திறத்தார்:   சூழ்திறம்.  இது சூழ்திறம் என்று வரின்

வினைத்தொகை;  பின் சூத்திறம் ஆயின்  ழ் இடைக்குறை.

பின் சூத்திரம் எனின், திரிசொல்  சூ என்பது கடைக்குறை.

சூ என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  திறம் திரமாய் ஆனது

திரிசொல். திரிசொல்லில் பகுதி போல்வது தெரியினும் அதனை

ஆசிரியர் அவ்வாறு கொள்வதில்லை.

செந்தமிழ் இயற்கை மாறிய நிலைதான் காரணம்.




வியாழன், 28 ஜனவரி, 2021

மொழிகளில் ஆர் விகுதி(suffix) இராவணன் முதல்....

 விழுமிய பீடு அணவிநின்றவன்  > வி + பீ டு+ அணன் >  விபீடணன் என்று சங்கப்புலவர் வால்மிகியார் அமைத்துக்கொண்டார்.  அல்லது தமிழ் இராமாயணம் ஒன்றிலிருந்து இப்பெயரை மேற்கொண்டார்.  இதனை நாம் முன்பு எடுத்துக்காட்டிய து உண்டு. இவை இரண்டில் எது சரி என்று இப்போது வரையறுத்தல் இயலாதது---  அது காலக்கழிவினால்(passage of time).

விழு = சிறந்த.

பீடு  =  பெருமை, பெருமிதம்.

அணவுதல் -  மேற்கொள்ளுதல்;  தொடர்பினால் அடுத்து நிற்றல்.


இராவண்ணன் என்பதன் இடைக்குறைச்  சொல்தான் இராவணன்.  ஒரு ணகர ஒற்றினை எடுத்துவிட்டால் வேற்றுலகு ஆகிவிடுகின்றது. ஆராய்ச்சியின்மை அத்துணை மோசமாகிவிடுகிறது.

இனி வான்மிகி என்ற பெயரைப் பார்க்கலாம்.

வான் -   ஆகாயம்.  வால் -  வெண்மை என்ற பொருள் இச்சொல்லுக்கு  முதுகெலும்பின்  பின்வெளிப்பாடு என்ற பொருளும் உளதென்றாலும் அப்பொருள் ஈண்டு பொருந்தாது.

வான்+ மிகு + இ >  வான்மிகி.   வானை மிக்கு  நின்ற புலவர் என்பது பொருள். இது ஒரு புனைப்பெயர். அப்புலவர் வைத்துக்கொண்டதாக வேண்டும்.

வால் மிகி என்பதும் அன்னது.   வால் தூய்மை என்னும் பொருளிலும் வரும். வெணமை மிக்கவர்,  தூய்மை மிக்கவர் என்றும் பொருள்படும். இதுவும் அப்புலவர் மேற்கொண்ட பெயராகவே அல்லது பிறர் வழங்கியதாகவே தெரிகின்றது.

இவை இயற்பெயர்கள் அல்ல.

வான்மிகி என்ற பெயருடைய ஒரு கூட்டத்தவர் உள்ளனர்.  அவர்களுக்கும் இப்புலவருக்கும்  தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இப்போது அறுதியிட்டு உரைத்தல் ஆகாது. அதற்குரிய பதிவுகள் கிட்டிற்றில.

தொடர்பு உண்டெனினும் அது ஒக்கும் ; இல்லெனினும்  ஒக்கும்.  எதுவும் பிழையில்லை.

மாரீசன் எனின் மரையாகிய தலைவன்.    மரை - மான்.   ஈசன் என்பது இறைவன் - இறைவர் -  ஈறைவர் > ஈஷ்வர்.

இவற்றுள் ஈறைவர் என்னும் முதல்நீண்ட வடிவம் மறைந்தது. ஆனால் முதனிலை நீண்டு சொற்கள் அமையும் என்பது இலக்கணமாதலின், இறை > ஈறை எல்லாம் ஒன்றுதான்.  பாட்டில் நீட்டும்போது வரையறை இலதாகும். பின் ஈறைவர் என்பதில் ஷ் புகுத்தி அமைத்தால், அதனால் வேறுபடல் ஒன்றுமில்லை.  வடவெழுத்தொரீஇ,    சொல்லாய் ( தமிழ்ச்சொல்லாய்) மீளுறும்.  இதனைத் தொல்காப்பியச் சூத்திரம் தெளிவு  படுத்துகிறது.  

உயர் > உயர்வு :  உயர்த்தி  (விகுதி மாற்றம் )  . ஒஸ்தி ஆனதுபோலும்.  வடவொலிகள் மரத்தடி ஒலிகளாய் இருந்தவை.  வடம் - கயிறு, மரம் என வேறு பொருள்களும் உள.  திரு வி.க.  நன்று கூறினார்.

பல தமிழ்ச்சொற்கள் தமிழின மொழிகளில்  வடவொலிகள் பெற்று இயலும்.

பாணினி என்ற பாணனும்  வால்மிகி என்ற அன்றுயர் பிரிவினரின்  புலவனும் மாற்றுமொழியிற் பெரும்புலமை கொண்டிலங்கினர். 

பெயரின் பின் ஆர் விகுதி பெற்று மன்பதைக்குள் மதிப்புற்றோர் ஆரியர். எடுத்துக்காட்டு:  தொல்காப்பியனார் (ஆர்);  வள்ளுவனார் (ஆர்),  இளநாகனார் (ஆர்),  சாத்தனார் (ஆர்),  இன்னும் பலர்.  உங்கள் பெயர் ஆர் விகுதி பெற்று இயலுமானால் நீங்களும்  " ஆர் + இய + அர்"  தான்!

இந்தத் தமிழ் ஆர் விகுதி உலகிற் பல இடங்களிலும் பரவி விட்டதனால்,  தமிழின் உலகத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

அறிக, மகிழ்க.


குறிப்பு:

ஆசிரியர் என்ற சொல் இடைக்குறைந்தும் ஆரியர் ஆகும்.

ஆ(சி)ரியர் - ஆரியர். ஆர் + இ + அர் : பிறர் மரியாதை செய்வதற்கு   உரியவர்.

மரியாதை:  மருவிக்  கட்டிப்பிடித்துக்கொள்ளுதல்.  சொல்லமைப்புப்பொருள்.

மரு + யாத்(து) + ஐ -   மரியாதை.  யாத்(தல்).    ரு யா >  ரியா  ஆகும்.

ஆசிரியர் - பற்றுக்கோடாக இருப்பவர்  :  ஆசு+ இரு+ இ + அர்.  இ - இடைநிலை. அர் - விகுதி.

vizhumiya means excellent. Does not mean fall.









ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மன்னித்தல் மருவிநிற்றல்

மருவுதல் என்பது, ஒன்றுபடுதல் இணைதல் என்ற பொருள்களில் அறியப்படுகிறது. தழுவுதல் என்பது இதற்கு இன்னொரு சொல்லால் தரப்படும் விளக்கம். "சங்கம் மருவிய இலக்கியம் " என்னும் வாக்கியத்தில் அவ்விலக்கியம் சங்ககாலத்துக்கு அடுத்த கால நிலைக்குரியது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்னலாம்.

 இதன் தொடர்பில் நாம் இந்த அடிச்சொற்களைக் கவனிக்கவேண்டும். மல் - ( ஒருவரை இன்னொருவர் மிக்க அருகில்சென்று கட்டிப்பிடித்து வீழ்த்தும் ஒரு விளையாட்டு அல்லது பிடியிடு போர். மற்போர். 

 மல் > மன்: இது லகர 0னகரப் போலி.இது நிலைபெறுதல் என்ற பொருளில் வரும் சொல். நிற்றல் இயலாத ஒருவன் அடுத்தவனை அணுகிப் பிடித்தோ, அல்லது ஒரு பொருளைப் பற்றிக்கொண்டோ நிற்பான். தரையில் காலை வைத்து நிற்பதிலும் நிலத்தின் துணை தேவைப்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே மன்னுதல் என்பதிலும் ஒருசார் மருவற்கருத்து கரந்து நிற்பதை அறியலாம். நிலை நிற்பதெல்லாம் இவ்வாறு சார்ந்தே அமைகிறது. சார்பில் மிகுதியும் குறைவும் கூறுதல் கூடும்.  

மன் > மன்னித்தல். இது நிலைபெறுவித்தல் என்ற பிறவினைப் பொருளில் அமைந்த தமிழ்ச் சொல். மன்னித்தல்: இதுபோல், உன்னுதல் என்பதினின்று உன்னித்தல் என்பதும் அமையும். மன் > மன்று , மன்றம். பலர் கூடுமிடம். இவ்விடங்களில் பலர் அடுத்திருத்தல் காண்க. 

மன்றல் - திருமணம், இருபாலார் அடுத்திருக்கும் வாழ்க்கை. 

மல் > மரு. மருவுதல் என்பதில் மரு என்பது தவிர மற்றவை விகுதிகள். வினையாக்க விகுதி மற்றும் தொழிற்பெயர் விகுதி. 

ஒ.நோ: புல் > புரு. நல்> நறு என்பதும் காண்க. 

மன்னித்தல் என்ற சொல் மன் என்றதிலிருந்து அமைதல் காட்டும் விளக்கம் ஒன்று: இது முன்பு பழைய இடுகையில் விளக்கப்பட்டுள்ளது. https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_12.html 

பலரும் அறிந்த ஒரு திரிபு  -  ஒருவேளை மறந்தும் இருக்கலாம் -   அது:

கரு > கன் என்பது.   கருநடம் >  கன்னடம் என்பது.

நடமென்பது  நாடகம் என்றும் திரியும்:  கருநடம் > கருநாடகம் > கர்நாடகம்.

இவ்வலைப்பூவில் பொருளடக்க அகரவரிசையில் "மன்னித்தல்" காண்க. Glossary on Etymology (Pages) .

மருவி நிற்றல் என்பது இன்னொரு வகையிலும் அமையும். மரு(வி) நிற்றல் --- மருநிற்றல் > மன்னித்தல் என்றும் அமைதல் கூடும். 

புல்லுதல் - பொருந்துதல் . இச்சொல் புல் > புரு என்று திரியும். எனவே புரு > புருசு > புருசன் ( வாழ்க்கையிற் பொருந்தியவன் ) என்பது. 

புரு > புருவம் : கண்ணுடன் பொருந்தி அமைந்தவிடம். இதிலிருந்தும் கண்ணுக்குப் பொருந்தியவன் என்றும் விளக்கலாம். எல்லாம் அதே கருத்துதான். 

 புரு > புருடு > புருடன் என்றும் அமையும் 

பல வழிகளிலும் தமிழ். 

 ஒருவனை மன்னிக்குங்கால் அவனை மீண்டும் மருவிக்கொள்கிறோம். பழைமை நட்பை நிலைநிறுத்துகிறோம். அறிக மகிழ்க. 

மெய்ப்பு செய்யப்பட்டது. 

Owing to software error in Win7, the edit tool bar in this blog disappeared. Hence saved the post and published first. Now this has been edited from another device.

Will review. 25 01 2021

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனிப்போம்.