வெள்ளி, 2 மே, 2014

பூங்கா (தமிழ்) பூங்ஙா (மலாய்)

தமிழில் பூங்கா  என்றால்  "பூக்காடு"  என்பது சொல்லமைப்புப் பொருள்.

We should most of the time be only  concerned with definition of a word as it related to its etymological make-up.  Not its derived meaning nor its applied meaning nor its current definition as  in the lexicon.

கா என்றால் காடு.

கா  >  கான் >  கானம் ,  கான் >  கானகம்,  (கான் + அகம் )

இங்கு  சொல் மாற்றங்களை அடையப் பெறினும் பொருள் ஏதும் மாறவில்லை.

பூங்கா  என்பது flower garden என்று அறியப்படுகிறது.

இதைப் park என்பதற்கு நேராகவும் பயன்படுத்துவர்.

இதே சொல் மலாய் மொழியில் பூங்ஙா என்று வழங்கினாலும்  அது "பூ "  என்று மட்டுமே பொருள் தருகிறது.

தமிழ்ச் சொற்கள் மலாயில் வரும்போது பல  சற்று திரிந்த பொருளிலே வழங்கும். 

இன்னொரு எடுத்துக்காட்டு:

பகு >  பகல் (24  மணிக்கூறில் கதிரவன் ஒளி பெறும் பகுதி )

பகு  > பகி pagi  (பகலின் முன் பகுதியான காலைப் பொழுது.

இங்ஙனமே    பூங்ஙா (மலாய்) பொருளில் சற்று மாற்றமடைந்து வழங்குகிறது 

Pronounced:   bungngA  (  b   stress )





வியாழன், 1 மே, 2014

தேவையில்லாமல் பிறந்த வரிக்குதிரையின் கதி

பாவம் அந்த வரிக்குதிரை 
தேவைக்கு  மேலென்று கருதியதால் 
சுட்டுக் கொன்று துண்டு துண்டாய் 
வெட்டித் தீர்த்தனர் சிறுவர்கள்முன்!

இரக்கம்  இலாத மனிதரிடம் 
பிறக்க நேர்ந்தனை வரிக்குதிராய் !

யாரிடம் சென்று முறை யிடுவாய் 
பாரினில் வேறிடம் ஒன்றிலையோ?

ஏழா யிரத்தின் மேலென்கிறார் 
வாழற்கு வேண்டா விலங்கு மொத்தம் 

கூழும் இலைகளும் கொடுத்திருப்பேன் 
என்மனைக் கிங்கு நீ  அடுத்துவந்தால் 

உன்னாவி உறங்க உனக்கிறைவன் 
இந்நாள் அருளும் வழங்கட்டுமே 




notes:
news from:
The Sun, Thursday Feb 13 2014  p14  .Mimi Bechechi  (The Independent)
newsdesk@thesundaily.com.
www,thesundaily.my

  

கொலைவெறி

குண்டுகள் வைத்துக்  கொலைவெறி ஆடுவோன்
கணடிடான் தானோ  கயமையே  தன்னுருவாய்   
யாதும் அறியாச் சிறுமகார் பெண்டிரொடு
தீதில் முதியோர் பிறர்மாள ஈதெலாம்
எத்தனை  நாட்பொறுப்பீர் எம்மிறைவா இங்கினி
இச்செயல்கள் இன்மை அருள்.