வெள்ளி, 25 ஏப்ரல், 2014

வைபோகம்

வைபோகம் என்ற சொல்லை மிக்க அழகுடன் புனைந்துள்ளனர். கரு நாடக இசைப்பாடலில்  அதைக் கேட்குங்கால்  தம் சொந்த ஆனின் (பசுவின் ) அழகு  கண்டு  மகிழ்வுற்ற இன்பம் (ஆன் +அம் +தம்   > தம்  ஆன்  அம் )  எமக்கு விளைகின்றது!  அதுதான்  ஆனந்தம் !

:ஞான குரு  பரன்
 தீனர்க் கருள் குகன்,
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்!

என்று பாடுவார்   எம்.எல்  வசந்த குமாரி அம்மா.

முதலில் வைபோகம் என்பது யாது , உசாவி அறிவோம்.  இதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமாயின் grandeur,   magnificence என்றெல்லாம் குறிக்கலாம். மகிழ்வும் கவர்ச்சியும் மனத்தால் ஒரு பிணைப்பும் ஏற்படுத்தும் ஓர்  உயர்  நிகழ்வு எனலாமா?

இதை ஏன்  தேர்ந்தெடுத்தோம் ?

அவை  என்பதன்   "வை"  என்னும் சொல்லையும்  "வையகம், வையம் " என்பவற்றின் "வை"  என்னும் பயன்பாட்டையும் .  வைகுதல் என்னும் சொலாக்கக்த்தையும் ஆய்ந்துண ர்ந்த பின்பு  இவ் "வைபோகத்தில்" ஈடுபடுதல் மிக்கப் பொருத்தமுடைத்தாய்  இருக்கும்.  அதனால்தான்.

வை எனின் நுகர்வோன்முன் சிறப்பாக இடப்பட்டது.(வைக்கப்பட்டது )என்பது.  bestowed,

போகம் என்னும் பதம், ஓர் இடக்கர் அடக்கல் சொல். "இவள் அவனிடம் போய்விட்டாள்"  என்று அடக்கிச் சொல்வார்கள். இந்தப் "போவது" என்பதிலிருந்து புனையப் பட்டதே "போகம்" என்பது.  ஆ>  ஆகு,  போ> போகு> போகு+அம் = போகம் என்றாகும்.  இதுவும், வேறு பல போலவே,   பேச்சு வழக்கிலிருந்து திரிக்கப்பட்ட  (புனையப்பட்ட) சொல்.

உங்கள் ஆய்விற்கு சில சமஸ்கிருதச் சொற்கள் :

vinirbhoga m. Name. of a cosmic period ;    vinirbhoga m. (probably . from  bhuj -  Name of a partic. cosmic period. visambhoga male {bhuj} separation   vRthAbhoga

போகம்  என்பது  தமிழ் மூலத்தையுடைய  ---  ஆனால்   இப்போது அயற்சொல்!  எனப் படுவது.    இரண்டு  இலக்கத்துக்குக்  குறைவான  சங்கதச்  சொற்களில்    1/3  விழுக்காடு திராவிடச் சொற்கள் என்பது டாக்டர்  லகோவரியின்  முடிவு. சங்கத்தின் ஒலி அமைப்பு  திராவிட அடிப்படையிலானது   என்பது சட்டர்ஜி அவர்களின்  ஆய்வு.  நான்  இதுவரை  கூறிய  மொத்தம் ,   சிலவே. Less  than a couple of hundreds.

" வை" தமிழே.

வைப்புத் தொகை என்பதென்ன? உங்கள் ஆய்வுக்கு.

edit reserved.



.

வியாழன், 24 ஏப்ரல், 2014

அ வை II

அ வை  என்ற சொல்லின் உருவாக்கத்தைக் கண்டு களித்தோம்.

இனி வை என்ற சொல்லில் விளைந்த இடங்குறிக்கும்  இரு சொற்களைச் சந்திப்போம்.

வை  --  வையகம்;

வை + அகம்  - இறைவனால் வைக்கப்பட்ட இடமாகிய இந்தப் பூமி என்பது. மற்றும் நாம் இனிதே வைகும் இந்த நில வுலகு. 

வை +   அம்  = வையம்., இதுவும் அதே!

வை என்ற சொல்லில் இருந்து ஒரு வினைச் சொல்லும்  தோன்றியது..   அது என்ன?

வை+ கு  =  வைகு. > வைகுதல்.  ஓரிடத்தில் தங்குதல். 

இவை எல்லாம் அவை என்னும் சொல்லுக்கு  உறவுச்  சொற்கள்


----------------------------------------------------------------------------------------------------------
The Tamil editor has  a problem.  Could not continue. Will return  later to edit.  Enjoy what is written in the mean time.  Thank you dear readers.

அவை

அவை என்ற சொல் உருப்பெற்ற வழியை ஆராய்வோம்.

வை என்ற ஓர் எழுத்துச் சொல்  பல பொருட்களை உடையது. அவற்றுள் ஒன்று, ஓர் இடத்தில் ஒன்றை இடுதல்  என்பதாகும்.  இடப்படுவது, ஒரு  பொருளாகவும் இருக்கலாம். மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்.

"திருமணத்தை எங்கே  வைத்திருக்கிறார்கள்?"

"மாநாட்டை எங்கே  வைத்திருக்கிறார்கள்?

நிகழ்ச்சி வைத்த  இடம்  "வை"  ஆகும். முதனிலைத்   தொழிற்பெயர்.

அ  -  சுட்டுச் சொல். ஆகும்.

குகையிலோ   அரண்மனையிலோ  நிற்பவன்  முதன்முதலில்  சுட்டிச் சொல்லியிருப்பான்.  நாளேற நாளேற  கைகால்களை ஆட்டிச்  சுட்டிக்கொண்டிருக்க மாட்டான். வெறுமனே  "அவை"  என்றிருப்பான்.

அவர் இவர்  என்பதிலெல்லாம்    சுட்டு உள்ளது.   கைகால்களை ஆட்டிச் சுட்டுவதில்லை.

சுட்டிப்பேசுவது அவமரியாதை  என்னும் கலாச்சாரங்களும் உண்டு.  அஃது தவிர்க்கப்படும்.

நாளடைவில்  சுட்டு பொருளிழக்கவேண்டும்.     இழந்தது.

பின்  மதிதகு பேர்கள் கூடுவதற்கு  வைக்கப்பட்ட இடம் (appointed place for assembly) அவை எனப்பட்டது.  இடப் பெயர் பின் அங்கு கூடும் புலவரையும்  (அல்லது பிற பெரியோரையும் குறிக்கும் (அப்படிக் குறித்தலை ஆகுபெயர் என்பர் நம் தமிழிலக்கணத்திலே .)