திங்கள், 7 அக்டோபர், 2019

துக்கம் சொல்லுக்கு இருமுடிபு.

இறந்துபோன மனிதனைத் தூக்கி, இடுகாட்டுக்குக் கொண்டு செல்வர்,  அல்லது சுடுகாடு கொண்டுபோவர்.  ஆகவே பிறர்கேட்பது:  எத்தனை மணிக்குத் தூக்குகிறார்கள் என்பது.  இறந்தபோது ஏற்பட்ட துன்பம் தூக்கும்போது மேலிடுகிறது,

தூக்கு >  தூக்கு + அம் >  துக்கம்.

நெடிலான முதலெழுத்து விகுதியேற்றுக் குறிலாகும்.

அரசு தூக்கிலிடும்போதும் தூக்கு என்ற சொல்லே வருகிறது. இங்கும்  தூக்கு > துக்கம் என்றே ஆகிறது.

முதலெழுத்துக் குறுக்கம்:

இதற்கு இன்னோர் உதாரணம்:  சா+ அம் =  சவம். (பிணம்).
தோண்டு+ ஐ =  தொண்டை எனினுமது.

இன்னும் வேண்டின் பழைய இடுகைகளில் காண்க.

துறத்தல் அடியாகப் பிறந்த துறக்கம் என்பதும்  உயிர்துறத்தல் கருத்தில் றகரம் இடைக்குறைந்து  துக்கம் என்றாகும்.   ஆதலின் இஃது ஓர் இருபிறப்பி ஆகும்..

தக + அனல் =  >   தக அனம் > தகனம்.

தகுந்தபடி அனல்படுத்துவது, அல்லது தகத்தக என்னும் அனலில் இடுவது.

பிழைபுகின் திருத்தம்பின்.

கருத்துகள் இல்லை: