புதன், 30 அக்டோபர், 2019

மாரன் சுகுமாரன் மாறன் என்பவை

தமிழில் மாரன், மாறன் என்று இரு ஒலியணுக்கமுடைய  சொற்கள் உள்ளன..

இதில் மாறன் என்பது பாண்டியனைக் குறிக்கும் சொல்.  சுருக்கமாகச் சொன்னால் :

மறு +  அன் = மாறன்:   அதாவது எதிரிகளை மோலோங்க விடாமல் போரில் மறுத்து நின்று வெற்றியை ஈட்டிக்கொள்பவன் என்று பொருள்.  முதனிலை  மகரம்  மா என்று நெடிலாக நீண்டது. வீரம் என்று பொருள்படும் மறம் என்பது முதனிலை நீளவில்லை. முதனிலை  நீண்ட சொற்கள் பல. அவற்றைப் பழைய இடுகைகளில் கண்டு மகிழ்க.

மாரன் என்ற சொல்  மரு+ அன் எனற்பாலது முதனிலை நீண்டு அமைந்தது ஆகும்.

மரு > மருவு:   தழுவுதல் குறிக்கும் வினைச்சொல்.

மரு +  அன்  =  மாரன்
பொருள்:  தழுவி நிற்போன். கணவன்,   காதலன்,  என்றெலாம் விரித்துக்கொள்க.

சுகுமாரன் என்பதன் முந்துவடிவம்  உகு மாரன் என்றிருந்தது தெளிவு.  உகுதலாவது  இலைபோல் வீழ்தல்.  காதலினால் வீழ்தல்.  மாரன் என்பது மேற்சொன்னதே  ஆகும்.

உகுமாரன் > சுகுமாரன்.

இது அமண் >  சமண் என்பதுபோலும் திரிபு. இவ்வரிசையில் பல காட்டியுள்ளேம்.
பழைய இடுகைகள் காண்க.

தட்டச்சுப் பிழை - திருத்தம் பின்.




கருத்துகள் இல்லை: