வியாழன், 30 டிசம்பர், 2010

ஓரினத்தவர் ஒற்றுமை??

முந்தை ஒருவழியில் வந்த இனமெனின்போர்
எந்த வகையிலும் இல்லாமல் -- செந்தண்
உறவில் ஒருங்கிருக்கும் உண்மை அரபு
கொரியர் கருதியினிக் கூறு.




முந்தை = முன்னாளில் ; ஒருவழியில் வந்த இனமெனின் = ஒரே வம்சத்தில் வந்த இனத்தவர் என்றால்;
போர் = போர்செய்தல் ;
எந்த வகையிலும் இல்லாமல் = எப்படியும் நடைபெறுதல் இல்லாமல்;
-- செந்தண் உறவில் = நட்பு நிறைந்த உறவில்; ஒருங்கிருக்கும் = ஒன்றாக இருக்கின்ற ;
உண்மை = உண்மை நிலை;
அரபு = அரபுக்களையும்;
கொரியர் = கொரியமக்களையும்;
கருதி = ஆய்ந்து பார்த்து;
இனிக் கூறு.= இனிமேல் கூறுவாயாக.

கருத்து: ஓரினத்தவர் ஒற்றுமை கொள்வர் என்பது பொய்.

கருத்துகள் இல்லை: