வெள்ளி, 19 டிசம்பர், 2025

கணம் (சொல்), வெகுளி என்பவை

 இதனை வாருங்கள் ஆராய்வோம்..

''குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது''  

என்பது குறள். வெகுளி என்ற சொல்,  சொல்லாய்வில் ஓர் ஆய்வுக்கு அருமையான சொல்லுமாகும்.  இதன் மூல வினைச்சொல்  வேகுதல் என்பது.  வேகு> வெகு> வெகுள்>  வெகுளி என்று அமைந்துற்ற சொல்லாகும். உள் என்ற விகுதி வினையாக்கத்திலும் வருமென்பதை இதனால் அறிந்துகொள்ளலாம். கடத்தல் (தாண்டிச்செல்லுதல் என்று பொருள்படும் வினை) என்பதிலிருந்து,  கடவுள் என்ற சொல் உள் விகுதிபெற்று அமைந்துள்ளதைக் காணலாம். வெகுள் என்பது ஒரு வினையிலிருந்து இன்னொரு வினை உண்டாக உதவுகிறது. இது வெகு+ உள்> வெகுள் என்று அமைந்தது.  சுரு என்ற அடிச்சொல்லிலிருந்து  சுருங்கு,  சுருள் என்ற வினைகள் உண்டாயின.  இவற்றில் சுரு+ உள் > சுருள் ஆகும். சுர்> சுரு.  சுர் என்பதே மூல அடி ஆகும்.  சுரிதல் என்ற வினையும் உள்ளது. சுரிதலாவது சுருங்கி உள்வாங்குதல் என்று விளக்கலாம். சுரிந்தோடும் நாகம் என்று ஒரு கவிதையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.

வெகுளி என்பது கோபம் ஆகும். வெகுளிக்காரன், வெகுளிப்பெண் என்ற சொற்பயன்பாடுகளும் உள.  கள்ளம் கபடு இல்லாத குணத்தினர் என்ற பொருளில் இவை வரும்.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் பெழுது அல்லது நேரம் என்று பொருள்படும்.  கண்ணிமைப் பொழுது ஆதலால்,  கண்+ அம் > கணம் என்றானது இந்தச் சொல்.  கண் இமைத்தலால் அமையும் நேரம் ஆதலின்  கண் அம் என்பவற்றால் ஆயிற்று இச்சொல்.  அம் என்பது அமைத்தல் என்பதன்  அடிச்சொல். இங்கு இது விகுதியாக வந்து  அமைத்தலை உணர்த்துகிறது.

சிலவிடத்து, விகுதி பொருளோடு இலங்குதலும் உளது.  பொருளில்லாத விகுதிகளும் உள.

ககரத் தொடக்கத்துச் சொல்,  சகரத் தொடக்கமாகவும் வரும். கணம்>  சணம் ஆனது ககர சகரத் திரிபு.   சேரல்>  சேரலம் > கேரளம் என்பதில் இவ்வாறே  ஆனது.

கணம்> சணம் என்பது பின்னும் முன்னேறி,  க்ஷணம் என்றுமானது. கணமென்பது மூலத் தமிழ்ச்சொல்  ஆகும்.  

சமஸ்கிருதம் என்பதன் பொருள்.

(க்ஷணம் என்னும் சமஸ்கிருதம்)

சமஸ்கிருதம் என்ற சொல்லில் சமம், கதம் என்ற சொற்பகவுகள் உள்ளன.  கதம் என்பது ஒலி.  கத்> கதம். கத்> கத்து என்பதில் ஒலி எழுப்புதல் பொருள். கத்> கதறு என்பதிலும் ஒலியே முன்மை அல்லது முதன்மை பெற்றது. கத்> கது> காது என்று முதனிலை திரிந்து சொல்லமையும்.  காதால் கேட்டறியும் நிகழ்வு கூறுதல் கதை ஆனது.  இது பின் முதல் நீண்டு காதை ஆனது.  காதை என்பது கீதை ஆனது  செவிக்கதை என்று பொருள்தரும்.  இது சொல்லாக்க மூலப் பொருள். கதம் என்பது கிருதம் என்று திரியும்..  சமஸ்கிருதம் என்றால் மூலத்துடன் சமமான ஒலி உடையதாகிய மொழி என்று பொருள். இதற்கு வெள்ளைக்காரன் ''நன்றாகப் புனையப்பட்டது'' என்று பொருள் சொல்லுவான்.  எதுவும் கெடுதலாகப் புனையப்படவில்லை,  எல்லாம் நன்றாகவே செய்யப்பட்டுள்ளது.  கணம் என்பது க்ஷணம் ஆனதில் ஒலிமேம்பாடு,  பிற தேயத்தாருக்கு உரியபடி செய்யப்பட்டுள்ளது. ஒலி மேம்பாட்டினால் சமஸ்கிருதமான சொல் க்ஷணம் என்ற சொல் ஆகுமென உணர்க.  இதனால் கண் என்ற மூலச்சொல்லுக்கு எந்தக் குறைவும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.




https://r.search.yahoo.com/_ylt=Awr1Te0riUZpJgIAFisj4gt.;_ylu=Y29sbwNzZzMEcG9zAzQEdnRpZAMEc2VjA3Ny/RV=2/RE=1767439916/RO=10/RU=https%3a%2f%2fwww.lexilogos.com%2fenglish%2fsanskrit_dictionary.htm/RK=2/RS=R8a0L2BoRel.nB5KCNvPw811C0s-









செவ்வாய், 16 டிசம்பர், 2025

மத்தியம் என்ற சொல்.

 இந்தச் சொல்,  எவ்வாறு அமைகிறது?  

தமிழில் இதற்குப் பல சொற்கள் வழங்குகின்றன.  நடு என்பது சுற்றிலும் ஒத்த தொலைவுடைய இடமே  ஆகும்.  இதற்குக் கேந்திரம் என்ற சொல்லும் வழங்குகின்றது. 

நடுவான ஓரிடத்திலிருந்து ஒலி எழுப்பினால்  ( கத்தினால்),  அஃது ஏறத்தாழச் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களுக்கு நன்கு கேட்கும். உறவினர்கள், தொலைவில் இல்லாமல் ( அருகில் ) இருப்பவர்கள். நடு என்பதன் முன்னுள்ள வடிவம் நள் என்பது.  இதுவும் அருகிலுள்ளோர் என்பதைக் காட்டும். கேள் என்ற சொல்லும் உறவினரைக் குறிக்கும்.  கேளிர் என்றால் உறவினர்.  ஆதலால் ஒலி சென்றடையும் தொலைவும் உறவினரும் ஒப்பிட்டு உணரப்பட்டனர்.  நடு என்ற பொருள் உள்ள நள்,  நண்-,  நண்பு,  நண்பர் என்றெல்லாம் அமைவதைக் காணலாம். நண்பு என்ற மெல்லினம் வந்த சொல்,  வல்லினம் வந்த நட்பு என்ற படி  வந்து  அண்மையில் இருந்து அன்புகொள்வோர் என்பதைக் காட்டுகிறது.

நள்தல்,  நளுதல், நள்ளுதல் மற்றும் நடுதல் என்ற சொல் வடிவங்களையும் காண்க.

கேளிர் உறவால் அருகிலிருப்போர்.  இது ஓர் உவமையால் அமைவது.  கேள், கேண்-,  கேண்திறம்>  கேந்திரம் என்பது இதனால்தான் நடுவைக் குறித்தது.  கேந்திரம் என்பது திரிசொல். திரிசொற்களை முழுமையாகத் தவிர்த்துவிடுதல் இயலாது.  கூடுமானவரை இயற்சொற்களால பாடல்கள் அமைவதை விரும்பியவர்கள் தமிழர்.  தமிழை இயன்மொழி என்று பெருமிதம் கொண்டவர்கள் தமிழர். 

பந்து என்று பொருள்படும் கேள்> கேண்டு என்ற சொல்லிலும் இந்தச் சுற்றுப்பொருள் உள்ளது.   கேள்> கேண்> கேண்+து > கேண்டு  ஆகிறது. தமிழர் சுற்று, வட்ட,ம், நடு என்பவற்றை நன்கு உணர்ந்திருந்தனர்.

முற்காலத்தில் நடுவாக ஒரு முடி அல்லது முடிச்சை வைத்துச் சுற்றிலும்  கயிறு அல்லது அழுத்தமான நூல் சுற்றிப் பந்துகள் அமைக்கப்பட்டன. நடுவைப் பற்றி அல்லது சுற்றிச் செல்லுமாறு வைத்துப் பந்துகள் அமைவுற்றதால் பல்> பன்>பன்+து> பந்து என்று சொல் அமைந்தது.   இதைச் சுருக்கமாகப்  பல்+து > பந்து என்னலாம்.  பல்+து> பற்று என்றும் வரும்.   நம் வாயிலுள்ள பற்கள், ஈறுகளைப் பற்றி நிற்பனவாதலால் ''பல்''  என்று பெயர்பெற்றன. பழங்காலத்து,  தேய்வகப்  ( rubber)  பந்துகள் இல்லை. இதை அறியாதான், பந்து என்பது தமிழ்ச்சொல் என்று அறியான்.

நடு என்பது சுற்றுவட்டதைத் தழுவி நிற்கிறது. தழுவி நிற்றலாவது, மருவி நிற்றல்.  இரண்டிற்கும் பொருண்மை ஒன்றாககவே பொலியக் காணலாம். ஆகவே மத்தியம் என்ற சொல் இவ்வாறு அமைந்தது.

மரு> மருத்து> (இடைக்குறைந்து) > மத்து.  நடுவில் வைத்துச் சிலுப்பித் தயிர் கடைவர்.  பருப்பும் கடைவர்.  ( சுற்றுவட்டம் அனைத்தையும் நடுவிலது தழுவி நிற்கிறது, அல்லது மருவி நிற்கிறது.)

சுற்றுவட்டத்தை மருவி நிற்பது நடுதான்,  மருத்து> மத்து > மத்தியம். ( சுற்று வட்டத்தை மருவி இயல்வது என்று பொருள்.

மத்தியம் என்ற சொல் தமிழிலும் வழங்குகிறது,  சமஸ்கிருதத்துக்கு  ( இம்மொழிக்குச் சங்கதம் என்றும் பெயர்) உரிய சொல்  மத்தியம்..

சமஸ்கிருதத்தில் இன்னும் சுருக்கி, ''மத்ய''  என்று அமைத்தனர்.

மத்திய என்றால் சுற்றினை மருவி இயன்ற நடு என்று விரிக்க.

மரு என்பது ( மருவு - வினைச்சொல்),  சுற்றுவட்டத்தினை சமதொலைவில் மருவி நிற்பதான நடுவினது ஆகும்.

மத்தியம் என்பதன் தமிழினை அறிந்தீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை












சனி, 13 டிசம்பர், 2025

''துவஜம்'' என்ற வடசொல்லின் தமிழ்மூலம். ( ''கொடி'')

 துவசம்  ( துவஜம்) என்பது கொடி என்று பொருள்தரும்.  ஒரு மரத்தண்டில் கட்டி ஏற்றிப் பறக்கவிடுவதற்கான சீலையே  கொடி அல்லது துவஜம் என்று சொல்லப்படுகிறது. 

காற்று  வீசுகையில் அங்குமிங்கும் மடங்கி மடங்கி யாடுவதைக் காற்றில் துவளுதல் என்று சொல்வர்.  துவளுதல் என்பது வளைதற்கருத்து.

கொடிகள் பலவகை.  வெற்றியின்போது ஏற்றப்படுவது  வெற்றிக்கொடி.   அன்ன சத்திரத்தில் ஏற்றி  அறிவுறுத்துவதற்காக வைக்கப்படுவது  அன்னக்கொடி ஆகும்.  பசித்தோர் அங்குச் சென்று உணவு பெற்றுக்கொள்ளுவர். பெரும்பாலும் விலையின்றிப் பெறும் உணவு அதுவாகும்.

அழுக்குத் துணியைக் கழுவுவதற்கு அல்லது துவைப்பதற்கு ,  துவைத்தல் அல்லது தோய்த்தல் என்பதுண்டு.  சலத்தில் (ஜலத்தில்) வைத்துத் தூய்மை செய்வதால்  ''சலவை''  என்பதுண்டு.  சலசல என்ற ஒலியுடன் ஓடுவதால் சலம் என்ற தண்ணீரின் இன்னொரு பெயர்.. இது பின் ஜலம் ஆனது.    சலம் அல்லது ஜலம் என்பது ஒலிக்குறிப்பு  ஆதிய சொல். (ஓலிக்குறிபை ஆதியாக உடைய சொல்.  சலக்கிரீடை  ( ஜலக்கு இரு இடை) என்பது நீரின் இடையில் இருப்பது என்பதுதான்,   ஜலக்கு = ஜலத்திற்கு.  ( ஜலம்+ கு =  ஜலத்து + இல்+ கு), இங்கு அத்துச் சாரியையும், இல் என்னும் இடப்பொருட் சொல்லும் ( உருபு) ஜலக்கு என்பதில் விடுபாடு ஆகும்.  பின் கு+ இரு+ இடை என்பவை பிரிந்து தனியாயின. தலைக்கு வைப்பது தலைக்கிரீடம்.  தலைக்கு+ இரு+ இடம்= தலைக்கிரீடம்,  இது முதற்குறைந்து கிரீடம் ஆனது.

கிரீடம் என்பது ஒரு METANALYSIS.  பிறழ்பிரிப்பு.   இச்சொல் பின் தனிச்சொல் ஆனது.  மொழி இப்படியும் வளரும்.  இதை எவரும் உணர்ந்து எழுதியிருக்கவில்லை யானறிந்தமட்டும்.

துவளும் இயல்பினதான கொடி,  துவசம் என்றே வழங்கியது.  பின்னர் அது துவஜம் ஆயிற்று.  துணி என்ற சொல்,  அது துணித்துப் பயன் கொள்ளப்படுதலால் வந்த பெயர்.   துணித்தல் என்றால் வெட்டுதல்.  வேட்டி என்பது வெட்டு என்ற சொல்லால் உணடானதே.  முதனிலைத்  திரிபு.

துவஜம் என்பதற்கு மற்றுமொரு பெயர் வேண்டின்,  காற்றாடுசீலை என்று தனித்தமிழில் சொல்லலாம்.  அது துவசம் ( துவசு+அம்) என்பதே.சு  என்பதுவும் ஒரு தொழிற்பெயர் விகுதியே. பரிசு என்பதிற்போல.  பொருளின் வரவைப் பெறுவோன் வாரிசு.  வரு+ இ+ சு> வாரிசு.  இது ஒன்றும் உருது அல்ல..  உருது அதைத் தமிழிலிருந்து பெற்றுள்ளது.   மூலச்சசொற்கள் தமிழில் உள்ளவை.  வரு என்பது வாரி என்று வந்தது வியப்பில்லை.   வரு> வாரீர் என்று அமைவது காண்க. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை