வியாழன், 27 ஜூன், 2024

இலத்தீன் இலக்கணமும் தமிழும்.

 இலத்தீன் மொழி, சமஸ்கிருதம், தமிழ்  ஆகியவற்றிடை ஒற்றுமை ஒன்றுள்ளது. இத்தகைய ஒற்றுமை உள்ள மொழிகளில் இன்னும் இளமையுடன் எழில்காட்டும் மொழிகளில் தமிழ் சிறப்பினைப் பெறுகின்றது.தமிழில் வினை முற்றுக்களுக்கும் வினையெச்சங்களுக்கும் பொருள் தெரிவிக்கின்றன. வந்தான் என்பது வேறு,  வந்து  உண்டான் என்பது வேறு. வந்த பையன் என்றால் இங்கு வந்த என்பது வேறுபொருள் தருகிறது.  முற்று, எச்சம் என்றெல்லாம் வேறுவேறு பொருளைக் காட்டாத புத்துலக மொழிகளில்  பேசிப் பழகியோர் தமிழைப் பேசுகையில் இவற்றில் (பயன்பாட்டில்) தடுமாறுவர். உமது மொழி மிகவும் கடினம் என்று கவலை கொள்வர். சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்கவந்தவர்,  "தம்பீ!  நீ சாப்பிடு போச்சி?" என்று கேட்கிறார். நம் மொழி அவர்களுக்கு எளிதாய் இருப்பதில்லை. இலத்தீனும் சமஸ்கிருதமும்  தமிழைப் போன்று வாக்கியங்களை அமைக்கின்றன.

பெயர்ச்சொற்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு  வேற்றுமை என்பர். இவற்றுக்கு உருபுகளும் உள்ளன.

ஆங்கிலத்தில் இது declensions of the noun எனப்படும். இது பழைய ஃபிரஞ்சு மொழியிலிருந்து வந்தது என்பர். அதற்குரிய சொல்: clinaison  என்பதாகும்.  கிளத்தல் என்ற தமிழ் வினைச்சொல்லுடன் ஒப்பீடு செய்யத்தக்கது இது ஆகும்.  கிள என்பதை cli என்பதுடன் ஒப்பிட்டு நோக்குக.  de என்பது முன்னொட்டு.

இலத்தீனில் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் என்பதறிக.

மெய்ப்பு பின்னர்

மீள்பார்வை: 29062024 0354

செவ்வாய், 25 ஜூன், 2024

செருப்பு, பாதரட்சை, மற்றும் "சக்கிலியன்" முதலியவை

 முன் செய்த ஆய்வுகளின் பட்டியல்:

சக்கிலியன்  https://sivamaalaa.blogspot.com/2015/11/blog-post_15.html  

சக்கிலியன் 2  https://sivamaalaa.blogspot.com/2015/11/ii.html

சக்கிலியன் 3  https://sivamaalaa.blogspot.com/2015/11/v-iiienpathaka.html 

சக்கிலியன் 4  https://sivamaalaa.blogspot.com/2015/11/iv.html 

சக்கிலியன் கூட்டுச்சொல் https://sivamaalaa.blogspot.com/2015/11/blog-post_26.html 

செவிலி, சக்கிலி இன்னும்... https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_18.html

அடிவைப்பதற்குச் செருப்பு தந்து, இடமளிப்போன் என்ற பொருளில்:

அடிக்கு  - காலடிக்கு,

இல் -  இடம், செருப்பு செய்துதருவதன் மூலம்.

இ -  இங்கு, மனிதருக்கு  என்பதாகும்.

அன் -  ஆண்பால் விகுதி.

மறுபார்வை:

அடிக்கு + இல் + இ + அன் >  அ(டி)க்கிலியன்> சக்கிலியன்.

இங்கு இல் என்பது இடம்,  எ-டு:  கண்ணில், மூக்கில், மதுரையில்.

இல் > இலை.  ( கொடி முதலியவற்றுடன் ஒப்பிடுகையில், இலை விரிக்கத்தக்க தாகவும்  இடமுடையதாகவும் உள்ளது. )

அகர வருக்கம் சகர வருக்கமாகவும் மாறும். எ-டு: அமணர்> சமணர்.

வல்லொலியாக டி என்பது ஒழிவது, சொல்லியலில் இயல்பாகும். எ-டு: பீ(டு)மன்> பீமன். தவறுதல் > தவல்  (வல்லொலி று -வுடன் இடையின ஒலியும் சேர்ந்து மறைந்த சொல்.)  பழைய இடுகைகளில் பல உள்ளன. 

இது (சக்கிலியன்)  ஒரு பல்பிறப்பிச் சொல்.  இது தமிழ்த் தொழிலாளிக்கு உண்டான பெயர் என்று மலையாள அகரவரிசைகள் சில கூறுகின்றன.  அதனால் இது தமிழ் மூலங்கள் உடைய அடிச்சொற்களிலிருந்து அமைந்திருத்தல் தெளிவு.. சாக்கியமுனியைப் பின்பற்றியோர் பல சாதியினர். அதனால் இப்பெயர் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு குறைவாகும். ஆனால் சாக்கிய என்பதற்கும் இது பொருந்திவருகிறது.

செருப்பு>(   செருப்பல்)> செப்பல்.  ருகரம் குன்றி அல் விகுதி பெறுதல். இடைக்குறையும் விகுதிபெறுதலும்.

பாதம் + இரட்டு+ சை: பாதரட்சை,  இரட்டு- இரண்டு,  சை - விகுதி. புனைவுச்சொல். இங்கு டு என்ற வல்லொலி ஒழிக்கப்பட்டது காண்க.  பாத + அருட்செய் > பாதரட்சை எனினும் ஏற்றற் குரியதாகலாம். பா த அரண் செய் என்ற தொடரும் மருவி வரல் கூடும்

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின். 

ஞாயிறு, 23 ஜூன், 2024

முகரை என்ற சொல். எவ்வாறு உண்டானது?

 இந்தக்கதையை விரிவாக இல்லாமல் சுருங்க அறிவோம்.

மு  -  முன்பக்கம்.

கு  -  சேர்ந்திருப்பது.   சென்னைக்கு, மதுரைக்கு என்பவற்றில் வரும் கு என்னும் மரம்வாழ் மாமுன் காலத்துச் சொல். இன்று உருபாகவும் சேவை செய்கிறது.

அரு -  பக்கத்தில்.   இது அருகு என்பதன் அடிச்சொல்.

ஐ   -  என்பது மேல் என்று பொருள்தரும் சிவனின் முன் காலச் சொல்.

மு+ கு+ அரு+ ஐ >   முகரை.

முகம் எனின்  மு கு அம்.

அம் என்பது அமைந்துள்ள உறுப்பு என்பது.

இதன் காலத்தை பரஞ்சோதி முனிவர் நிட்டையில் அமர்ந்து யோகமுத்திரை இட்டுச் சிந்தித்து அறிந்துகொண்டார்.

நிட்டை என்பது நீடு(தல்) என்ற வினை, ஐ விகுதி பெற்றுக் குறுகிய சொல்.

நீடு > நிட்டை  (நீடு+ ஐ)

தோண்டு+ ஐ > தொண்டை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.