திங்கள், 22 நவம்பர், 2021

மலரோடு மதுரம்

 மது என்ற சொல்லை நாம் அணுகி அதனுட் புகுந்து பொருள்கண்டுள்ளோம். அவை இங்கு உள்ளன:

மது:   https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_12.html

தேன்மது  https://sivamaalaa.blogspot.com/2016/10/blog-post_27.html

இன்னும் சிலவும் உள. அவை பட்டியலில் கண்டுகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html என்னும் இவ்விடுகையிலும் காணலாம்.

மது + உரு + அம் =  மதுரம்.

மது - மயங்குவதற்கு,  உரு -  வெளிப்பாடு,  அம் -   அமைத்துத்தருவது,  மேலும் அம் விகுதி.  

து என்பது, வல்லினத் தகர ஒற்றின் மேலேறிய உகரமாதலின்,  மது உரு என்ற இரு சொற்புணர்ச்சியில் இரட்டிக்கும் என்று வாதிட்டாலும்,  பின்னர் இடைக்குறையும்,  மத்துரம் > மதுரம் ஆம் என்பதால் இந்த வாதம் நொடித்த வாதம்.  மேலும் இது வாக்கியச் சொற்சந்தி அன்று. இரட்டித்தலை எழுப்பாமை நேரத்தை மீத்துத்தரும்.

மயக்குக்கு உருத்தருவதாகிய தேன் இனிமை, மதுரம்.

மலரோடு மதுரம் மேவும் -  எனின், மலரில் இனிமை மேலேறிய(து) என்பது.

மனங்காணும் -  மவுனமானது என்பது பொருள்.

மோகன இராகம் -  காதலைத் தூண்டும் இராகம் அல்லது பாட்டு.

மது உரம் > மதுரம், உகரம் கெட்டது; உரம் - தெம்புதருவது எனினுமாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

குப்பை வீசும் குதூகலம்

 குப்பை எறிகின்ற முட்டாள் --- பிறரொடு

கூடிவாழ் தன்மையை எட்டான்!

எப்பையி லேனும  திட்டு --- அதை

எறிந்திடக் குப்பையின் தொட்டி.


இருப்பதை ஈங்குகண் டானோ --- அவன்

இருப்பி  னிறந்தவன்  தானோ? 

பொறுப்புடன் காரிய மாற்ற ---  அவன்

புகுந்திடல் இன்றிலே மாற்றம்.


வீசிய குப்பைகள் தம்மால் ---  வெள்ளம்

வீடு வரைமிகுந்  தேறி,

நாறிய துண்டடா  சென்னை  ----   செய்தி

நானிலம் கேட்டது மென்ன?


பொருள்:


எட்டான் -  அடையமாட்டான்

எப்பையி லேனும் -- எந்தப் பையிலாவது

(எப்பையிலேனும் அது இட்டு - எப்பையிலேனுமதிட்டு)

குப்பையின் தொட்டி -  வேண்டாத, வீசுகிறவற்றை இடும் கலம்

ஈங்கு - இங்கு

இருப்பின் இறந்தவன் -  வாழுகையில் பிணமானவன்

இன்றிலேமாற்றம் -  இல்லாவிட்டால் ஏமாற்றம்

வீடுவரை -   வீட்டினுள்ளும் என்க.

நானிலம் -  உலகம்.

கேட்டது - தொலைக்காட்சி முதலியவற்றால் அறிந்தது.



 

ஞாயிறு, 21 நவம்பர், 2021

வேற்றுமை முற்றுவினை விகுதிகள்

 அம்மா வந்தது,  தங்கை பாடியது,  அக்காள் காய்கறி வெட்டியது என்றெல்லாம் உயர்திணைப் பாங்கிலன்றி  இவர்களைச் சொல்வதென்பது தமிழ் இலக்கணப்படி ஏற்கவியலாதது என்றபோதிலும்,  தமிழகத்துச் சிற்றூர்களில் இவ்வாறு சில குழுக்களிடையே பேச்சு நிகழ்வது உண்மையாகும். ஆள் என்ற பெண்பால் விகுதி பெண்ணாட்சி குறிக்கும் ஏற்ற நிலையிலிருந்து பணிவின்மை குறிக்கும் நிலைக்கு இறங்கிவிட்டதனால்,  அப்பணிவினைத் தக்கவைத்துக்கொள்ளும் சிறந்த நோக்குடன் தான் இவர்கள் இவ்வாறு அஃறிணையில் பேசுகின்றனர் என்பது உண்மை. இதனை இலக்கணியரும் ஒப்புவர் என்பதனுடன், அதனை "வழுவமைதி" என்றும் ஏற்றுக்கொள்வர் என்பது நீங்கள் அறிந்ததுதான்.

சமஸ்கிருத மொழி நன்கமைக்கப்பட்டு அப்பெயரில் குறிக்கப்பட்ட காலத்தில், தமிழகச் சிற்றூர்வழக்கையே தன் வினைமுற்றுக்களில் பயன்படுத்திக்கொண்டது. அதே  இதே உதே  ( உது ஏ ) என்ற தமிழ்வடிவங்களில் உள்ள முதனிலை எழுத்துக்களை விலக்கிவிட்டு,  ஈறுகளைச் சமஸ்கிருத இலக்கணம் ஏற்றுக்கொண்டது.  மேலும் திணைப் பாகுபாட்டுக்கும் இடந்தரவில்லை.  எடுத்துக்காட்டாக:

நந்தனுதே! ஶைலசுதே! ஹர்ஷரதே!

கோஷரதே! ஹாஸரதே! மத்யகதே!

என்பன காண்க.

அள் அன் விகுதிகளைப் பான்மை காட்டுமாறு சங்கதம் பயன்படுத்துவதில்லை. இதனை ஒரு வேறுபட்ட முன்போக்குச் செலவு என்றும் சிலர் கருதலாம்.

அண்ணன் என்ற தமிழ்ச்சொல்,  ஏ என்னும் விளி பெற்று, அண்ணனே என்று வரும்.  விகுதி பெறாமல்,  அண்ணே என்றும் அண்ணா என்றும் விளியில் வரும். என் பிரிய பதியே என்று தமிழில் வருதலைவிட்டு,  பிரியபதே என்று சங்கதத்தில் வருவது  அண்ணனே என்று வாராமல் அண்ணே என்று சிற்றூர்களில் பேசப்படுவது போலுமே ஆகும்.

வினை எச்சத்தையே முற்றாகப் பயன்படுத்தி மலையாளம் முதலியவை புதுமை மேற்கொண்டன என்னலாமோ?  தமிழிலும் வினைமுற்று வளர்ச்சி என்பது பிற்காலத்தது ஆகும்.

( சேர்க்கப்பட்ட கூடுதல் பாகிகள் ( பாரா) காணாமற் போயின.  சில தட்டச்சுப் பிறழ்வுகளும் காணப்பட்டன.  பின்னவை திருத்தப்பட்டன).

(Different devices were used for additions to the post. This could have been the cause.

This will be  monitored. )