வெள்ளி, 19 நவம்பர், 2021

மேற்றிராணியார், அதிமேற்றிராணியார் ( bishops arch~)

 இப்போது கத்தோலிக்க மதத்தில் உள்ள "கண்காணியார்களுக்கு"  ( bishops )  பெரும்பாலும் கிறித்துவ  வெளியீடுகளில்  மேற்றிராணியார்,  அதிமேற்றிராணியார் என்ற பதங்கள் வழங்குகின்றன. 

இப்பெயர்களைப் பார்ப்போம்.

மேல்+ திரு = மேற்றிரு என்று வரும்.

மேல்+ திரு + அரண் + இ > மேற்றிரணி.

திரு என்பதில் ஈற்று உகரம் கெட்டது.  ஆகவே மேற்றிர் + அரணி > மேற்றிரணி என்றாகும்.

இது எளிதாகப் பலுக்குதல் பொருட்டு,  மேற்றிராணி  ஆயிற்று.  இது வழக்கிலும் ( அதாவது பயன்பாட்டிலும் ) ஏற்பட்டிருத்தல் கூடும். புனைந்தோரும் அவ்வாறு நீட்டியிருக்கலாம்.

ராணா, மகாராணா என்பவை: அரணா,  ராணா, என்று வந்திருப்பதால் இது மேற்றிராணி என்று வருவது சரியான திரிபே ஆகும்.  இதுபற்றிய இடுகை காண்க.

https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

அரண் உடையவனே அரசன்.  ஆதலின் அரணன், அரணா, ராணா என்பவை அரசனுக்கு வழங்கிய பெயர்கள். தமிழ்நாட்டுக்கு அப்பால் அன் விகுதி வழங்குவது அருமை.

இது மேற்றன் என்ற சிரியப் பதத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்டதுண்டு.

எனவே மேற்றிரு அரணியே மேற்கண்டவாறு திரிபுற்றது.  அரணி என்பது காவலர் என்று நல்ல பொருள் தருகிறது.

மேல் + திறன் > மேற்றிரண் என்று திரிதலும் கூடும்.  மேற்றிரன் > மேற்றன் என்றும் திரிதலும் கூடுவதே.

மேல்+திரு+ஆணை+ ஆர்>  மேற்றிராணையார்> மேற்றிராணியார் என்றும் ஆகலாம்.  இது பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


கோவிட் ஆனாலும் குற்றவாளிகள் ஓய்வுகொள்ளவில்லை(வன்புணர்வு)

 கோவிட் சுழலில் நாடு சிக்கியிருக்கலாம்,  குற்றம்செய்வோர் தங்கள் நடபடிக்கைகளில் குன்றிவிடவில்லை.  இங்கு குறிக்கப்படும் குற்றவாளிக்கு நீதிமன்றம் சரியான தண்டனை வழங்கியுள்ளது. செய்தியைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

https://theindependent.sg/man-force-feeds-alcohol-to-13yo-and-brutally-rapes-her-repeatedly-for-2-hours-at-kallang-riverside-park-appeals-for-lighter-sentence/ 

“The victim suffered serious harm as he had used significant violence against her in the course of the assaults... in addition, the appellant exhibited significant opportunism, took deliberate steps to conceal his offences.



பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

வியாழன், 18 நவம்பர், 2021

பாதிரி என்னும் தமிழ்ச் சொல்

 கிறித்துவ மதப் பூசாரிகட்குப் பெரும்பாலும் "பாதிரியார் " என்று சொல்வதுண்டு.  இது கிறித்துவ மதம் பின்பற்றப்படும் நாடுகளில் பூசாரிகட்கு வழங்கும் பெயர். கத்தோலிக்கர் வாழும் இத்தாலி, ஃச்பெய்ன் முதலியன எடுத்துக்காடுகள்.  இந்நாடுகளில் பூசாரியைப் "பாட்ரி" என்பதால், தமிழரும் அதைப் பின்பற்றி  "பாதிரி" என்றனர். இந்த அயற்சொல் தமிழில் சற்று மென்மையாக ஒலிக்கப்பட்டு வழங்கிவருகின்றது. இது எழுத்துப்பெயர்ப்புச் சொல் ஆகும்.

பாதிரி என்று ஒரு தமிழ்ச்சொல்லும் உள்ளது. இது ஒரு பொன்னிறமான மலரையும்  செந்நீலமான இன்னொரு மலரையும் குறிக்கும்.  நம் ஒளவை மூதாட்டி,  இப்பாதிரி மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்பதை ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். சொல்லியும்  அல்லது ஏவினாலும் செய்யாதவனுக்கு இது உதாரணமாகும்.  பூக்காமல் காய்ப்பது பலாமரம்.  பூத்துக் காய்ப்பது மாமரம்.  பூத்தாலும் காய்க்காது பாதிரி என்பது.

பாதிரி ஒரு பூவைக் குறிக்குமானால் அது தமிழ்ச்சொல்.  பாதிரி என்பது கிறித்துவ ஐயரைக் குறிக்குமானால் அது அயற்சொல்லின் எழுத்து அல்லது ஒலிபெயர்ப்பு.  (Padri).  கிறித்துவக் குருக்கள் என்று சொல்வதுண்டா  என்பதை நேயர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வரும் இடுகைகளில் ஒன்றில், மேற்றிராணி, அதிமேற்றிராணி என்று வரும் சொற்களின் அமைப்பை ஆராய்வோம்.  இதை நீங்கள் அறிந்திருந்தாலும் பின்னூட்டம் இட்டுத் தெரிவிக்கவும்.

ஆனால் "பா" என்ற ஐரோப்பியச் சொல்,  அப்பா என்பதன் தலையிழப்புச் சொல் ஆகும். [ (அப்)பா.]

எங்கள் நன்றி.

மெய்ப்பு பின்.