சனி, 21 ஆகஸ்ட், 2021

அம்மா அருள் பொழிக




படம் எடுத்தவர்  திரு ஜீவா கரு.


கவிதை:



சிந்துகவி


விதிமுறைகள் 
(கோவிட் கட்டுப்பாடு):


 புதிய விதிகளைக் கண்டனர் ----  நோய்ப்

போக்கின் கடுமையை   வென்றிட,

இதுவே செலும்வழி என்றனர் ---  பிறர்

எவரும் வராநிலை கொண்டனர்.    (1)


பூசை நடத்தல்


சிலவரே ஆதரித்  தோர்வர  --- பூசை

செவ்வனே சென்றதே துர்க்கையின்,

மலரழ கேயலங்  காரமே --- கண்டு

மலைத்தன நம்மனோர் உள்ளமே!     (2)


அம்மனை வேண்டுதல்


நோய்வரும்  வாயடைப் பாய்நலம் ---  அம்மா!

நுடங்கா  மலேவரச் செய்திடு!

வாய்வயி றானவை நெஞ்சுடன் ---  நல்ல

வன்மை அடைந்திட நல்குவாய்.    (3)


பூசை முடிவு


ஆவன செய்தனர் பூசைஓர் --- மணி

அடுத்து வராமுனம் ஆனதே!

மேவு மகிழ்வொடும் வந்தவர்  ----  அருள்

பெற்ற நிறைவொடும் ஏகினர்.  (4)


சிவமாலாவின் கவிதை.


பொருள்:

செலும் - செல்லும் (தொகுத்தல் விகாரம்)

நோய் வரும் வாய் - நோய் வரும் வழி.

நலம் - எல்லா நலமும் அல்லது பிற நன்மை யாவும்

நுடங்காமலே - உடல்நலம் கெடாமல்.

பிற நலம் வந்தாலும் உடல்நலம் கெட்டால் பயனில்லை.

வராநிலை -  தடை.

வராமுனம்  -  வரா முன்னம்.   (முன்னம் -  முன்பு.)

நம்மனோர் -  நம் மக்கள்




அறிக மகிழ்க.

மீள்பார்வை பெறும்.

   

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மழை வெள்ளம் சிங்கப்பூர்

 

நீரிலை என்று நிரப்போர் ஒருபுறம்

மாரியின் பொழிவில் மாள்பவர் ஒருபுறம்

வாரி சூழுல கில்காண் வருத்தும்

மாறு பாடுகள் மலைவுறப் பலவே.


நிரப்போர் -  கெஞ்சுவோர்

பொழிவு - கொட்டுதல்

வாரி - கடல்

மாறுபாடுகள் -  எதிர்மாற்றங்கள்

மலைவு - கடவுள் ஓரிடத்தில் ஒன்றை அதிகமாகவும் 

இன்னோரிடத்துக் குறைவாகவும் தருதல் ஏன் என்னும்

ஐயப்பாட்டு நிலை  உண்டாகுதல்.





கொஞ்ச நேர மழை.  வெள்ளப்பெருக்கு.  தொடர்வண்டி மேம்பாலம் அருகில்.




For more news on this topic:  pl click,

கோவிட் நிலையில் பூசை. ஆள்நுழைவுக் கட்டுப்பாடு.


 கோவிட்டுக்கு முந்திய நாட்களில் இப்பூசைக்கு 300 பேர் வரை ஆதரவளிப்பர். பெருங்கூட்டம் வந்து, அன்னதானம் பூசை அபிஷேகம் ஹோமம் ஆகியவையும் நடக்கும்.  இப்போது கோவிட் என்பதால்  அமைப்பாளர்கள் தவிர வேறு யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. பூசை நடைபெறுகிறது. ஓரிருவரே படத்தில் காணப்படுகின்றனர்.  கோவிட்டினால் அச்சம் மிகுதியாக வுள்ளது. நம் இறைவி சிவதுர்க்கை எல்லோரையும் காக்கவேண்டும். ஒவ்வோருயிரும் அம்மையின் அருள்பெற்று வாழ்க,

கட்டுப்பாடுகள் இல்லாத காலத்தில் பெருந்திரளானவர்கள்  கூடியபோது எடுத்த படம் காண்க:

சுமங்கலிப் பூசையில் பெருந்திரள்.

அந்த நன்னாள் அணுகுமோ  மீண்டும்?
சொந்தம் சூழ்வரு மக்கள் யாண்டும்!
மந்தம் வீழ்ச்சி மாட்சியிற் குந்தகம்
நொந்ததிவ் உலகே உந்துதல் ஒழிந்தே.

----சிவமாலையின் கவிமாலை.

யாண்டும் - எப்போதும்.
சூழ்வரு -  சுற்றி நிற்கும்
மந்தம் - நிறைவின்மை
குந்தகம் - கெடுதல்.
உந்துதல் - உற்சாகம்.



தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன 1427  21082021
If our readers gain access to the compose window by error, please exit without changing 
the text.  By moving your mouse over the text, you may effect unwanted changes and
errors.  Please cooperate.