திங்கள், 11 ஜனவரி, 2021

ரகர வருக்கங்கள் தோன்றலும் மறைதலும்.

 இடையில் ஒரு ரகர வருக்க எழுத்துத் தோன்றிச் சொல்லமைதலும் பின்பு அவ் வெழுத்து மறைதலும் பழைய இடுக்கைகளில் சிலவினில் ஆயப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை முன் கொணர்கவெனில் உங்கட்கு அது எளிதாயிருக்கும்.

உங்களுள் புதுவரவினராய் உள்ளோர்க்கு அதனை அறிமுகம் செய்யும் வண்ணம் மீண்டும் இங்குச் சில சொல்வோம்.

உ என்பது முன் என்று பொருள்படும் சுட்டடிச் சொல். அ, இ, உ என்பனவிலே உகரமும் ஒன்றாதல் இதனின்று அறிந்துகொள்ளலாம். இஃது  "து" என்னும் மிகுதிபெற்று  உது ஆகும்.  பின் உது  (முன்னிருப்பது),  அதுபின் இகரம் பெற்று உதி > உதித்தல் ஆகும். தகர வருக்கம் பெரிதும் சொல்லாக்கத்திற்குப் பயன்படுவது காண்க. இங்கு,  உது என்பதில் து;  தல் என்ற விகுதியிலும்  து+அல் என,  தகரவருக்கமே வரவுகொண்டது.

உதி என்பதே முன் தோன்றுதல் என்று பொருள்தரும் வினைச்சொல். இது எந்த இலக்கியத்திலும், காணப்பட்டாலும் படாதொழிந்திருந்தாலும் தமிழ்ச்சொல்லே ஆகும். இது பிறமொழிகளிலும் பின் புகுந்தது தெளிவு.  சீனமொழியிலும் "ஊ" என்றால் முன் உள்ளதெனற்பொருட்டு.  ஊ போ என்றால் இருக்கிறதா இல்லையா என்பது. ஹோக்கியன் கிளைமொழியில் நோக்குக.

மலாய் மொழியிலும் உள் என்பது உலு என்று வருவதும் காண.   உலு பாண்டான்,  உலு திராம்,  உலு சிலாங்கூர் எனக் காண்க. இன்னும் உலக மொழிகளில் தேடி மகிழுங்கள்.

தோன்றுதலென்பது  உது > உதி > சுதி  என,  ஒலி முன் தோன்றுதல் வரவுபெறும்.இது சுதி > சுருதி என வரும்.  தோன்றுதற் கருத்தமைவில், சுதி என்பது  பின்பு சுருதி  என இடைமிகை ஆயிற்றென்க.  கோவை என்பதும் ஒரு ரகர ஒற்றுப் பெற்று கோர்வை எனப் பேச்சுவழக்கில் காணப்படுகிறது.  அது ( கோர்வை) வழுச்சொல்லா அன்றா என்பதன்று ஆய்வு. ரகர வருக்கங்களிலொன்று தோன்றுவது இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது. மனித நாவு அப்படி இயல்கின்றது.  அவ்வளவே நாம் சுட்டிக்காட்டுவது.  இனி, சேர் என்பதும் ரகர ஒற்று இடைக்குறையும்.  சேர் > சேர்மி > சேமி. இவையே அன்றி,  குழுமி > கும்மி என்ற பிற எழுத்துக்களுகம் இத்தகு தாக்கம் பெறும்/

கருமி பண்ணுதல் :  கருமி > கம்மி  குறைத்தல்.

வானம் கம்முதல்:  கருமுதல் > கம்முதல்,  மற்றும் கம்மல்.

ரகர வருக்கம் தொலைதலும் தோன்றலும் காணலாம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



சனி, 9 ஜனவரி, 2021

வர்மா என்ற பட்டப்பெயர்

 வர்மா என்பதன் சொல்லமைப்பினைக் காண்போம்.

அதியமான்  ம  லையமான்  சேரமான் ( சேரமான் பெருமாள்)  என்ற சொற்களை முன்னர் நீங்கள் எதிர்கொண்டிருந்தீர்கள்.  இச்சொற்களில் வரும் ~மான் என்பது மகன் என்பதன் திரிபு என்பர்.  பெருமகன் என்பதும் பெருமான்,  ( பெம்மான் ) என்று திரியும். எம்பெருமான் என்பதும் எம்மான் ஆகும்.

மன்னர்கள் என்பவர்கள் ஓர் குலமாக வாழ்ந்து மறைபவர்கள். தாத்தா, அப்பன் பிள்ளை என அவர்கள்  அடுத்தடுத்து மன்னர்கள் ஆவர். ஆகவே  ஒரு வழியாக வருபவர்கள் இவர்கள். சிலவேளைகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் இத்தகு தொடர்வரவைக் குறிக்கக் கூடியதாய் இருக்கும்.  

(தொடர்) வரு அரசு பரம்பரையினர்,  வருமகன் >  வருமான் >  வருமா >  வர்மா என்று தங்களைக் குறித்துக்கொள்வது  அவர்களுக்குப் பெருமிதம் தரும்.  அதில் ஆண்டுகள் பல கடந்தபின்,  இச்சொற்களின் புனைவு வரலாறு மறக்கப்பட்டபின் இவை மிகுந்த உயர்வும் மதிப்பும் பெற்றுவிடும்.  இதுபோன்ற பட்டப்பெயர்கள், மரபுப்பெயர்களில்  பொருள் தெரியாவிட்டால்தான் வியந்துபார்த்துப் போற்று நிலையை  அடையும். இவ்வாறுதான் பல பெயர்கள்  உயர்வு பெற்றன.  எடுத்துக்காட்டு: காந்தி என்ற பெயர். நறுமணப்பொருள் விற்போர் என்று பொருள்படும் இச்சொல்லை பலர் பெயரில் ஒட்டிக்கொள்வதைக் காண்க.

இவ்வாறு வர்மா என்பது குடும்பத் தொடர்வரவு உடையோர் என்ற பொருள் உடையது.

சார்ந்துவாழும் பூசாரிமக்கள்,  சார்+ மான் >  சார்மா > சர்மா என்று வரும். ஓர் அரசரைச் சார்ந்து இவர்கள் பூசை முதலியன செய்து பெருநலம் பெற்றவர்கள் என்பது பெயர் காட்டுவது. முதலெழுத்துக் குறுகிய சொல்.  சார் > சர்.

chaar+maan > chaar + maa > shar maa > sharma.

இதனையும் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2012/06/blog-post.html

இவை விழிப்பத் தோன்றாத சொற்கள்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.








ர்


வெள்ளி, 8 ஜனவரி, 2021

சஞ்சலம்

 மனம் ஒரு நிலைப்படாமல் இடர்ப்படுதலும் ச.லிப்பு என்றே சொல்லப்பெறும். இதன் அடிச்சொல் "சல்"  என்பது.

சல்லுதல்  - சல்லடையால் சலித்தல்

சலித்தல் -  பெரிது சிறிது வேண்டியது வேண்டாதது  என,  சிறு துளைகள் உள்ள ஏனத்தால் பிரித்தெடுத்துத் தூய்மை செய்தல். துளைப்பாத்திரத்தால் கூலங்களைச்  சரிசெய்து மேற்கொள்ளுதல். ஏற்ற துணித்துளைகளாலும் சலிக்கலாம்.

சல் - சலிப்பு:    கோபம். மனநிறைவின்மை.

சலிப்புப் பண்ணுதல் - தொந்தரவு பண்ணுதல்.

கூலத்தைத் துளை ஏனத்தில் அலைத்தெடுப்பதுபோல எண்ணங்கள் நிலையின்றி இருத்தல் .

அலை என்பதன் அடிச்சொல் அல்.  அகரத் தொடக்கமும் வருக்கமும் சகரத் தொடக்க வருக்கங்களாகும்.

அல் >  சல்>  சலி > சலித்தல்.  

இதுவுமது:  அமண் - சமண்.  பிற மற்ற இடுகைகளில் அறிக.

கவனிக்க:

அல்  > அலை

அல் >  அலம்பு.

அல் > அலட்டு

இவை ஆடுதல், அசைத்தல், முதலிய தொடர்புகளை உடையன.   அல்.- இதுவே சல் என்ற சொல்லிலும் உள்ளது. இவ் வசைவுச் சொற்கள் அவற்றிற்கு ஒப்பான மனச்செயல்களைக் குறிப்பனவாயின.   இஃது ஒப்புமையாக்கம்.

சல் > சலனம் என்பதும் இத்தொடர்பில் விளைந்ததே.  ( சல்+ அன் +அம்);

இனிச் சஞ்சலம் என்பது:

தம் + சலி + அம் =  சம் + சலி + அம் >  சஞ்சலம்.   லி e


ன்பதன் இகரம் கெடுதல்.

தம் > சம்  ( த - ச திரிபு)

சலி + அம் >  சலம் 


தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை குறிப்பது.  சம் என்பதும் அது.

மனிதன், மனம் ஆகிய இரண்டும் சேரப் பன்மை ஏற்படும்.  ஆகவே சஞ்சலம்

என்பதில் இவ்விரண்டும் தொடர்பு அறுந்த அசைவு காணப்பெறும்.. ஒருங்கியலாமை.

அறிக.  மகிழ்க.