ஞாயிறு, 1 நவம்பர், 2020

மயிர் என்பது

மா என்பது கருமை நிறத்தையும் குறிக்கும்.  இச்சொல்லுக்குப் பல பொருள்கள். ஆதலால் "நிறத்தையும்" என்றோம்.

பேச்சு  வழக்கில் மாநிறம் என்றால்,  மிகுந்த கறுப்பைக் குறிக்காமல், இடைப்பட்ட ஒரு நிறம் குறிப்பதாகும்.

மா நிறம் என்பதனுடன் தொடர்புகொண்ட இன்னொரு சொல்லைக் கவனிப்போம்.

மா இர் >   மை இர் >  மயிர்.

இதில் மா என்பது மை ஆகிவிட்டது. மை என்பது "ம" ஆனது. 

சொல்வரலாற்றில் மைக்கு முந்தியது மா. அதனால் அதைக் காட்டினோம். நீங்கள் மை+ இர் என்ற முடித்துவிடலாம் என்று நினைக்கலாம். அப்படியே நீங்கள் வைத்துக்கொள்வதில் எமக்கு மறுப்பு ஒன்றுமில்லை. மை எப்படி வந்தது -- யாரும் கேட்டால் அப்போது நீங்கள் விரித்துக்கொள்ளுங்கள்,

இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:   மை+ இல் =  மயில் ஆகும்.   இல் என்பது
இடம் என்ற பொதுப்பொருள் உடைய சொல் மைப்புள்ளிகள் போலும் இடங்களை உடைய தோகைப் பறவை.

இர் என்ற இறுதி,  இரு என்பதோடு உறவுற்ற சொல்    இரு > இர்; அல்லது இர்> இரு. எவ்வாறு ஆயினும் உணர்ந்துகொள்வதே முதன்மை யானது ஆகும். இரு என்ற வினைச்சொல் முன்மை வாய்ந்தது.  வினைச்சொல் எந்த மொழியில் உள்ளதோ அங்குதான் பெயர் ஏற்பட்டது என்பது சொல்லியலார் முடிபு.

மை இர் என்பது இணைந்து,  மயிரானது.  முதனிலைக் குறுக்கம்..

மயிர் என்பது மசிர் என்று வழங்குவது  ய- ச திரிபு.  இது பல மொழிகட்குப் பொதுவான திரிபு.  தமிழில் வாயில் > வாசல்,  காண்க.

மெய்ப்பு - பின் வரும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2020

யானைக்குட்டி

 இரண்டு வயது  யானைக்குட்டி

புரண்டு விழுந்து  சண்டைபோடும்

பிறந்த தாயும்  தந்தை யென்றும்

சுரந்த அன்பு  காணவில்லை.


அன்னை வந்து  அணைத்த போதும்

அஞ்சுதலில் முட்டும் கோபம்

பின்னை வந்து மனிதர் பாலும்

பீடையாகிப் போனதாமோ!


பிள்ளைகள் அம்மாவுடன் சண்டையிடுதல், இந்த யானைக்

குட்டி அதன் தாயுடன் சண்டையிட்டது போன்றது.  விலங்குக் குணம்

மானிடன் அடைந்துவிட்டானோ என்பது இந்த வரிகள்

எழுப்பும் கேள்வியாகும்.


பிறந்த -  தான் பிள்ளையாய்ப் பிறந்த

அஞ்ச்சுதல் இல் -   அச்சமில்லாமல்

சுரந்த -  பிள்ளையிடம் ஏற்பட்ட

மனிதர்பாலும் -  மனிதரிடத்தும்

பீடை - நோய்.

மணிமேகலைக் காப்பியம்: அட்சயபாத்திரம்.

 ஒன்றைப் பிறருக்கு -  அது வேண்டியோருக்கு -  அளிப்பது ஓர் அருள், ஓர் அன்பு. இதை "அளி" என்று இலக்கியங்கள் புகழும்.  இது குழைவையும் குறிக்கும்.  " அளிந்த ஓர் கனி " என்பது திருவாசகம். இரக்கமும் குறிப்பது ஆகும்.

அட்சயப் பாத்திரத்திலிருந்து மணிமேகலை அள்ளி அள்ளி மக்களுக்கு வழங்குகிறாள். எல்லோருக்கும் அமுதளித்து இரக்கம் காட்டுகின்றாள்.  இப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாதது.

அட்சயப் பாத்திரம் என்பதில் அட்சய என்ற சொல்லை அறிவோம்.

அளிச்செயல் பாத்திரம்

அச்செய பாத்திரம்

இங்கு  ளி என்ற எழுத்துக் குறைவுண்டது.  லகர ஒற்றிறுதியும் கெட்டது.

இந்த நிலையில் இது அட்சய என்று மாறி அமைந்தது. இஃது ஓர் ஒலிநயமூட்டுத்

திருத்தம்.

இந்தத் திரிபுகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்:

இடுக்கண் > இடுக்கட்டு > இக்கட்டு.  (டு இழப்பு)

சகக்களத்தி >  சக்களத்தி.  ( க இழப்பு)

பகுக்குடுக்கை >  பக்குடுக்கை  (கு இழப்பு)

சறுக்கரம் >  சக்கரம் ( று இழப்பு)

மக + கள் = மக்கள்.

இச்சொல் ( அட்சய ) ஒரு பலபிறப்பிச் சொல்.  

அருட்செயல் >  அட்செய  > அட்சய என்றுமாகும். ரு, ல் இழப்பு.

மற்றோர் மாற்று விளக்கம்:

அட்சய பாத்திரம் http://sivamaalaa.blogspot.sg/2016/01/blog-post_29.html