புதன், 14 நவம்பர், 2018

திகைதல் : திகைதி தேதி.

தேதி திகதி என்பன தமிழ்ச்சொற்கள் என்பதை முன்பு வெளியிட்டதுண்டு.

இதற்குரிய வினைச்சொல் திகைதல் என்பது.

இப்போது ஆங்கில மொழி மிகுதியாக வழங்குவதால் இச்சொல் பயன்பாடு குன்றி வருகின்றது.  தமிழ் மொழி என்பது பெரும்பாலும் வீட்டுமொழியாகிவிட்டது.

சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில்தான் இப்படி என்றால் தமிழ் நாட்டில் இன்னும் மோசம் என்றுதான் சொல்லவேண்டும்.  உரையாடலில் இயல்பான நிலையில் பிரிட்டன் அமெரிக்கா முதலிய நாடுகளில் வழங்காத அல்லது குறைவாகவே வழங்கும் (ஆங்கிலச் ) சொற்கள் கூட தமிழில் கலந்து பேசப்படுகிண்றன.. அன்றாடப் பொருள்களான ரொட்டி என்னும் உரொட்டி கூட "பிரட்டு" என்று ஆங்கிலச்சொல்லால் குறிக்கப் பெறுவதாகிறது.  இந்நிலை மாறுமென்று எதிர்பார்க்கவில்லை.  தோசையை டோசா என்பாரும் உளர்.  தோசை என்பதோ  அரிசியையும் உளுந்தையும் நீரில் தோய்வித்து  அரைத்துச் செய்யப்படுவதால் தோயல் :  தோயை >  தோசை என்று அமைந்தது.  மற்றொன்று:  அப்பிச் சுடுவதால் அப்பம் ஆனது.

ஆகவே திகைதல் என்ற வினைச்சொல் புழக்கம் குறைவது வியப்பிற் குரித்தென்று நினைக்கவில்லை.

சந்தையில் மாடு வாங்கப் போனவன்,  மாடு வாங்கிக் கொண்டிருந்த இன்னொருவனைப் பார்த்து:  "விலை திகைந்து விட்டதா?":  என்று கேட்பான்.  அதாவது விலை தீர்மான மாகிவிட்டதா என்பது கேள்வி.

நாள் எது என்று குறிப்பதே  திகை >  திகைதி >  தேதி  ஆகும்.

நாள் -  பொதுச்சொல்.  குறிக்கப் படாததும் குறிக்கப் பட்டதும் நாள்.
24 ಮಣಿಕ್ಕೂಱು ಎನ್ಪಥು ನಾಳ್.  ಪಕಲುಮ್ ನಾಳ್ ಥಾನ್.

ಥಿಕಥಿ - ಥೇಥಿ ಎನ್ಪನ ಕುಱಿಕ್ಕಪ್ಪತ್ತವೈ; ಥಿಕೈನ್ಥವೈ.

திகைதி என்பது திகதி என்று வருதல்  ஐகாரக் குறுக்கம். வேறு எடுத்துக்காட்டுகள்:

பகு > பகுதி > பாதி;
தொகு > தொகுப்பு > தோப்பு.
வகு > வகுதி  > வாதி. (வகுந்த அல்லது பிரிந்த நிலையில் பேசுவோன்). இதனை வேறு வழியிலும் விளக்கலாம்).

தோப்பில் வீடு என்பது கேரளாவில் ஒரு சிற்றூரின் பெயர். வீட்டுப் பெயருமாம்.

திகைதி என்பது திகதி என்று சுருங்கிய பின் திக என்பது  தே என்று நீளும்,

அடுத்து ஒரு ககரமோ அதன் வருக்கமோ வரின் முதல் நீளும்.

எ-டு:

அகத்துக்காரி >  ஆத்துக்காரி.    அ என்பதை அடுத்து க வந்தது.
அக > ஆ,

ஆதலின் திகதி தேதி என்பன தமிழென்று உணர்க.

நாள்:  1.  24 மணிநேரம் கொண்ட கால அளவு,  2.பகற்பொழுது.

தேதி :  நாட்காட்டியில் குறிக்கப்பட்ட மற்றும் தீர்மானிக்கப்பட்ட இரவும் பகலுமான கால அளவு,

திகதி தேதி என்பன தமிழன்று  என்று அஞ்சிய அறியார்   " நாள்" என்பதையே உகப்பர்.   திகதி தேதி இரண்டும் திரிசொல்;  நாள் இயற்சொல்.

ஆனால் தேதி என்பது உலகசேவையில் ஈடுபட்ட சொல்.  "டேட்" என்ற ஆங்கிலச்சொல்கூட இதனுடன் தொடர்பு உள்ளது.  இலத்தீன்:  டேட்டம்,
கணினி அறிவியலில் அடிக்கடி பயன் காணும் டேட்டா என்பது   இது   இதன் இலத்தீன் பன்மை வடிவம்.

திகைதல் என்ற  வினையினின்று உருப்பெற்று உலகப்பணி புரியும் இச்சொல்லால்  எமக்கும் பெருமையே. இதனை உலகினுக்கே தந்தது நம் தமிழ்.

மகிழின் மணத்தினை மறைத்திடலும் கூடுமோ?

errors will be rectified later..


தெருப்பாவலனின் உணர்ச்சிக் கவிகள்.

கவிதை என்பது ஒருவித மனமயக்கில் ஏற்படுவதாகும்.  முற்றத் தெளிந்த உள்ளத்தினனுக்குக் கவிதை பிறப்பது அரிதே ஆகும். அவன் சில சொற்களை  வரிசைப் படுத்தி இணைத்து ஒருவாறு பொருண்மை தோன்றும்படி அமைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடாது.  கவிநோட்டம் செய்யும் அறிஞர்கள் கவிதையில் உணர்ச்சி இருக்கவேண்டும் என்று உரைப்பர். உணர்ச்சி அற்ற கவியானது வெறும் சொல்லடுக்கே ஆகும்.

நாம் எழுதும் கவிதைகள் இந்த வகையில் கவிதைகள் என்ற பெயர்ப்பலகைக்கு ஏற்புடையவல்ல என்று யாரேனும் சொன்னால் அதற்காக நாம் அவர்பால் சினம் கொள்ளாமல் இருப்போம். உணர்ச்சியைக் கண்டுகொள்வதில் கவிதையைக் கேட்போனுக்கும் பங்கு இருக்கிறது.  பாடியவனின் உணர்ச்சிநிலையைக் கேட்போனும் எட்டிப்பிடிக்க வேண்டுமே.  இல்லாவிட்டால்  கேட்போன் பாவலனின் உணர்ச்சிப்பதிவினை மீட்டெடுக்கத் தவறியவன் ஆகிவிடுவான்.  பாடியோன் எத்தகைய உணர்ச்சி நிலையில் நின்று பாடினானோ அதே நிலைக்குக் கேட்போனும் உயரவேண்டும். இப்படி உயர இயலாதவன் எத்துணை அளவிற்குப் பண்டிதன்மை உடையவனாய் இருப்பினும்  கேள்வித் தகுதி உடையவன் அல்லன். இந்நிலையில் அவன் நீருக்குள் இல்லாத மீனே ஆவான்.  இன்னொரு மீனை யவன் உணர்ந்துகொள்ளல் இயலாதது ஆகிவிடும்.

நீர் என்பது உணர்வலைத் தொகுப்பு.  மீன் என்போன் அதிற் கிடக்கும் கவிஞன். கேட்போனும் அந்நீருக்குள்ளேயே குதித்துவிடவேண்டும்; மீனோடு மீனாகிவிட  வேண்டும்,  பாவலனின் நீராழத்தை எட்ட இயலாதவனாய் இருக்கலாம். உணர்வாழம் ஏற்புடைய மூழ்களவினை எட்டிவிடவேண்டும்.

காமத்தின் அளவு மிஞ்சியதால்  இடுப்பு உடுக்கை மார்பு படுக்கை என்று எழுதுகிறவனும் கூடக் கவிஞனே ஆனாலும் இவன் காமவிகாரக் கடலில் வீழ்ந்து தத்தளிப்பவன்.  அவன் கவிதையால் நன்மை விளைதல் இல்லை. இவனை ஒதுக்குவது நமக்கு நன்மை ஆகும்.

மயங்குவதை விளைப்பதே மது   ஆகும். இச்சொல்லே இடைக்குறைந்து மது என்று வழங்கத் தொடங்கியது. ,மயக்குவது >  ம~து = மது.  குடிப்போரிடை உருவாகிய இந்தக் குழூஉக் குறி நாளடைவில் பரவி உயர்ந்து மொழியில் ஒரு சொல்லாகியது.

ஓர் உண்மை நிகழ்வில்  மதுமயக்கில் ஒருவன் இப்படிப் பாடினான்.  இவன்பெயர் சின்னத்தம்பி என்று இவனே பாடிச் சொல்வான்:

" அடடா இந்தச்
சிங்கப்பூரு பதினாறு கல்லுக்குள்ளே --- இந்தச்
சின்னத்தம்பி கால் படாத    இடமும் இல்லே ----  நானும்
பார்க்காத ஆளும் இல்லே."

என்று பாடிக்கொண்டிருப்பான்.  இவன் நிற்குமிடத்தைக் கடந்து சென்றால் இவன் பாடத் தொடங்கிவிடுவான்.  உலகறியப் பெயர் விளங்கியவன் மட்டுமா கவிஞன்?  இவனும்கூட ஒரு கணிப்பில் கவிஞனே  ஆனான்.

இன்னொரு சமயம் இவனிடமிருந்து ஒரு வெறுப்புக் கவிதை வெளியானது.
அது இப்படி உருக்கொண்டது:

" அண்டமா முனிவரெல்லாம்
அடங்கினார்  ...............க்குள்ளே
தொண்டு செய்யும் தோழரெல்லாம்
தொங்கினார் ...............க்குள்ளே"

என்று இடக்கர்ச் சொற்களைப் புகுத்திப் பாடினான்.  உலக வெறுப்பின்  உச்ச நிலைக்குச் சென்றுவிட்டான் இந்தத் தெருப்பாவலன்.

இவைகளெல்லாம் இவன்தன் "கையெழுத்து வெளிப்பாடுகள்." signature outpourings  அல்லது அடையாள ஒளித்தட்டுகள் luminous identification plates என்னலாம்.  இவன் வேறுபாடல்களும் பாடிக்கொண்டிருப்பான் ஆனாலும் கிறுக்கில் தாக்கினாலும் தாக்குவான் என்று அஞ்சி இவனிருக்கு மிடத்தை விரைவில் கடந்து செல்லுதல் எமது  வாடிக்கையாய் இருந்தது.

கவி என்றாலே அது உணர்ச்சிகளின் குவி   ஆகும்.   குவி என்றால் குவிப்பு, கொட்டிவைப்பு.  அகர முதற் சொற்கள் உகர முதலாகவும் அவ்வழியிலே அம்முதல்களே முறைமாற்றாகவும் வருதல் சொல்லியல் இயல்பு ஆகும்.
கவிதல் என்பது குவிதல்.  கவிகை என்பது குவிந்த நிலையினதான குடைக்குப் பெயர்.

ஒரு பொருண்மேல் எண்ணங்கள் கவிந்து நிற்க வெளிப்படும் பாடலே கவி.
இதன் வினைச்சொல் கவிதல் ஆகும்.

இவன் கவியில் உணர்ச்சிகள் குவிந்து கிடப்பனவான நிலை காணலாம். பா என்பது பொருட்பொதிவு உடையது;  கவி என்பது உணர்ச்சிக்குவியல். அது உணர்வுக் குவியல் என்ற நிலையில் தெளிநிலை கடந்து நிற்பது ஆகும்.
ஒளிமழுக்கில் ஓடிவரும் நெளிவலை அதுவாம்.

பிழைகள் பின்னர் சரிசெய்யப்படும்.
ஒருமுறை திருத்திய நாள்:  16.11.2018 
தன் திருத்த மெல்லியும் கள்ளப் புகவர்களும்
புதிய பிழைகளை ஏற்படுத்தக்கூடும்.





செவ்வாய், 13 நவம்பர், 2018

அப்பாவும் கப்பாவும் அருமன் > வருமா, வர்மா

ஒரு நல்ல நண்பரின் இனிய பெயர் முருகப்பா.  இவர் பெயரை நினைக்கும்போதெல்லாம் என் அப்பன் முருகனை நினைத்துக்கொள்வேன்.

அப்பன் முருகனே  முருகு+ அப்பன்.   இரண்டு சொற்கள் கூடிய பெயர் என்பது உங்களுக்குத் தெரியும்.   இவற்றுள்  முருகு என்றால் அழகு;  அப்பன் என்பது தெரிந்த சொல்லே.

அப்பனை அழைக்கும் போது அது அப்பா ஆகிறது.  அப்பா என்பது விளி வடிவம்.   இச்சொல்  அத்தன் ( அத்தா) என்றும்  அச்சன் ( அச்சா) என்று வேறுவடிவங்கள் உள்ள சொல் ஆகும்.  விளி வடிவம் என்றால் அழைக்கும்போது ஒரு சொல் ஏற்கும் அல்லது அடையும் வடிவமாற்றம் ஆகும்.

விளிவடிவத்தையே தன் பெயராகக் கொண்டவர் அந்த நண்பர்.  இப்படி விளியே எழுவாய் நிலையில் நிற்பதும் அப்புறம் உருபு ஏற்பதும் இலக்கண நூல்களில் விரிக்கப்படவில்லை என்றாலும், அது உலக வழக்கில் உள்ளது.

படித்த இலக்கணத்தைக் கொண்டு படிக்காதவற்றையும் அறிந்து இன்புறுவோனே அறிவாளி.  இதை என் வாத்தி (வாய்த்தி :  வாய்ப்பாடம் சொல்வோன்)  சொல்லிக்கொடுக்கவில்லை என்றோ  என் பாடபுத்தகத்தில் இல்லை என்றோ சொல்வது கல்விக்கும் கேள்விக்கும் நேர்ந்த ஒரு கொடுமையே ஆகும்.

உலக வழக்கில் விளிவடிவமும் உருபு ஏற்கும்.  எடுத்துக்காட்டு:

"முருகப்பாவைக் கடையில் பார்த்தேன். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்."

பெயர் முருகப்பன் அன்று.  முருகப்பாதான்.  அச்சொல்லே உருபு ஏற்று மாற்றம் அடைந்தது.

ஆகவே முருகப்பா என்பது விளிவடிவத்திலிருந்தாலும்,  எழுவாய் வடிவம்போல் உருபு ஏற்றது.  முருகப்பாவை என்பதில் ஐ வேற்றுமை உருபு ஆகும்.

முருகப்பாவை :  இது செயப்படுபொருளாகிறது.

சில மொழிகளில் சொல் வடிவம் மாறுவதில்லை.  உருபுகளும் இல்லை.

முருகப்பா என்ற பெயர் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பெறின் நீண்டுவிடுகிறது.  இதனை பிறமொழிக்காரர்கள் சுருக்கியே அழைப்பர். நண்பர் முருகப்பாவை அவர்கள் "மிஸ்டர் கப்பா"  என்று அழைத்ததுமட்டுமின்றி பெயர் அருமையான பெயர் என்றும் பேசிக்கொண்டனர்.  நாமும் ஒப்புவோம்.
கப்பா என்பது நல்ல பெயர்தான்.

இவர் பெயர் நல்ல வேளையாக வேங்கடப்பா  என்று இல்லை. இருந்திருப்பின் கடப்பா என்றோ டப்பா என்றோ இவர்பெயர் உருமாறியிருக்கும்.

ஆனால் பெரியசாமி மிஸ்டர் பெரி என்று விளிபெறும் போது மிக்க நன்றாகவே இருக்கிறது.

இப்போது முருகப்பா மீதில் ஒரு வெண்பா பாடுவோம்.

நல்லமுரு  கப்பாவே  நாளைக்கு நீவாவா
வெல்லமிட்டு நான் தரு வேன் தேனீரை ----- நில்லாதே
சம்பளம் இன்றில்லை சாற்றிவிட்டார் நம்காணி
கொம்புமடித் துக்கொண்டு போ.

காணி:  கங்காணி என்பதன் முதற்குறை. ( "சுப்பர்வைசர்")

எனது இந்த வெண்பாவில்  முரு என்பது முதற்சீரிலும்  கப்பாவே என்பது இரண்டாம் சீரிலும் வந்துவிட்டது.  பிரிந்து நிற்கின்றன இத்துண்டுகள்.
பாடல்களில் நாமும் இப்படி பிரித்துப்  பாடுவதுண்டு என்றாலும்  பாடும்போது அது முருகப்பா என்ற ஒரு பெயர் என்று நினைவில் இருத்திக்கொண்டு அதற்குப் பங்கமின்றிப் பாடுவோம்,

குருவிக்காரி  வண்டிக்காரன் என்ற சொற்களில் காரன் என்பது பிறழ்பிரிப்பில் வந்த சொல்.  இது உண்மையில்  குருவிக்கு + ஆர் + அன், என்பதுதான்.  ஆர்தல் என்பது  உரிமை என்று அல்லது உடைமை என்றும் பொருள்தரும்,  இந்தக் காரன் காரி வேற்று மொழிகளிலும் பரவிய சொல் ஆகும்.   ஆர் = அவர் என்றும் அமைதற்குரியது.   எடுத்துக்காட்டு:  கண்டார் =  கண்டவர்.

ஆர்தல்:  பல்பொருளொரு சொல்.

அருமை + மன்னன் =   அரு + மன்  =  அர்மன்.
நந்தி + அருமன் =  நந்திவருமன் =  நந்தி வர்மன் =  நந்தி வர்மா.

தி + அ =  திவ  ( நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் )

அருமை மன்னன் என்பதில்  மை பண்புப்பெயர் விகுதி.   அன் என்பது  ஆண்பால்.

பிறழ்பிரிப்பால் வர்மா போதரும் என்பது உணர்க.

அருமன் என்ற சொல் மறைந்தது,  ஆனால் அருமை, மன்னன் என்ற சொற்களின் இணைப்பில் அது மீண்டும் வெளிப்படுவதாகும்,