ஞாயிறு, 11 நவம்பர், 2018

ஸகரம் ஷகரம் ஒற்றுகள் தோன்றிய சொற்கள் சில

ஒரு கட்டிடம் கட்டுங்கால்,  நிலத்தை நன் கு அகழ்ந்து  தூண்களை உள்ளிறக்கி அதன்  பிணிப்பில் சுவர் கூரை முதலிய அமைத்துக் கட்டுவது வழக்கம்.  இந்த வேலையைப் பிராமணர்கள் செய்ததில்லை.  அவர்கள் கட்டிட வேலைக்காரர்கள் அல்லர்.  இந்த வேலையைச் செய்தவர்கள் தொழிலாளர்கள் தாம்.

அஸ்திவாரம் என்பது கட்டுமான ஊழியர்கள்  அமைத்த பெயரே.   அதில் இலக்கணப் பின்புலம் ஏதேனு இருக்குமானால் அது   ஆகூழால் (அதிர்ஷ்ட வசமாக )  அமைவுற்றதே ஆகும்.  அதாவது சொல்லமைப்பு என்று கருதாமல் காலப்போக்கில் பேச்சுவழக்கில் அமைந்த சொல்  இது  ஆகும்.  இதற்கொரு சொல் கொடுக்குமாறு புலவரைக் கேட்டு அவர் அமைத்தால் இரண்டு மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்.  அத்தகையோர் கடினச் சொல்லொன்றை அமைத்தளிப்பதே பெரும்பான்மை.  கட்டிட வேலை என்பது இரும்படிக்கும் இடத்துக்குச் சமானமானது;  அங்கு ஈயாகிய புலவருக்கு என்ன வேலை என்பதே பொருத்தமான சிந்தனை.

சிறுசிறு மனைகளைக் கட்டிய தொழிலாளிகளே இச்சொல்லை அமைத்தனர். அவர்கள் மண்வெட்டியும் கூடையும் கொண்டு மண்ணை அழுத்திவாரி அப்புறப்படுத்தித் தூணை நட்டனர்.  அக்காலங்களில் கற்றூணே  ( கல் தூணே) பெரும்பான்மை.

அழுத்திவாருதல் > அழுத்திவாரம் > அஸ்திவாரம்.

பேச்சுவாக்கில் ழு என்பது ஸ் ஆகிவிட்டது.   உயர்த்தி என்ற சொல் ஒஸ்தி என்று ஒலிக்கப்படுவது எப்படியோ இதுவும்  அப்படியே..

 இன்னொரு சொல்:


உதாரணமாக:  கழுத்தூறி > கஸ்தூரி.

கஸ்தூரி மான் ஒரு வாசனையை வெளிப்படுத்தும் மான். அதன் கழுத்துப் பக்கமாக ஊறிவந்ததென்பது சிற்றூரார் நம்பிக்கை.  அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல் அமைந்துவிட்டது.

ஸ் போன்ற ஒலிகள் இயற்கையில் இல்லாதவை அல்ல.  அதுதான் பாம்பு சீறும்போது காதில் விழுகிறதே!  வாணம் விடும்போதும் புஸ் என்று போகிறதே! மனிதனுக்கும் அது ஒவ்வாத ஒலி அன்று.  இலக்கணம் செய்த தொல்காப்பியனார், பல்காப்பியனார் , பல்காயனார், காக்கைபாடினியார் முதலியோர் அதை  ஓர் எழுத்தொலியாக ஏற்கவில்லை.  அக்காலத்திய மொழி நிலை அது.  ஆகவே மொழிமரபு.

சீன மொழியில் பெரும்பாலும் சொல்முதலில் அது வரும். ஸியாவ், ஸ்யோங்க், ஸியா  ஸெங்க் எனப்பல உள்ளன.

தொல் மொழியான அரபியிலும் இத்தகு ஒலிகள் உள.

ஏனைத் திராவிட மொழிகளிலும் உள.

பிற்காலத்தில்  ழுகரத்தை விலக்கிவிட்டுச் சில சொற்கள் அமைந்தன. எடுத்துக்காட்டு:

விழுபுலம் >  விபுலம்.  (விழுமிய அதாவது சிறந்த நாட்டினர்). பிற வந்துழிக் குறித்து மனப்பாடம் செய்க.

அழுத்திவாரம் >  அத்திவாரம் (  ழுகரம் வீழ்ச்சி)
அத்திவாரம் >  அஸ்திவாரம்  ( ஒரு ஸ்கர ஒற்று தோன்றல்).

தவணைக்குக் கெடு என்றும் சொல்வர்.  காலவரை முடிந்தது என்றால் கெடு முடிந்தது என்பர்.  கெடுதல் என்ற சொல்லின் முதனிலை கெடு  -. குறித்த காலத்தில் எல்லை கெடுகிறது என்பது பொருள். எல்லை -  கால எல்லை.


கெடுத்தி > கெஸ்தி > கிஸ்தி.

கெடு > கிடு > கிஸ் > கிஸ்தி எனினும் அதே.

பீடுடைய மன்னவன் பீடுமன்.  அவன் பீஷ்மன் ஆனது காண்க.  டு >ஶ்.


திரிபுகளால் மகிழ்க.



திருத்தம் பின்.
தன்-திருத்த மாற்றங்கள் பின்னர் மறுபார்வை.
சில பிழைகள் சரிசெய்யப்பட்டன. 

வெள்ளி, 9 நவம்பர், 2018

தெக்காணியும் உருதும்.

தெக்காணி என்பது இடைக்காலத்தில் வழங்கிய ஒரு மொழியின் பெயர்.

தென்+ கண் + இ =  தெற்கணி > தெற்காணி.>  தெக்காணி;

தென் :  இது தென் திசை குறிக்கும் திசை அடை.
கண்:    இது இடமென்று பொருள்தரும்.

குறளில்

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் ...."

இல் =  கண்.

மனத்தில்=   மனத்துக்கண்,

அத்து என்பது சாரியை.  அம் விகுதி கெட்டது; அத்துச்சாரியை பெற்றது,

தெக்காணி என்பது ஆங்கிலத்தில் "டெக்கான்" என்று திரிந்தது,

டெக்கானில் பேசப்பட்ட மொழி:  டெக்கானி.



தென்பகுதியில் வழங்கிய மொழி என்று பொருள்.

அதிலிருந்து உருவானது உருது.

உருவானது :>   உரு~து   >  உருது.  இடையில் உள்ள எழுத்துக்கள் குறைந்தன.

உருது என்ற சொல் வேறுமொழியில் இருக்கலாம்.  அது ஒலியொற்றுமைச் சொல்.

ஒரே ஒலியுள்ள சொற்களுக்கு எடுத்துக்காட்டு:

மாய் (தமிழ் ) : செத்துப்போ.

மாய் ( சீனம் )  :  வேண்டாம்.

இவை வெவ்வேறு சொற்கள்.

உர்டு என்ற பாரசீகச் சொல் படைமுகாம் என்று பொருள்படுவதால் படையினர் பேசிய மொழி என்பர்.   இது வெறும் கருத்துரைதான். அப்படிப் பேசியிருக்கலாம் என்றாலும் முஸ்லீம்களின் வீட்டுமொழியினின்று தோன்றியதே உருது ஆகும்,  ஒரு மொழி உருவாகப் பலகாலம் பிடிக்கலாம்,
படைஞர்கள் திடீரென ஒருமொழியை உருவாக்கிப் பேசிக்கொண்டனர் என்பர் =  இது ஒரு வியத்தகு சிந்தனை ஆகும்.

உலகில் எத்தனையோ நாடுகளில் படைஞர்கள் கூடிப் பேசுகின்றனர்.  அவற்றுள் எத்தனை புதுமொழிகள் தோன்றின?  இது முஸ்லீம்களின் வீட்டு மொழி.  நெடுங்காலம் அமைதியாக வளர்ந்திருக்கும். கலவை மொழி.

குறிப்பு:  தக்கு என்ற சொல்லிலிருந்து தக்காணம் என்ற சொல் பிறந்தது என்பார் தேவநேயப்பாவாணர்,  தக்கு = தாழ்வு, நிலத்தின் தாழ்நிலையை உன்னியிருப்பர்,  அதனால் பெயரமைந்திருக்கும் என்பது சற்று தொலைவான
சிந்தனையாகத் தோன்றுகிறது.  நிலநூலறிஞர்களே இப்படி எண்ணலாகும். வடநாடு தென்னாடு என்று எண்ணுவது இன்னும் எளிமையானது ஆகும்.

வியாழன், 8 நவம்பர், 2018

பலவகைச் சொல்லாக்கம்

இடைச்சுருக்குகள்:


பிறப்பிப்பது >  பிற~து  > பிராது.:  ஒரு நடவடிக்கையை  வழக்குமன்றில் (காவல் துறையிலும் ஆகலாம் )  பிறப்பிக்க அளிக்கப்படும் மனு.

மயங்குவது >  ம~து.

வயங்குவது > வ~து +அன் + அம் =  வதனம்.  இடைச்சுருக்குடன் இடைநிலை விகுதிகள் பெற்ற சொல்.

உருக்கொள்ளுமொழி:   உருக்கொள்வது >  உரு~து.  புதிதாக அமைந்துகொண்டிருந்த மொழி. தெக்காணி மொழியிலிருந்து அமைந்ததாகச் சிலர் உரைத்துள்ளனர்.  இது ஒரு கலவை மொழி.  தென்னகத்தின் வடபகுதிகளில் பலசொற்களையும் கலந்து பேசியதால் உருவானது என்பர். முஸ்லீம்களிடையே உருவானது.   உருது என்ற ஒலியொற்றுமைச் சொல் வேறுமொழிகளிலும் இருந்தாலும் இது வேறு; அது வேறு.

எடுத்துக்காட்டு:  மான் என்ற ஆங்கிலச்சொல் மான் என்ற தமிழ்ச்சொல்லைப் போலவே ஒலித்தாலும் தொடர்பற்றவை. ஆங்கில மான்: மனிதன் என்று பொருள்படும்.  தமிழ் மான் என்பது ஆட்டைப்போலும் ஒரு விலங்கின் பெயர்.

விழுமிய வாழ்க்கை ஆக  அமைவது >  விவாக அம் > விவாகம்.
விழுமிய = சிறந்த.

விழுமிய வாழ்வு சார்ந்து அமைவது:  வி-வா-சா-அம் > விவசாயம்.  யகர உடம்படு மெய் சேர்ந்த சொல்.  பயிர்த்தொழில்.

விவா என்று நீட்டாமல் விவ என்று சுருக்குண்டது.
ஆனால் இலத்தீனர்கள் விவா என்று பயன்படுத்தினர். வேற்றுமை மாற்றங்களால் சிலவிடத்து விவோஸ் என்று வரும்.  :  இன்டர் வைவோஸ் கிஃப்ட் என்பது காண்க. intervivos gift.  as opposed to  a testamentary gift.

விரிந்து பரந்து சார்ந்து ஒழுகுபவள் : .>   விபசாரி,

இடைக்குறைச் சொற்கள்:

தாழ்(வு) + மரு (வு) +  ஐ = தா+ மரு + ஐ =  தாமரை.

தாழ்வாக நீருடன் மருவி நிற்கும் மலரும் அது வளர்  தண்டுச் செடியும்.

தூக்கி எறியத் தக்க வேண்டாத ஒலிகளை விலக்காமல் எல்லாமும்
வைத்துக்கொண்டு  தாழ்வுமருவை என்று பெயர்கொடுப்பவன் நேர்மைவாதி
யாகவிருக்கலாம்.  ஆனாலும் சொல்லியல் அறிஞன் ஆகான்..

கமலம் என்ற சொல்:  கழுமலர்,  செங்கழுநீர்மலர் என்பவற்றிலிருந்து: படிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_21.html 

தாழ்வணி > தாவணி.

இல்லா அணி அமைந்தவள் >  இலாவணியாள் .>  இலாவண்யா.
இல்லா -  ஊரில் இல்லா, நீர் நம்பத்தகுந்த வேறிடத்தில் இருந்த என்பது பொருள்.

ஊரில் வசிக்கும் அழகி போன்றவள் :  ஊர்வசிப்பவள் > ஊர்வசி


 முன்பின்னாகப் புனையப்பட்டவை:


பிதா :   தாய்ப்பின்.    பி = பின்;  தா= தாய்.

தாய்க்கு அப்புறமே தகப்பன்.

மாதா :     (  அம் )மாதா(ய்).   தலைக்குறை கடைக்குறை ஒட்டுச்சொல்.


கொடுந்திரிபுகள்:

உங்க   அப்பன்  :   ங்கொப்பன் அல்லது    ஙொப்பன் 
உங்க ஆயி  :         ஙோயி

அவ  ஆத்தா :    வாத்தா
அவ அப்பா :   வாப்பா.

ஒலிச்சமன்:

ஐயர் =  அய்யர்


மெலித்தல்:

வெந்த ஆணம் >  வெஞ்சனம்
நிறைஞ்ச  அன்ன  >  நிரஞ்சன 


சில திரிபுகள்

1தன் திறம் >  தந்திரம்
2மன்னும் திறம் >  மன் திறம் > மந்திரம்
மேலிரண்டும்  1& 2 ,  பிறரும் கூறினர்.
இயங்கு  திறம் > இயந்திரம்
கரிஞ்சவன் >  கரிஞ்சன் > கஞ்சன். இரக்கம் இன்றிக் கருப்பு எய்தியவன்.
வினை ஆயகன் > வினாயகன்.  வி+நாயகன் :  விழுமிய நாயகன்.
தெரிதல்:  தெரி+ சு + அன்+ அம் : தெரிசனம் > தரிசனம்.
தெருள்:  தெருட்டி:  > திருட்டி > திருஷ்டி.> திருட்/ஶ்டாந்த.

ஈண்டு விடுபாடு இருப்பின் பின்னர் சரிசெய்யப்பெறும்.
பிழை திருத்தம் பின்.