செவ்வாய், 24 ஜூலை, 2018

தோன்றும் பிழைகள்

நம் இடுகைகளில் நாங்கள் அறியாமலே பல பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன.
இவற்றுக்கான தோற்றுவாய்கள் ஆவன:

1.  எங்கள் சொந்த அச்சுப் பிழைகள்.
2, கணினியில் ஒரு மாதிரியும் இடுகையில் வேறு மாதியும் தெரிவது,   (  இது கள்ள மென்பொருளால்?)
3. தன் திருத்தம் :  நாம் பயன்படுத்தும்  மென்பொருள் சில வரைவுகளை மாற்றிவிடுகிறது.

 என் க  என்று எழுதினால் எங்க என்று வந்துவிடுகிறது,
தன் கை என்பது தங்கை என்று ஆகிறது.

இதனால் இடைவெளி விட்டு அச்சு செய்யவேண்டியுள்ளது, இல்லாவிட்டால் மாறிவிடும்.

4.  வேண்டாத இடங்களில் புள்ளி வருதல்.
     வேண்டிய இடங்களில் புள்ளி போய்விடுகிறது.
இவை இடுகை வெளியிட்ட பின் வருபவை.

5  ஓரிடத்தில் அச்சு செய்வது இன்னோர் இடத்தில் போய்ப் படிந்துவிடுதல்.
தேடிக்கண்டுபிடிக்க வேண்டியுள்ளது,

6  எழுத்து அமைப்பில் வரிகளில் இன்ன பிற தோற்ற அமைப்பில் ஏற்படும் முறிவுகள்.

7 அழிக்கப்பட்டவை மறுதோற்றம் பெற்று வெளிவருவது.  இது எப்போதாவது.

8 இங்கு குறிக்காத பிற.

நீங்கள் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

திங்கள், 23 ஜூலை, 2018

நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி வெற்றிக்கொடி

வாக்கெடுப்பில் நம்பிக்கை மேவி நிற்க
வானுயர்ந்த ஒப்புதலைப் பெற்று  வென்றார்;
தாக்கிமொழி பேசிடுவோர் தலைக விழ்ந்தார்
தக்கதிது மோடிபெற்றார் தரணி மேலே;
ஆக்கமென நாட்டிற்குச் செய்த தொண்டே
அத்தனையும் காட்டுமிதே  ஆடி  ஆகும்
தூக்கமதில் நாட்கழித்த அரசு  முன்னாள்
தொண்டெனவே மிண்டிஎழும் அரசு  இந்நாள்;

பதவியென்ற ஆசைதலைக் குள்ளே பாய்ந்து
பாரினிலே பற்பலவும்  பகரும் பான்மை
உதவியென்றும் ஒப்புவதற் கில்லை அம்மா;
ஒதுக்கிவிட இயலாதார் இழிந்த வாய்கள்
பதமிழந்து மொழிவனவே பாவம் கீழோர்;
பார்த்திருப்போம் காத்திருப்போம் திருந்து வாரே
நிதம்காணும் உண்மைகளை மறைக்க  லாமோ
நேர்மைபெறல் எதிர்தரப்புக் கடனு மாமே.

குலதெயவமும் இட்டதெய்வமும்.

பண்டைக் காலத்தில் அம்மன் வழிபாடு எங்கும் பரந்து கிடந்தது. இதனால் மூழ்கிப்போன குமரிக்கண்டத்திற்கும்   "குமரி" எங்கிற பெயர் ஏற்பட்டது. அங்கு வாழ்ந்த பெருந்தொகையினர் அவைவரும் குமரித் தெயவத்தை வணங்கியோராய் இருந்தனர்.

அது கடலுள் சென்று மறைந்து அடுத்திருந்த நிலப்பரப்பிற் குடியேறிவிட்ட காலத்திலும் குமரித் தெய்வத்தினை மறந்திடாமல் அங்கிருந்த நிலமுனைக்குக் "குமரிமுனை" என்று பெயரிட்டுக் கோயிலெழுப்பி வணங்கினர். பழமை மறவாதோர் நம் தமிழரும்  தமிழரின்  உடன்பிறப்பாளர்களுமாம்.

பஃறுளியாற்றில் ஆற்றுவெள்ளம் அலைகள் துள்ளும்படியாக ஓடிக்கொண்டிருந்தது என்பது சொல்லாய்வில் நாம் அறிந்தது ஆகும்.   பஃறுளி என்பதை பிரித்து நோக்கினால்  பல்+துளி என்று இருசிறு சொற்கள் எழுதரும்.
இதில் பல் என்பது ஆறு அகலமுடையதென்பதைக் காட்டுகிறது. பல்>பரு>பர> பார் என்ற திரிபடிகள் பருமையையும் பரப்பையும் ஒரே சமயத்துத் தெளிவிக்கவல்லவை ஆம்.  துளி என்பது சிறு திவலையையும் குறிக்குமதே பொழுதில்,  துள்ளுதல் என்ற செயல்வினைக்கும்  இடன் தருகிறது. வினைகள் இருவகை : அசைவு குறிப்பனவும் அசைவின்மை தெளிவிப்பவையுமாம்.  ப்ஃறுளியில்  ஆற்றலைகள் மிகுந்திருந்தன. நீர் துள்ளிக் சென்றது.  பல் துள்ளி என்பது இடைக்குறைந்தாலும்   துள் > துளி;  துள் > துள்ளி என்றவாறு
  விரித்துணர்ந்தாலும்  நீரின்  அடைவெல்லையைத் தொட்டுவிடுவீர்.

குமரி நிலப்பரப்ப்பில் மலையொன்றும் இருந்தது.  மகிழ்வுறுத்தும் மலையுச்சியு மிருந்ததென்பதனை :  "குமரிக்கோடு": என்பதாம் வரணனை நமக்குத் தெரியக்காட்டுவதாகிறது.

அம்மன் வழிபாடு மிக்கப் பழையது ஆகுமென் றறிக .

நாம் இட்டப்பட்டு வணங்குவது இட்ட தெய்வம்.  இட்டமாவது  மனத்தை  இடுவது. உங்கள் கூட்டத்துக்கு உரியது  குலதெய்வம்.

கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்ளக் குலதெய்வம்  குறித்தல் போதாமையின்  பிற்காலத்தில் சாதிகள் தோன்றின போலும்,  இது ஆராய்வதற்கு உரியது,

Will be edited.