செவ்வாய், 26 செப்டம்பர், 2017

இரத்த அழுத்தம்: மருந்துகள் வேண்டாவோ?



இனிமேல் “இரத்த அழுத்த மருந்துகள் தேவை இல்லையோ?
இது ஒரு நல்ல தர்க்கம்தான்.
தேவை இல்லை என்று இக்கட்டுரை தெரிவிப்பதுபோல் தெரிகிறது.
படித்து மகிழுங்கள்   ஆனால் எது செய்தாலும் மருத்துவ ஆலோசனையைப் பெற்று மேற்செல்லவும்.

நில் -  கவனி -  கடந்து செல்.

நீங்கள் படிக்க:

(௳ன்னிக்கவும்: நீண்ட முகவரியாய் உள்ளது.  நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று நம்புகிறோம்) 

சொடுக்கவும்:

http://healthnewstips.today/bp/indexbp62185.html?voluumdata=BASE64dmlkLi4wMDAwMDAwMS01MjhjLTQ4MjYtODAwMC0wMDAwMDAwMDAwMDBfX3ZwaWQuLjEzOTAyODAwLWEyOTktMTFlNy04MzlkLTljODg5NTM1N2RiOV9fY2FpZC4uMDMzZWFjZjAtYjU5MS00MGM1LWEyNDQtNDQ4MWNkOWJlZjgwX19ydC4uUl9fbGlkLi5lOGE1NzZlYS1kN2E4LTQyNDktOTI4OC00ODAxNjVjNzkxMTJfX29pZDEuLjFmOWUyMGIxLWJiNTItNDdlMy1hMGQ2LWIyNTE2YjI4OTUzYV9fb2lkMi4uYjhiY2Y4OTQtOGI3NS00NzViLWIyYWQtMjQyMWE5YTEyNzNlX19vaWQzLi43YTUyOWVjOS0xNDgwLTQxNDAtOTA5Ni0zZGJlYzAyMzUxZjJfX29pZDQuLjMzNWUxNGM2LTAyYWYtNDJmYS1hYzNhLTBmYjE1MTA4NDEzMV9fb2lkNS4uNjJiYWZhNWItNTc3Ny00YTA4LThlNzctOWEzOWFkNDM5Yzk5X19vaWQ2Li5kNzVmNTUyZC1hMWFiLTQzYTUtOWYyZS1jMTM3ZjRlZDlkYWRfX3ZhcjEuLldoeSBEb2N0b3JzIFdpbGwgTm8gTG9uZ2VyIFByZXNjcmliZSBCbG9vZCBQcmVzc3VyZSBNZWRzX192YXIyLi4wMDUzZDYyNDRkZDdhNzgyMzUzZjY0NTIwOWU0NWJlM2U1X192YXIzLi5NeSBTdGFydGxpbmcgQmxvb2QgUHJlc3N1cmUgRGlzY292ZXJ5X192YXI0Li5TdHJhaXRzIFRpbWVzX192YXI1Li5TdHJhaXRzIFRpbWVzIChTUEggRGlnaXRhbClfX3ZhcjYuLjJfX3ZhcjcuLjAwZDFhMGY4OGVjZDNkNDZlZGM0MjA3ZTczNzc1NDNkNzNfX3ZhcjguLjAwNmIwYzdjZDQ5NTZjMjg5OTdmZTk5ZjQxOTc2ZTM5Y2NfX3ZhcjkuLjAwNTNkNjI0NGRkN2E3ODIzNTNmNjQ1MjA5ZTQ1YmUzZTVcX1xTdHJhaXRzIFRpbWVzX192YXIxMC4uRHNrdExvb2thbGlrZV9fcmQuLnBhaWRcLlxvdXRicmFpblwuXGNvbV9fYWlkLi5fX2FiLi5fX3NpZC4uX19zcGlkLi5fX2NyaS4uX19wdWIuLl9fZGlkLi5fX2RpdC4uX19waWQuLl9fcGVpZC4uX19pdC4uX192dC4uMTUwNjQxOTE5NjQ2MQ&utm_content=Why%20Doctors%20Will%20No%20Longer%20Prescribe%20Blood%20Pressure%20Meds&utm_term=0053d6244dd7a782353f645209e45be3e5&Doc_title=My%20Startling%20Blood%20Pressure%20Discovery&utm_site=Straits%20Times&utm_pub=Straits%20Times%20(SPH%20Digital)&newad=2&utm_adid=00d1a0f88ecd3d46edc4207e7377543d73&utm_doc_id=006b0c7cd4956c28997fe99f41976e39cc&utm_new=0053d6244dd7a782353f645209e45be3e5_Straits%20Times&utm_cam=DsktLookalike

திங்கள், 25 செப்டம்பர், 2017

சம்பாதி - சொல்லுருவாக்கம்.


சம்பாதித்தல் என்ற சொல்லினமைப்பைப் பார்ப்போம்.

இதில் உள்ள முதல் சொல் சம்பா என்பது. இது ஒரு நெல்லின் பெயர்.
ஊழியர்களுக்கு முன் காலத்தில் கூலியாகக் கொடுக்கப்பட்டது  சம்பா நெல் ஆகும்.  உழைத்தவன் சம்பாவை ஊதியமாகப் பெற்றான்.“~தித்தல் “ என்பதில்  ~தல் என்பது தொழிற்பெயர் விகுதி.~தி என்பதற்கே நாம் எங்ஙனம் அமைந்தது என்று கண்டுபிடிக்கவேண்டும்.

இது முன் காலத்தில் சம்பா பகுதித்தல் என்று சொல்லப்பட்டது. ஒருவனுக்கு உரிய சம்பா விளைச்சலின் பகுதியை அவன்பெற்றுச் செல்லுதலே சம்பாதித்தல்.

சம்பா பகுதித்தல் என்பதில் பகு என்பது இடைக்குறைந்தது.

ஆகவே  - தித்தல் என்ற எஞ்சிய சொல் சம்பாவுடன் ஒட்டிக்கொண்டது.-தல் என்பதை விகுதி என ஒதுக்கிவிட்டால்,  -தி மட்டுமே ஒட்டியதாகக் கூறலாகும்.

ஒம்னிபஸ் என்பதில் ஒம்னி என்ற சொல் போய், பஸ் என்ற இலத்தீன் விகுதிமட்டும் நின்று இன்று பேருந்தைக் குறித்ததுபோலும் நிகழ்வு இதுவாகும். ( பகுதி-த்தல் என்பதில் ~தி மட்டும் எஞ்சியது).

பகுதி  என்பது தொழிற்பெயராதலின் மீண்டும் விகுதி பெறாது என்று வாதாடலாம்.  அதாவது முயற்சித்தல் என்பதுபோல் தவறான அமைப்பு  எனலாம். தவறாய்ச் சமைந்த பிள்ளை என்றாலும் பிறந்தபின் கொல்லுதல் ஆகாது.

தொழிற்பெயரானபின் மீண்டும் வினையாக மாறிய சொற்களைக் கண்டுபிடிக்கலாமே........ விழிப்புடன் படிக்க.
மொழி எப்போதும் இலக்கணப்புலவர் கையிலேயே இருப்பதில்லை. புலவர்கள் புறக்கணித்துப் போனபோது மக்களே மொழி அழியாது காத்தனர். அவர்களுக்கு இலக்கணவிதி தெரியாது. இலக்கணவிதி விற்பனையாகாத சரக்கு ஆனது.

இதுவே சம்பாதித்தலின் வரலாறு. இதைப் பிற அறிஞரும் கூறியுள்ளனர்.

சில சொற்களில்  ~தி வினையாக்கவிகுதியாகவும் வரும்.

மி >  மிதி.    மி = மேல்.
உ > உதி.      உ= முன். (முன்னெழுதல்).

ஆகவே  சம்பா > சம்பாதி எனினும் அமையுமே.

will review to edit (generated errors).


ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

தேவருலக மாதர் பெயர்கள்.



தேவருலகில் இருப்போர் மனித உருவில் இருக்கிறார்களா என்று யாரும் அறிந்ததில்லை. மேலுலகோர் அனைவரும் உருவற்றவர்கள்  (அரு) என்றே எண்ணத்தோன்றுகிறது.  அப்படி ஓருலகு இல்லை என்போரும் உளர்.

எனினும் புராணங்களில் ( தொன்மங்களில்) கூறப்படும் தேவருலக மாதர்கள் அழகியர் என்று வரணிக்கப்படுவதுண்டு.

அரம்பை என்பவள் அரியவள்.
அர் = அரிதானது..   அரு < அர்.
அம் = அழகு
பா = இது பைம்மை ( இளமை) என்னும் பொருளது. பசுமை என்று பொருள்படும்.
பா என்பது பை என்பதன் திரிபு அல்லது விளிவடிவம்.
எனவே   அரம்பை அரிய அழகினள்.

எ-டு:

பை -  பையன். பையல்.   (அகவை குறைந்தவன்).
பை - பைந்தமிழ்.  ( என்றும் மூவாத தமிழ்).

பை - பைத்தியம் (பைத்து+இயம் ).  அறிவுத்திறன் முதிர்ச்சி அல்லது வளர்ச்சி பெறா நிலை.    பைத்து: பைம்மை உடையது.  இயம் - விகுதி. இதுவே இச்சொல்லின் அமைப்புப்பொருள். வழக்கில் பொருண்மை வேறுபடலாம்.

ஊர்களில் காணப்படும் அழகிகளே “ஊர்வசி”.  சொல் ஊரில் வசிப்பவள் என்றே பொருள்கொள்ள இடந்தருவது ஆகும்.

துலங்கும் உத்தமம் உடையாள் : துலோத்தமை.
துல = துலங்கு.
உத்தமம் : உத்தமை.
இது திலோத்தமை என்று மாறியமைந்தது.
துல > தில. 
இங்ஙனம் மனிதமாதர்களைக் கண்டே  தேவமாதர்கள்
_”உருவாக்கப்பட்டனர்”