வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

சேவை



சேவை என்ற சொல்லை ஆய்வு செய்யலாம்.
இச்சொல்லைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட முறை யாம் எழுதியதுண்டு.

சே என்ற அடிச்சொல்லைப் பற்றிய இடுகையும் இங்கு உள்ளது. அதையும் நீங்கள் இன்னொரு முறை வாசித்துக்கொள்ளலாம்,.
http://sivamaalaa.blogspot.com/2015/10/blog-post_61.html (“ சே அடிச்சொல்” )

செய் என்ற சொல்லும் சே என்று திரியும்.
செய் > செய்வை > சேவை.
செய் என்னும் வினை சே என்று முழுச்சொற்களில் திரிதலென்பது இயல்பானது ஆகும்.  அறியார்க்குப் புதிதாகத் தோன்றும் இது வரும் ஓரிண்டு இடங்களைக் கண்டு அதுகொண்டு நமதறிவினை விரித்துக்கொள்வோம்.

செய் > செய்தி > சேதி.
செய் > செய்தரு (பழங்கால வினைச்சொல்)..
செய் > செய்தரு+ அம் = செய்தாரம் > சேதாரம்.
தரு+ அம் = தாரம். எப்படி என்று குதிக்கலாம் சிலர்.  ஒரு+ ஊர் என்பது ஓரூர் என்று திரிவது போன்றதே இது. உயிர் வருவிகுதி முதலில் வருவதால் தரு என்பது தார் என்று திரிகிறது.  அப்படி இல்லாமலும். சொற்பிறப்புக்காக தார் என்று திரிவதும் உளது.  தரு> தார்.  (வாழைத்தார்)  வாழை தருவது வாழைத்தார்.  பிள்ளைகள் பெற்றுத் தருபவள் என்ற பொருளில் தரு+ அம் = தாரம் எனவும் ஆகும். மொத்தத்தில் தாரம் என்பது தரு அம் என்பதுணர்க.

சேதாரம் என்பது சேதம் என்பதன் விரிவாகக் கருதப்படுதலும் உளது.   அங்ஙனம் ஆயின். அதன் அடிச்சொல் யாது:?

செது > செதுக்கு.
செது + அம் = சேதம்’
செது+ ஆரம் =  சேதாரம்,

இவற்றில் முதனிலையும் நீண்டு தொழிற்பெயராம் என்பது உணர்க.  செதுக்குகையில் “சேதம்” ஆனது என்று பொருள். இங்ஙனம் இருமாதிரியாக வரும். ( இருபிறப்பிச் சொல்). இவ்வாறாவது, ஆர்தல் – பொருந்துதல் என்னும் பொருட்டாம். முழுப்பொருள்:  செதுக்கிப் பொருந்துதலுக்கு உண்டாகும் இழப்பு என்பது. இதை விளக்க, வழிமாறிச் செல்லுதல் தேவையாகின்றது.



.




வியாழன், 17 ஆகஸ்ட், 2017

To appreciate and respect all religions

This Video of a Muslim Building a Temple Is ...

More than just religious tolerance.....

Emulate in your own way.


https://www.thequint.com/india/2017/08/15/this-video-of-a-muslim-building-a-temple-is-melting-our-hearts

Click:

https://www.thequint.com/india/2017/08/15/this-video-of-a-muslim-building-a-temple-is-melting-our-hearts


ஆனை புலி ஊருக்குள் வருதல்......தீர்வு!!



ஓர் உரையாடல்

:
தம்பி:    அண்ணே,  நம் ஊரில் இப்போது நடமாடவே
         அச்சமாய் இருக்கிறதே…..
அண்ணன்:  ஆமாம்  தம்பி.   என்ன செய்வது,  உடனே
         வேறே ஊருக்குப் போய்விடவா முடிகிறது ?  
         எதற்கும் பத்திரமாயிரு…….
தம்பி:    நம் காவல் துறைக்குத் தெரிவித்துவிட்டோம்.      
         ஆனால் யாரும்வந்து இந்தக் காட்டு 
         யானைகளைப் பிடிக்கமாட்டோம் 
                     என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். புலி
                    வந்து தொந்தரவு செய்து அது இப்போதுதான்
                    ஓய்ந்தது. அதற்குள் யானை வந்து
                    கரைச்சல் பண்ணுகிறது……

அண்ணன்:  அது,  காரணம் என்ன தெரியுமா?  
          காவல் துறையில  ஒன்றிரண்டு பேருக்குத்தான்
          யானை புலி பிடிக்கத்தெரியும். பாக்கிப்பேர்கள்
          எல்லாம் ஏட்டெழுத்துப் படித்தவர்கள். ஆளை 
          வேண்டுமானல் பிடிப்பார்கள்.  ஆனையைப் 
          பிடிக்கமாட்டார்கள். அதற்குக் காட்டிலாகா 
          அதிகாரியை வரவழைக்கவேண்டும். அவரெங்கே 
          போய்த் தொலைந்தாரோ தெரியாது.
அவர் வரும்வரை ஆனை இங்கேதான் இருக்கும்.


தம்பி:     நெருங்கிப் போகமுடியாத யானைகளாக

இருக்கின்றன…..அவர்கள்
வருவதற்குள் ஒரு மரஞ்ச்செடி கூட மிஞ்சாது…..காவல்துறைக்குள்ளேயே 
புலிப்பகுதி, ஆனைப்பகுதி என்று ஏற்படுத்திவிட்டால்
நமக்குத் தொல்லை இருக்காது….

செய்தி: தமிழ் நாட்டுச் சிற்றூரில் யானகள் புகுந்தன. 


cannot be justified.