வெள்ளி, 16 டிசம்பர், 2016

பிற + ஏம் + ஐ = பிரேமை.

தன்னைத் தானே பெரிதாக எண்ணிக்கொண்டு தன் நாட்களைக் கழிக்கும் ஓர் இளைஞன், இன்னோர் ஆன்மாவை நேசித்து அவ்வான்மாவுடனும் அது குடியிருக்கும் உடலுடனும் அன்பு பூண்டு ஒழுகும் நெறிதான் பிரேமை எனப்படுகிறது. அவ்வன்பினால் அவன் அவ்வான்மாவைக் காக்க முனைகிறான்.  ஏம் = பாதுகாத்தல். ஏமம் = பாதுகாத்தல். ஏமை என்பதும் அதுவே.  அம், ஐ என்பன விகுதிகள்.

பிற + ஏம் + ஐ = பிரேமை.

இதை முன் விளக்கியுள்ளோம்.  அழிந்துவிட்டபடியால் மீண்டும்
வெளியிட்டோம். இது அதனை உறுதிசெய்யும் வெளியீடு ஆகும்.

பிற என்ற சொல்லில் உள்ள ற, ர‍~வாக மாற்றப்பட்டது. இப்படி ஒரு
மாற்றத்தை நிகழ்த்திவிட்டாலே அதனை அடையாளம் கண்டுகொள்ள‌
இயல்பாக ஒழுகுவோனால் இயலாது!  சிந்தனைக் குறைவே காரணம்.

அடுத்தவீட்டான் எப்போதும்போல் வந்தால் அவன் யார் என்று எளிதில்
தெரிந்துகொள்ளலாம். வேடமிட்டுக்கொண்டு போனால் ஒருவேளை
தெரியாமல் போனாலும் போகலாம். அதுபோலத்தான்.


ஏமம் சேமம் ஆனகதை தொரியுமோ சாமி!

அகர வருக்கத் தொடக்கச் சொற்கள்  சகர  வருக்கத் தொடக்கமாக‌
மாறுகின்றன என்று சும்மாவா சொன்னோம் சாமியே.

எடுத்துக்காட்டுகள் நூற்றுக் கணக்கில் இருக்கலாம். பட்டியல் எமக்குத்
தேவையில்லை.

சந்நிதி சன்னிதி சன்னதி

சென்ற இரு நாட்கள் ஏதும் எழுதமுடியவில்லை. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு, நம் உலாவியும் ஓடவில்லை. எங்கோ பழுது ஏற்பட்டிருந்ததால் என்று நினைக்கிறேன்.

கோளாறு யாது என்று கண்டுகொள்வதில் நேரம் செலவாகிவிட்டது.

நிற்க,  இப்போது சன்னதி ‍ சன்னிதி என்ற சொல்வடிவங்களைப் பற்றித்
தெரிந்தின்புறுவோம்.

இரு சொற்களும் நாம் ஆலயங்களில் கேள்விப்படுவனவாகும்.

சன்னிதி என்பது அகர முதலாகத் தோன்றிப் பின் சகர முதலானது,

அ +  நிதி =  அந்நிதி > சந்நிதி > சன்னிதி.

அ = அங்கு, முன் இருப்பது.
அவை என்ற சொல்லும்  அகர முதலாக அமைந்து பின் சகர முதலானது
தான்.

நிதி என்பது:

நில் > நி. இது கடைக்குறை.

தி என்பது விகுதி.  நி = நிற்பது.

பெரியோர் அல்லது தெய்வச்சிலைகள் நிற்பிடம்.

தனித்தமிழில் இது  திருமுன் எனப்படும்,

இச்சொல்  பின் சன்னதி என்று திரிந்தது.

சந்நிதி  சன்னிதி  என்பன முதல் வடிவங்கள்.


வியாழன், 15 டிசம்பர், 2016

Valmiki Ramayana


Ramayana - The word `Sanskrit' occurs for the first time as referring to a language in the Ramayana : "In the latter [Ramayana] the term `samskrta' "formal, polished", is encountered, probably for the first time with reference to the language"
-- [ EB 22 `Langs', p. 616 ] It is to be noted that extant versions of the Ramayana date only to the centuries AD.
This paragraph was cited by author Shyam Rao writing on Sanskrit.
Valmiki was a Dalit and was the first great poet for Sanskrit..  He composed  the Ramayana.. He referred the language he was composing in as Sanskrit.  Previously the term was not in existence. A similar language that pre-existed was called Chandasa (  சந்த  அசை )  அதாவது சந்தங்களுக்கு  ஏற்ப  வாயசைப்பு ).
Valmiki was also a Tamil poet.  His poem exists in Puram.  Many of the names in Ramayana are of Tamil origin

Panini was a paNan  ( the minstrel caste )   also parayan and a great grammarian.


There are some bugs in this post.  We are looking into the problem