சனி, 23 ஏப்ரல், 2016

Perak River dry-up எல்நீனோ மாறாதோ


பேராக்கு  ஆறும்  சேறாகிக் கல்தெரிய
நீரோடும் நிலைமாறி நெஞ்சும் பதைத்ததே!

மீனோடு சந்தைபோம் மீனவ நண்பர்களும்
வானோடு இறைஞ்சிக் கூனாகி மலைந்திடுவர்.

இயங்கிப் படகுகள் இடிபட்டும் உடைபட்டும்
தயங்கிச் செல்வனவாம் தாழ்ந்திட்ட தண்ணீரே.

வெந்துயிர்கள் அழிய விடுவனோ எழில்ஞாலம்
தந்தருளிக் காக்கும் தன்னேரில் தலைவனுமே.

இந்த நிலைதொடரின் எப்படி வாழ்வரிவர்
நொந்து குடிகெடவோ  எல்நீனோ மாறாதோ

மாறியே இனிவருக மாரியும் நீருமின்னல்
தீரும் வழியே  தெளிநிலையே வந்திடுக.

தென்கிழக்கு நாடுகளில் தெண்ணீரும் முன்போல‌
உண்ணீராய் உயர் நீராய் விளங்கிடுக இனிமிகவே.


This is rewritten from a lost poem today. Editor error.
Will review/

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

poetry topic: DEATH OF WIFE.

வண்ணான்  ஆடை  துவைத்தல்  தப்புதல்  என்றும் சொல்லப்படும். ஆகவே வண்ணான் தப்பிப் பிழைக்கிறான் எனில் அதன் பொருள் தெளியக்கூடியதே.1

குற்றவாளி தப்பிவிட்டான்  என்று காவலர் கூறுவதுண்டு.  இதற்கு  "escaped" -- நேரான ஆங்கிலச்  சொல் .

பயனற்றுப் போவது,  பிறழ்வது,  காணாமற் போதல், விலகுவது ,   பிழை செய்வது,  தவறுவது,  விட்டுப்போவது,   இடர்  நீங்குதல் ,  இறப்பது  எனவும் பொருள் தரும் "தப்புதல் "  பலபொருள் ஒருசொல். இப்பொருள்கள் வரும் வாக்கியங்களைக்  குறிப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

தப்புதல் (இறத்தல்)  என்பது,  தபுதல் என்று இடைக்குறையும்  2.  இதில் ஒரு பகர ஒற்று ஒழிந்தது.   என்னில் > எனில்;  இல்லாது > இலாது  என்றெல்லாம் வருவன போலவே.

தாரம் என்பவள் கணவனுக்குத்  துணை தருபவள்;  பிள்ளைகள் தந்து குடும்பம் போற்றுபவள்.  தாரம்  : முதனிலை  திரி  தொழிற்பெயர்.

தபுதாரம் -   தாரம்  இறத்தல்.   இது குறித்த பாடல்.

இது தொல்காப்பியத்தில்  தபுதார நிலை எனப்பட்டது.

தபுதாரம் -  வினைத்தொகை.   தாரம் த(ப் )புதல்.

இது குறித்த பாடல் ; அதில் வரும் வரணனை .


1.  தமிழ்க் களஞ்சியம்  -   அறிஞர்  க. ப. மகிழ்நன்  .  
       ( "மகிழ்நன் பேசினார்;  அவரே சங்க இலக்கியம்; சங்க இலக்கியமே அவர்"  என்று  திரு வி க  அவர்களால் புகழப்பட்டவர்.    ) 
2   மறைமலையடிகள்.

இது  பிற அறிஞரால் விளக்கப்பட்டது.  அதனால் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

will edit,

Ind: விருந்தா வனமும் தேர்தல் களமும்

விருந்தா வனத்துப் பச்சையும் பூக்களும் விருந்தா  வனதேன்  ஈக்கண்களில்
அருந்தா மனத்தோ டங்குமிங்  காகவே பறந்தன பறந்தன தேடலிலே

பொருந்தும் ஒருபூ பூத்தவை தம்மிலே எந்தப் பூவதோ சொந்தமுற.

இருந்தது அங்குசென் றிணைந்ததும் ஒழிந்தது வருந்துதல் தேனீ அருந்தியதே.



தேர்தல் களமென்ன விருந்தா வனமோ
வேட்பா ளர்களும் பூக்க  ளாமோ
ஊர் வாழ் மக்களும் தேனீக்கள் தாமோ  
ஆர்தேன் பெறாவிடில்   நீர்விழியோ