செவ்வாய், 12 ஏப்ரல், 2016

விபுலம் what's it?

விபுலம் விபுலம் என்பது   ஒரு  கவின்குழைந்த  சொல்.

பார்க்கும்போதும்  கேட்கும் போதும்  தமிழா என்று எண்ணத் தோன்றுவது !

விரி என்பது தமிழ்ச்சொல்.

புலம்  என்பதும்  தமிழ்ச்சொல்.


விரி+ புலம் >  விரிபுலம்  >  ?

ரிகரத்தை  எடுத்துவிட்டால்  "விபுலம் !"

 தமிழ் வளர்த்த விபுலாநந்தரைத் தெரியுமா?  Swami VipulAnanthA!

இனிய பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். விபுலானந்த அடிகள்>

விரிபுலம் என்பது பூமியைக் குறித்தல் போலவே விபுலம் என்பதும் பூமியையும் குறிக்கும்.

பெருமை, விரிவு, அகலம் என்பது இந்த பிற்படைப்பின் இன்பொருள் .

தொடர்ந்து படிக்க:   http://sivamaalaa.blogspot.sg/2016/04/why-words-corrupt.html
why words corrupt?

கன்றில் ஓர் ஆ


இங்கிருந்து தொடர்கிறோம்.

தொண்டைமான்  அரசின் சிறப்பு :
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_91.html

கல்லாடனார் குறிக்கும் மரங்கள்
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_81.html

நிமித்தங்கள்
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_9.html

அத்தான் வருவாக !  என்றதோழி
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_8.html




கல்லாடனாரின் குறுந்தொகைப் பாடலைத் தொடர்ந்து சுவைப்போம்.
இப்போது அதன் இறுதி அடிகளுக்கு வந்துவிட்டோம்.

வண்தேர்த் தொண்டையர்  வழையம லடுக்கத்து
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.

இப்பாடல் தொண்டைமான்களின் ஆட்சியில் இருந்த வேங்கடத்தைக் குறித்தது என்று கண்டோம். இந்  நிலப்பகுதியையே தலைவன் கடந்து சென்றான் என்று கல்லாடனார் குறிக்கின்றார். இது மிகு வெப்பமான நிலப்பகுதி. அவன் கடக்குங்காலை ஒரு மரத்தடியில் ஓர் ஆ நின்றுகொண்டிருந்தது. அது ஒரு தனிப்பசு. அதற்குக் கன்று இல்லை. அது அம் மரத்து நிழலை விட்டுச் செல்ல இயலாமல் அங்கேயே நின்றுவிட்டது,  நிழல்தரு அடுத்த மரம் தொலைவில் உள்ளது. இடையில் வாட்டும் வெப்பத்தில் செல்ல ஆவுக்கு இயலாத நிலல். அந்தப் பாலை வெப்பமான நிலப்பகுதி என்று நேரடியாகக் கூறாமல் பாடல் நமக்குத் தெளிவுறுத்துறுகிறது.

அந்த ஆவைப் பார்த்துக்கொண்டுதான் அப் பகுதியைத் தலைவன் கடந்து சென்றான்  என்று பாடல் சொல்லவில்லை. ஆனால் அவன் பார்த்திருக்க வேண்டும். அதற்குக் கன்று இல்லாமல், தனித்துயர் உழந்து மரத்து நிழலில் நிற்பதானது, தலைவி இன்னும் ஒற்றை ஆவினைப்போல்தான் உள்ளாள் என்பதை அவனுக்குத் தெரிவித்து உறுத்தியிருக்குமே! வாழ்க்கையை வளம் செய்துகொள்ளப் பொருள் வேண்டிச் சென்றாலும் காலம் தாழ்த்தாமல் திரும்பிவிட வேண்டுமென்பதை அது அவனுக்குக் குறிப்பாலுணர்த்துவது ஆகும்,
அவள் தன் பெற்றோர் குடும்ப நிழலிலேயே இன்னும் நின்றுகொண்டிருக்கிறாள். அவளுக்கு வேறு போக்கில்லை. கவலையில் வாடிக்கொண்டிருக்கிறாள்.

அந்த ஓமை மரங்களின் அடி அவ்வளவு அழகுடையவை அல்ல.
அதுபோல, தலைவியில் குடும்பச் சூழலும் அத்துணை இனிதாக இருந்திடவில்லை.  ஆகவே புன் தாளும் ஒரு குறிப்பினையே உணர்த்துவதாம்.

பாலையைக் கடந்து சென்றவனும் தேவை இருந்ததனால்தானே
செல்றான், அவன் கடந்து சென்றான் என்பதை இத்தகு காட்சிகளுடன் தந்து கவலை வண்ணத்துடன் முடிக்கிறார்  சங்கப் புலவர் கல்லாடனார்.

ஒவ்வொரு புலவனும் தன் வாழ்நாளில் பல பாடியிருப்பான் எனினும் தொகை நூல்கள் மூலம்  நாம் சிலவே அறிந்து இன்புற முடிகிறது.  கிட்டாமல் ஒழிந்தவை  பல. பாதுகாக்கப் படாத பல உணர்ந்து துன்புறும் வேளையில்  கிடைத்தவற்றையாவது  போற்றிக்கொள்வோமாக.




திங்கள், 11 ஏப்ரல், 2016

தொண்டைமான்களின் அரசு சிறப்பு

அத்தான் வருவாக என்ற இடுகையின் தொடர்ச்சி.

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_8.html


தொண்டைமான்களின்  அரசின் சிறப்பை இப்பாடல் சுட்டுகிறது.
புற நானூறு போன்ற இலக்கியங்க்களில்தாம்  இத்தகு விடையத்தைக் காண
முடியும் என்பதில்லை. அகப்பொருட் பாடல்களிலும் இத்தகைய குறிப்புகள் கிடைக்கும்.  படிக்கும் நாம் விழிப்புடன் படித்துச் சுவைத்துக்கொள்ள
வேண்டும்,

குருகும் இருவிசும்பு இவரும் புதலும்
வரிவண்டு ஊத  வாய் நெகிழ்ந்தனவே!
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் !  வாழி தோழி பொருவார்
மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண்தேர்த் தொண்டையர்  வழையம லடுக்கத்து
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.

தொண்டைமான்கள் நல்ல போராளிகள். ஓயாது களம் கண்டு வெற்றிமேல் வெற்றி குவித்தவர்கள்.  அரசுக்குப் பணம் தேவை என்றால் வரி விதிக்கலாம்.
ஆனால் வரிகள் மிகுந்துவிட்டால்  குடிமக்களுக்குச் சுமை மிகுந்துவிடும் .
இத்தகைய சுமைகளைத் தணிக்கப் போரென்பது ஒரு முன்மையான வழியாகும் .ஆகவேதான் தொண்டைமான்கள் போலும் அரசர்  போர்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினர்.

யானையைக் கட்டித் தீனியைப் போட்டது போல என்பது தமிழ்
நாட்டின் உவமைத்  தொடர்களில்  ஒன்று.  படைகளில் பணி புரியும் யானைகளுக்கு எல்லாம் தீனி போட எவ்வளவு வேண்டும் ?  இந்தப் பாடல்  இதைக் குறிப்பால் உணர்த்துகிறது. தொண்டைமான்களின் யானைகள் யாவும் தோற்ற பகைவர்களின் விளைச்சலை  எடுத்துதான் உண்ணுகின்றன  என்கிறார் புலவர். இங்கு மண் என்றது மண்ணின் விளைச்சலை.

இந்த யானைகளுக்கும்  அண்ணல் யானைகள் என்று அடைமொழி
தரப்படுகிறது. போர்களில் வென்று வாகை சூடிப் பெருமை பெற்ற யானைகள் .தொண்டைமான்கள் போல் இவ் யானைகளும் விம்மிதம் அடைந்தவை.  ஆகவே  அண்ணல் யானைகள் என்ற அடைமொழி மிக்கப் பொருத்தம் ஆகும் .

தொண்டைமான்களின்  தேர்கள் யாவரும் கண்டு வியக்கும்   வண்மை காட்டுபவை. வண் தேர்  என்பது காண்க . அரசின் பொருள் வளம் காட்டும்  ஒப்பனை பல பொருந்தியவை.

வழை  அமல் அடுக்கம் என்பது  அவர்களின் ஏழு மலைகள் கொண்ட தொடரைக் காட்டுவது ஆகும்.  அது வேங்கட மலை ஆம். வெம்மையும் கடத்தற்கு அரியனவாயும்  திகழ்ந்தமையின்  அங்குள்ள பகுதிகள்  வேங்கடம் எனப் பெயர் பெற்றன.  இச்சொல் தொல்காப்பியப் பாயிரத்திலும் உளதாகும்.

இங்ஙனம்   தொண்டைமான்களும் சிறப்பிக்கப் படுகின்றனர்; அவர்களின் யானைப்படையும்  சிறப்பிக்கப் படுகிறது. எப்போதும் பகைவர் மண்ணின் உணவே உண்பன என்றால் அவை வெற்றிமேல் வெற்றி குவித்தவை என்பதாம்.  தம் நாட்டு உணவு வேண்டாதவை அவை.

என்னே புகழ்ச்சி!  என்னே உண்மை நவிற்சி !

Read more:

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_13.html

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_12.html

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_81.html

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_9.html