புதன், 23 மார்ச், 2016

தானமும் தவமும் தமிழரும்

வேள்வி செய்தல் (யாகம் ​)  -  தமிழர்  செய்யவில்லை என்பது உண்மையன்று. இறை வணக்கத்திற்கு வேள்வி செய்வது அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கவில்லை.  தானமும் தவமும் தமிழருக்குப் பிடித்தவை.  யாகம் பிடிக்காத காரணம் அது ஓர் உயிரைக் கொன்று இயற்றுவதாய்  இருந்தமைதான் . " அவி  சொரிந்து ஆயிரம் வேட்டலின் ....."  என்ற குறள் இதைக் காட்டுகிறது.    ஆனால் மழை இல்லாமல் போனால் தானமும் தவமும் இயற்ற முடியாவே என்று வள்ளுவர் கவலைப்படுவதாகவே  எமக்குத் தெரிகிறது  .  " வானம் வழங்கா தெனின் "  இவை தங்கா என்று வள்ளுவர் கூறுகிறார்,

தானம் என்ற சொல்  தா என்ற ஏவல் வினையடியே தோன்றியது.  இது பல மொழிகளிலும் பரவி விட்ட சொல்தான்

தா + இன் + ஆம்  =  தானம்  ஆகும்.

இன் என்பது உரிமை/ /  உடைமை  குறிக்கும் இடைச்சொல். 1.தருதற் குரியது ;-  2. தருதல் ஆகிய செய்கை;.

தருங்கால்  பிறர்க்குரிய தாவதே  தானம்.  இங்கு இன் மிக்கப் பொருத்தமாயுள்ளது.  உரிமை பிறர்க்கு மாறுவதைக் குறிப்பால் உணர்த்துகிறது. மிக்க ஆழ்ந்த பொருண்மை மிளிரச் சொல் உருவாக்கப் பட்டுள்ளது.

இன் என்பதில் இப்பொருளைக் காணார் பலர்.

எ-டு : உரிமை உடைமைப் பொருளில் இன்:

இந்தக் காய்ச்சல் ஒரு நோய் நுண்மத்தின் (virus )   வேலை என்று மருத்துவர் கூறுகிறார். 

சொல் அமைகையில் இது  தன்  தலையெழுத்தை  இழந்து  "ன்"  என்று மட்டும் நிற்கும்.  இல்லையென்றால்  "தாயினம் "   என்று போந்து வேறு சொல்லுடன் மயங்கிப்     பயன்படுத்துவோரைக் குழப்பும் . தானம் என்பதே சரியான அமைப்பு.

ஆங்கில dOnation வரை பரவி உலகச்  சேவை செய்யும் இத் தமிழ்ச்சொல்லை வாழ்த்துவோம்.

இன்னும் இதுபற்றி எழுதவேண்டும் என்று தோன்றினும் இத்துடன் அமைவோம்.  அடுத்துத் தவம்  எனற்பாலதான சொல்லை நாடுவோம். 

.

ஞாயிறு, 20 மார்ச், 2016

சாணக்கியனும் சாணாரும்


Continue reading from http://sivamaalaa.blogspot.sg/2016/03/chanakya-was-probably-tamil.html

சாணான் என்போன் கள்ளிறக்கும் ஒரு தொழிலுடையான். இவன் (chANakkiyaan )  இத்தொழிலுடையாரைச் சேர்ந்தவன் என்று கருதினாருமுண்டு. வேதவியாசன் மீனவப் புலவன் ; வால்மீகி வேட்டுவன்;  பாணினி பாணரினத்தான்; வள்ளுவன் வள்ளுவக் குலத்தோன்;  கம்பன் ஓதுவார் வழிவந்தோன் எனும் நெடுந்தொடரில்,  இத்திறத்தினரெல்லாம் பண்டை மேனிலையில் நின்றமையையே ஆய்வுகள் காட்டுகின்றன. சாணானாயிருந்து நூலாக்கியமையால்
சாண் ஆக்கியன் > சாணாக்கியன், சாணக்கியன் என வந்தது எனினுமாம். இன்று கீழ் நிலையர் பலர் முன் மேனிலையராய் இருந்தனர் என்பது  அறிஞர் M .  சீனிவாச ஐயங்காரும் கூறுவதாகும்.
சாணாக்குடி ( சாணார் குடி), சாணாக்கிக்கீரை  முதலான பதங்களை
நோக்கின்  சாணா+ ஆக்கியன்  என்பது பொருந்துகிறது.  ஆகாரங்களில் ("ஆ" ) இரண்டில் ஒன்று கெட்டுப் புணர்ந்து சொல் உருவாகும். பிரமத்தை உணர்ந்தவன் பிராமணன் என்பதால் இவன் பின் பிராமணன் ஆயினன்.

சாணா  ஆக்கியன் =  சாணாக்கியன் > சாணக்கியன் : சாணா(ர் )  வகுப்பு ஆசிரியன்  என்பதும்  ஆகும்..

சாணா +  ஆக்கி + யா என்று சங்கதத்தில் இது  மேற்கொள்ளப்பட்டது.  அன் ஆண்பால் விகுதி அங்கில்லை. அது தமிழுக்கே உரியது.  அது தமிழில் இலங்கும் காலை  சாணா  (அல்லது    சாண  ) + ஆக்கி+  அன்  என்று   யகர உடம்படு மெய்யும் இணைந்து சாணக்கியன்  என்று இறுதியில் முடியும்.

வேறு சொல் முடிபுகளை ஈண்டு துருவா தொழிவோம்.

இவனைத் "திரமிள "  இனத்தவன் (திராவிடன்)  என வடநூல் உரைக்கும். இதைப்  புறந்தள்ளக் காரணம் யாதுமில்லை.

---------------------------------------------------

Note:

சாண்+  நாக்கு+ இயன்=  சாணாக்கியன் >  சாணக்கியன்,
ஒரு சாண் நாக்கு உடையவன்;  என்றால்,  எல்லாவற்றிலும் இடையிற் புகுந்து நீளப் பேசுபவன் என்றும் பொருள்.  மற்றப் பொருள் தரவுகளை தொடர்புடைய ஏனை இடுகைகளில் காண்க.



சனி, 19 மார்ச், 2016

Chanakya was probably a Tamil.

சாணக்கியன் வடதிசைச்  சென்று பணிபுரிந்த 
தென்னாட்டுப் பிராமணன் என்ப.. சோழ நாட்டினன் 
என்றும்  சொல்லப்படுகிறது. இப்போது இவன்
பெயரை ஆராய்வோம்.
இவன் நுண்மாண் நுழைபுலம் உடையவன். 
எத்தகு நுண்ணிய பொருளாயினும்
அதில் உள் நுழைந்து அறிந்து வந்து விளக்கும் 
வல்லமையே  நுண்மாண் நுழைபுலம்
என்று தமிழில் சொல்லப்படும்.

 
ஐந்தடிக்கு மேல் வளர்ந்து நலமுடன் திகழ்ந்த அவன், 
எந்த விடயத்திலாவது புகுந்து உண்மை 
காணவிழைந்தால் ஒரு சாணாகக்  குறைந்து உள் 
நுழைந்து மறைந்திருக்கும் உண்மையைக் 
கண்டுபிடித்துவிடுவான் என்று மக்கள் நம்பினார். 
இந்த நம்பிக்கை தமிழ் மரபில் சொல்லப்படும்
நுண்மாண் நுழை திறனைப் படியொளிர்வதாக உள்ளது.  
சாண்  ஒரு சாணாக;
1அக்குதல் : குறைதல்.
இஅ  இஅன் என்பன சொல்லிறுதிகள்.

சாணக்கியன்   விடையத்தை அறிய சாணாகக்
 குறைகின்றவன்.

ஆகவே இது காரணப் பெயராகிறது. 
 இவனுக்கு வேறு பெயர்களும் உள 
-------------------------------------------------------------------------------------------------------------------

1அஃகுதல்  ‍  குறைதல். 


Some historians have claimed Chanakya to be a fiction
 and such a person never existed. Others said his alleged
 written output were by other  (several )  writers composing
 their material under that name. Also that events ascribed
 to him were allegedly too good to be true.