வியாழன், 25 பிப்ரவரி, 2016

கற்பனை : கற்பிக்கப்படும் பொய்மை

வி என்னும் பின்னொட்டுப் பெற்ற சொற்கள் சில உள்ளன. நம் நினைவுக்கு
வருபவை : கல்வி,  கேள்வி, வேள்வி,  கிளவி (சொல்).
அருவி, குருவி (குர்ர் என்பது ஒலிக்குறிப்பு),  முதலியவை.

இவற்றுள் கல்வி என்ற சொல்லுக்கு உரிய  அடிச்சொல் கல் ‍ கல்லுதல் என்னும் வினைச்சொல்.கல்லுதல் :  தோண்டுதல்.

கல்வியைப் பற்றிக் கூறியவிடத்து, வள்ளுவனாரும் : " தொட்டனைத் தூறும் மணற்கேணி"  என்று பாடினார். கல்வி ‍ தோண்ட ஊறும் மணற்கேணி அன்றோ?

கல்லுதல் என்ற சொல்லினின்று  பல சொற்கள் தோன்றின.

கற்றல்  ( கல் + தல் )
கற்பு.  அன்னை தந்தையரால் கற்பிக்கப்படும் ஒழுக்க நிலை..
கலை  ( கல் + ஐ )
கல் + ஆ  (  கலா )  நில்+ ஆ= நிலா போன்றது. பல்+ ஆ = பலா, பல சுளைகளை உடைய பழம்.

கற்பனை : கற்பிக்கப்படும் பொய்மை.  கல்+ பு + அன்+ ஐ.
விற்பனை படிப்பினை எனக் காண்க.

கல் என்னும் தமிழ் அடிச்சொல் பல மொழிகளிற் பரவிற்று.
கலா, கற்பனை முதலிய இனிய ஓசைச் சொற்கள் கவர்ந்துகொள்ளப்பட்டன.

கல்குலஸ், கல்குலேசன் முதலிய ஆங்கிலம் வரை சென்றன.

கல்குலுக்கிக் கணக்குப் பார்ப்பது தமிழர் திறம் என்று அறிவோம். அது கல்குலஸ் ஆயிற்று.

கால்சியம் என்ற சொல்வரலாறு யாது?

will edit.

புதன், 24 பிப்ரவரி, 2016

பொறுப்பு ஒப்படைக்க

ஒரு பழமொழிப் பாடலைப் படித்து மகிழ்வோம்.  பழமொழி என்பது நூலின் பெயர்.


உடைப்பெரும் செல்வத்து  உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி ===  நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்.

இப்பாடல் அடக்கமில்லாதவனைப் பற்றியது.  அடுத்த வீட்டான் உங்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்று நினைத்து அவன் அடக்கமில்லாதவன் என்று பேசுதல் கூடாது. இப்பாடல்  அத்தகைய  சூழ்நிலையைப் பற்றியதன்று.

அதிகாரத்தை வழங்கும் நிலையிலுள்ளோன், அதை இன்னொருவனிடம்  ஒப்படைக்கும் முன்னர், அதைப் பெறுவோன் எப்படிப் பட்டவனாய் இருக்கவேண்டும் என்பதை   இப்பாடல் தெளிவாக்குகிறது.

அவன் செல்வச் செருக்கு உடையவனாய் இருத்தல் ஆகாது.  அதாவது அவன் செல்வனாய்  இருக்கலாம்  ஆனால் செல்வச் செருக்கு உடையவனாய் இருத்தலாகாது ; இரண்டும் வெவ்வேறாம்,  தன் உயர்ந்த பெருமைக்கு ஏற்ப அவன் நடத்தையில் சிறந்தவனாய்  இருக்கவேண்டும். அல்லாதவன்மேல் அதிகாரத்தை வைத்துவிட்டால் அவன் ஆடத்தொடங்கிவிடுவான்,  அது குரங்கின் கைகளில் எரியும் கோலைக் கொடுத்ததற்கு ஒப்பாகிவிடும். எரிகோல் பிடித்த குரங்கு ஊரையே  அழித்துவிடும். இதை நன்கு ஆராய்ந்து உணர்ந்துதான் எந்தப் பொறுப்பையும்  ஒப்படைக்க வேண்டும்.

மக்களாட்சி முறையில் தேர்தலுக்கு விருப்பாளர்களாக (candidates)  நிற்க முன்வந்தோரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.  முன்வராதோரில் அதற்குத் தகுதியானவர் அருகிலேயே இருக்கலாம்;  அவர் முன்வரவில்லை என்றால் மக்களால் அவரைக் கொண்டுவந்து தேர்ந்தெடுப்பது  இயலாதா காரியம்.

இப்படி வழிகாட்டுகிறது  பழமொழி நானுறு. 

கோழை

இனி  கு >  கோ  திரிபினைச்  சற்று காண்போம்,

குவளை என்ற சொல்லுக்குப்   பேச்சில்  கோளை என்று நாவருகின்றது பேச்சில் மட்டுமோ?  எழுத்திலும் வந்துள்ளது.
,
குழப்பம் என்பதோ பேச்சில் கொழப்பம்  என்று வருவது மட்டுமோ,   கோழம்பம் என்றும் எழுத்தில் உள்ளது.  மற்றும்  -ப்ப -  என்ற  நடு  -ம்ப - என்றும் திரிந்துள்ளது.  இது இருமடித் திரிபு ஆகும்.

கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் சவத்துப் போகிறவனைக் கோழை என்கிறோம். இது ஒரு குழைவு ஆகும்.

குழை >  கோழை.

இதில் கு-கோ திரிபும் முதனிலை திரிதலும்  அடங்குகின்றன. குழை  என்பது முதனிலை திரியின் கூழை என்றே வரவேண்டும்;  மேலும் திரிந்து கோழை எனவருதனால்  இருமடித் திரிபாகிறது,

கூழை என்பது அறிவிற் குறைந்தோனைக் குறிக்கும்,