வியாழன், 4 செப்டம்பர், 2014

சில சுவையான திரிபுகளை....



இப்போது, சில சுவையான திரிபுகளைக் கவனிப்போம்.

வினை முற்றுக்களில் வரும் திரிபுகள். இவற்றில் "ற்று"  என்பது "ச்சு" ஆகிவிட்டது.

ஆயிற்று > ஆச்சு,
போயிற்று > போச்சு.

வினை எச்சங்களில் வரும் திரிபுகள்.  இவற்றில் "த்து" என்பது "ச்சு" ஆவது
காணலாம்.

தேய்த்து >  தேச்சு.
வாய்த்து >  வாச்சு.
ஏய்த்து > ஏச்சு.
காய்த்து > காய்ச்சு
அடித்து > அடிச்சு.
கடித்து  > கடிச்சு.

இவைபோன்ற திரிபுகள் மலையாள மொழியில் வினைமுற்றுக்களாய் வரும்.

சொல்லாய்வில் இவைபோலும் திரிபுகளைக் கவனிக்கவேண்டும்.

வீதியிலே நடக்கின்ற வேளை...

வீதியிலே நடக்கின்ற வேளை பார்த்து
விதிமுடிய நேர்ந்ததெனப் பேசும் வண்ணம்
சூதறியா நேரியர்கள் தம்மைக் கொல்லும்
சுடர்விளக்கின் உந்துகட்கோர் கட்டு வைக்கும்
தீதிலதாம் நெறியொன்றே இந் நாள் காறும்
தெரிந்தபெரு மனிதர்களும் கண்டார் இல்லை!
யாதுவழி உயிரிழப்பு குன்றச் செய்ய?
யாமறியோம் தேமருவும் மேலாம் வாழ்வில்.  

புதன், 3 செப்டம்பர், 2014

உளுந்தே இல்லாத தோசைபோட்டு

உளுந்தே இல்லாத தோசைபோட்டு
ஒருபயனும் இல்லாமல் விறகேபோல‌
விழுந்தே உண்கின்றார் வேலைபார்ப்போர்
வேறுவழி இல்லாமல் ஐயோபாவம்!

அரிசிமாவில் ஆட்டாவைக் கலந்துவிட்டார்.
அடிப்பிடிக்க மாட்டாதாம் அடித்துச்சொல்வார்.
வரிசையிலே நிற்கின்றார் அதனையுண்ண!
வந்த நாட்டில் தாயில்லை அதனாலன்றோ!

கட்டியான இட்டிலியோ கண்ணராவி
கருகிவீசும் பழஞ்சாம்பார் என்னசெய்ய!
விட்டகன்று நல்லுணவு தேடியுண்டால்
விதவிதமாய் நோய்களுமே வாராதையா.