யாசித்தல் என்னும் வினைச்சொல் தமிழில் வழங்கியுள்ளது. யாசித்தல் என்றால் பிச்சையாகப் பெறுதல்.
மிக்கப் பழங்காலத்தில் கடைகள் பல இருக்கவில்லை. பிச்சையாகப் பணத்தைப் பெற்றுக் கடையில் ஏதும் சாப்பிட வழியில்லை என்று தெரிகிறது. யார் வீட்டிலாவது பிச்சைப் பாத்திரத்துடன் நின்று இரந்து உண்பதுதான் இல்லார்க்கு வழியாக இருந்தது. நாம் அப்போது இல்லாவிட்டாலும், நுழைபுலத்தின் மூலம் அறிந்துகொள்கிறோம்.
ஆசு என்ற சொல் தமிழில் உள்ளது. இதற்குப் பற்றுக்கோடு என்று தமிழில் சொல்வர். ஒன்றுமில்லாதவர் யாரையாவது பின் தொடர்ந்து "பற்றிக்கொள்ளவேப்ட்ய்ம்". அதுதான் பற்றுக்கோடு. ஒருவனைச் பற்றிச்சென்று எதையாவது இரந்து பெறவ்ண்டும்.
ஆசு என்பது யாசு > யாசி என்று வினைச்சொல்லாகும். ஆனை என்பது யானை என்று வந்தது போலுமே இது. இன்னும் இதுபோல் திரிந்த சொற்களை எம் பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிட்டுக் கொள்ளவும்..\
இகரம் வந்து முடிந்த சொல்லான யாசி என்பதில் இவ் இகரம் வினையாக்க விகுதியாகும். ஆசு > யாசு> யாசு+ இ > யாசி > யாசித்தல்.
ஒருவனைப் பற்றிச் சென்று அவனிடமிருந்து வேண்டிய ஒன்றைப் பெறுதல் என்பது பொருள். இது தமிழ்ச்சொல்லிலிருந்து திரிபு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
உங்கள் அன்பான கவனத்திற்கு
YOUR ATTENTION PLEASE
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post..
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.